search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்கூர் கோவில் திருவிழா தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்
    X

    சீர்காழியில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

    நாங்கூர் கோவில் திருவிழா தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்

    • 12 சிவன் கோவில்களில் இருந்து சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமண கோலத்தில் காட்சி தரும் விழா.
    • இரு தரப்பும் இணைந்து சட்டம்- ஒழுங்கு பிரச்சனை இன்றி விழாவை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே திருநாங்கூர் மதங்கீஸ்வரர் சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் சுற்றியுள்ள 12 சிவபெருமான் கோவில்களில் இருந்து சிவபெருமான்கள் அம்பிகைகளுடன் ரிஷப வாகனத்தில் திருமணக் கோலத்தில் காட்சி தரும் விழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு விழா வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது.

    விழா நடத்திட நாங்கூர் கிராமத்தில் இரு தரப்பினர் அனுமதி கோரினர்.

    இதனால் விழாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக் கூடும் என்பதால் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியர் ரஜினி தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது.

    கோவில் செயல் அலுவலர் முருகன், திருவெண்காடு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினர் இடையே காவல்துறை முன்னிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை தொடர்ந்தது.

    அப்போது இரு தரப்பும் இணைந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் இன்றி விழாவினை நடத்திட ஒத்துழைப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×