search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் கே.என்.பேட்டை அருகே  செம்மண் எடுக்கும் லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
    X

    கடலூர் கே.என். பேட்டை குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுப்பதை கண்டித்து லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தியபோது எடுத்தபடம்.

    கடலூர் கே.என்.பேட்டை அருகே செம்மண் எடுக்கும் லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

    • கடலூர் கே.என். பேட்டை குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுப்பதை கண்டித்து லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினார்கள்,
    • இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    விக்கிரவாண்டி முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் 4 வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை கடலூர் அருகே உள்ள கே.என்.பேட்டை வழியாக செல்கிறது. இதற்காக கே.என். பேட்டையில் உள்ள செம்மண் குவாரிகளிலிருந்து தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு அனுமதித்த அளவைவிட அந்தப் பகுதியில் இருந்து கூடுதலாக செம்மண் எடுக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து அவர்கள் குவாரி நிர்வாகிகளிடம் சென்று கேட்டபோது, அவர்கள் சரியான பதில் அளிக்காமல் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் திருவந்திபுரம் ஒன்றிய குழு துணை தலைவர் அய்யனார் தலைமையில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் அந்த மணல் குவாரிக்கு சென்றனர். அங்கு செம்மண் எடுத்த லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், இந்த செம்மண் குவாரியில் இருந்து அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் மண் எடுப்பதால் இந்த பகுதியின் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது மேலும், இவ்வாறு தொடர்ந்து மண் எடுப்பதால் மண்வளமும் பாதிக்கப்பட்டு இங்கு உள்ள ஏரிகள் துர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இங்கிருந்து செம்மண் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறினர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×