search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nagapattinam"

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள நாங்கூர் வடக்கு அக்ரஹார தெருவை சேர்ந்தவர் அண்ணா சீனிவாசன் (வயது 45). இவர் சீர்காழியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அண்ணா சீனிவாசன், தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.

    இன்று காலை அண்ணா சீனிவாசன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சென்னையில் இருந்த ஆசிரியர் அண்ணா சீனிவாசனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் இதுபற்றி திருவெண்காடு போலீசுக்கு தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அண்ணா சீனிவாசன் வீட்டில் பீரோவில் இருந்த ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது.

    நள்ளிரவில் மர்ம கும்பல் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

    மேலும் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போய் உள்ளதா? என தெரியவில்லை. சென்னையில் இருந்து அண்ணா சீனிவாசன் வந்த பிறகு கொள்ளை போன நகை- பணம் குறித்த விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    ஆசிரியர் வீட்டில் கொள்ளை நடந்ச சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாகையில் நாளை விவசாயிகள் கடலில் மூழ்கி தற்கொலை செய்யும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். #CauveryIssue #TNFarmers #Protest
    கீழ்வேளூர்:

    நாகையில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் தனபாலன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கும் பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. கடந்த 2016-2017-ம் ஆண்டு வறட்சியால் கடைமடை பகுதியில் முற்றிலும் விவசாயம் பாதிக்கப்பட்டது. பயிர்கள் கருகியதால் விவசாயிகள் மன உளைச்சலில் உயிரிழந்தனர்.

    2016-2017-ம் ஆண்டு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதில் ரூ.160 கோடிக்கு மேல் பாக்கிஉள்ளது. காவிரி நீர் கடைமடை வரை வந்து சேராததால் கதிர் வரும் பருவத்தில் பயிர்கள் கருகியது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டது. 2017-2018-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்.


    டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் வாய்க்கால், குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இது அரசின் மெத்தன போக்கை காட்டுகிறது.

    எனவே, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்தும் நாளை (செவ்வாய்க்கிழமை) நாகையில் கடலில் மூழ்கி தற்கொலை செய்யும் போராட்டம் நடத்தப்படும். அதன்படி நாளை நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று நாகை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கிறோம். பின்னர் அங்கிருந்து நாகை கடலுக்கு சென்று கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #CauveryIssue #TNFarmers #Protest
    வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்று மயிலாடுதுறையில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #Tamilisaisoundararajan
    மயிலாடுதுறை:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தராஜன் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகாவில் பா.ஜனதா கட்சியின் வெற்றி உறுதி. தமிழகத்தில் பா.ஜனதா கட்சி கிளை அளவில் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளை அமைத்து வலுப்படுத்தி வருகிறோம்.

    கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு விரைவில் காவிரி நீர் கிடைக்கும். நெல்லை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற போலீஸ்காரர் ஜெகதீசன் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். மதுக்கடையை மூடவலியுறுத்தி மாணவர் தினேஷ் என்பவர் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். மதுக்கடை விவகாரத்தில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? சாராய ஆலைகள் மூடப்பட வேண்டும். நேர்மையான அரசை தான் மக்கள் விரும்புகிறார்கள். கேரளாவில், ‘நீட்’ தேர்வு எழுதிய ஒரு மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு, அந்த மாநில போலீசார் பதில் சொல்ல வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

    ‘நீட்’ தேர்வு மூலம் கடைக்கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ சீட், மருத்துவ கல்வி கிடைக்கும். 24 ஆயிரம் மாணவ-மாணவிகள் தமிழில் ‘நீட்’ தேர்வு எழுத மத்திய அரசு ஏற்பாடு செய்தது வரவேற்கக் கூடியது. இதன் மூலம் மாணவர்கள் சுலபமாக தேர்வு எழுத முடிந்தது என்று கூறி உள்ளனர்.

    சமூக வலைதளங்கள் பொதுமக்களின் களமாகவும், தளமாகவும் உள்ளது. எனவே, சமூக வலைதளங்களின் பதிவுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். அமைச்சர் செல்லூர் ராஜூ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மற்றும் வயதானவர்களின் மனம் புண்படாமல் பேச வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #Tamilisaisoundararajan
    காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தில் நீதி கிடைக்காது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
    கீழ்வேளூர்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    நாகை பஸ் நிலையத்தில் வந்த வைகோ அங்கு பேசியதாவது:-

    தமிழக மாணவர்களை வெளி மாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுத செய்த அநீதி இதுவரை எந்த காலத்திலும் நடைபெற்றது இல்லை.

    உச்சநீதிமன்றத்தில் வருகிற 14-ந்தேதி காவிரி பிரச்சனை தொடர்பான வழக்கில் விசாரணை நடைபெற உள்ளது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்துக்கு நீதி கிடைக்காது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது.

    காவிரி நீர் மறுக்கப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும். காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழக மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழகம் கிளர்ச்சி களமாக மாறாத வரை காவிரி பிரச்சனையில் தமிழகத்துக்கு நீதி கிடைக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்றும் பூமிக்கும், ஆகாயத்தக்கும் இடையே தான் வெற்றிடம் உள்ளது என்றும் ரஜினிகாந்த்துக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் கிண்டலாக பதில் அளித்துள்ளார். #TNPolitical #TNMinister #OSManiyan
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பொறையாறு காட்டுச்சேரி ஊராட்சி தேவசேனா கிராமத்தில் புதிய பாலம் கட்டுவதற்கு நடந்த பூமி பூஜையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 100 சதவீத விவசாயிகள் காப்பீட்டு தொகை பெற்று உள்ளனர். ஆனால் நாகை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு அலுவலக குளறுபடி காரணமாக 50 சதவீத விவசாயிகள் தான் பயிர் காப்பீட்டு தொகை பெற்று உள்ளனர். இதற்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனம் தான் காரணம்.

    தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை நிரப்பப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவர் கூறியது போல தமிழக அரசியலில் எந்த வெற்றிடமும் இல்லை.


    பூமிக்கும் ஆகாயத்துக்கும் இடையே 37 ஆயிரம் அடி தூரம் வெற்றிடம் உள்ளது. அதைத்தான் ரஜினி குறிப்பிட்டு இருப்பார்.

    டெல்டா மாவட்டங்களில் தற்போது நிலத்தடி நீரை கொண்டு குறுவை சாகுபடி தொடங்கி உள்ளது. நாகை மாவட்டத்திலும் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுப்பட்டுள்ளனர். கர்நாடக அரசு 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதால் ஜூன் 12-ந்தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை.

    தமிழகத்தில் நீட்தேர்வால் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக 2 பெற்றோர் இறந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNPolitical #TNMinister #OSManiyan
    ×