search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murugan Temple"

    • சென்னை மயிலாப்பூர், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெற்குப் பிராகாரத்தில் சிங்காரவேலர் சந்நிதி உள்ளது.
    • இருபுறமும் ஸ்ரீவள்ளி தெய்வானை தேவியர் உள்ளனர்.

    சென்னை மயிலாப்பூர், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெற்குப் பிராகாரத்தில் சிங்காரவேலர் சந்நிதி உள்ளது.

    ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில், மேற்கு நோக்கி சிங்காரவேலர் காட்சி தருகிறார்.

    இருபுறமும் ஸ்ரீவள்ளி தெய்வானை தேவியர் உள்ளனர்.

    செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சஷ்டி, கிருத்திகை மற்றும் தைப்பூச தினங்களிலும்

    மயிலை சிங்காரவேலருக்கு நெய் தீபமேற்றி வழிபட, சகல பிரச்சினைகளும் காணாமல் போகும்.

    ஆண்டார்குப்பம்

    சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச்சாலை வழியாகபொன்னேரி செல்லும் வழியில் ஆண்டார் குப்பம் தலம் அமைந்துள்ளது.

    ஆதியில் ஆண்டிகள் நிறைந்த அவர்கள் வழிபட்ட தலமாதலாலும் ஆண்டவர் குப்பம் என்றும், இந்தப் பெயரே மருவி ஆண்டார்குப்பம் என்றும் வழங்கப்படுகிறது.

    இங்கே காலையில் பாலனாக, நண்பகலில் வாலிபனாக, மாலையில் வயோதிகனாக அருள்கிறார் முருகன்.

    "பிரம்மதேவரை சிறையில் அடைத்து, அவரது அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

    எனவே முருகன் தன் பக்தர்களுக்கும் அதிகாரம் மிக்க பதவிகள் கிடைக்க அருள்வதில் வள்ளல்" என்கிறார்கள்.

    • திருத்தணி முருகன் கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது.
    • தணிந்து அமர்ந்த தலம் ஆதலின் திருத்தணிகை எனப் பெயர் அமைந்தது.

    திருத்தணி முருகன் கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது.

    இது தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ளது.

    முருகப் பெருமான் தேர்களின் துயரம் நீங்கும்பொருட்டு சூரபது மனுடன் செய்த பெரும் போரும்,

    வள்ளியம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறு போரும் முடிந்து,

    தணிந்து அமர்ந்த தலம் ஆதலின் திருத்தணிகை எனப் பெயர் அமைந்தது.

    தேவர்களின் அச்சம் தணிந்த இடம், முனியவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம்,

    அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடம் ஆதலாலும்,

    இதற்கு தணிகை என்று பெயர் அமைந்தது.

    • திருபோரூரானது பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது.
    • திருப்போரூர் கந்தசாமியை வழிபட, சகல காரியங்களும் நல்லபடியாக நடைபெறும்.

    திருப்போரூா் கந்தசுவாமி கோவில் தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அமைந்த முருகன் கோவில் ஆகும்.

    இக்கோவில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது.

    திருபோரூரானது பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது.

    திருப்போரூா் கந்தசாமி கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

    அகத்திய மாமுனிவர் ஒருமுறை, "போகத்தையும் முக்தியையும் அளித்து, கந்தன் குருமூர்த்தியாய் உபதேசிக்கும் தலம் எது?"

    என்று கேட்டார்., "சர்வ பாவங்களையும் போக்கும் அறுபத்து நான்கு தலங்களில் ஆறு தலங்கள் நமக்குரியவை.

    அவற்றிலும் மிக உகந்தது யுத்தபுரி (திருப்போரூர்)" என்று கந்தப் பெருமானே போற்றிய திருத்தலம் திருப்போரூர்.

    சிதம்பர ஸ்வாமிகள் அருள் பெற்ற தலமும் கூட!

    திருப்போரூர் கந்தசாமியை வழிபட, சகல காரியங்களும் நல்லபடியாக நடைபெறும்.

    • தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.ஆறுமுகம் இல்ல திருமண விழா நடந்தது.
    • தொழிலதிபர் மனோகரன், சேர்மன் கே.டி.பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நடந்தது.

    ராமநாதபுரம்

    திருச்சி மாவட்டம், கீரம்பூர் எஸ்.பன்னீர்-சண்முகவள்ளி ஆகியோர் மகன் சிங்கப்பூரில் வசிக்கும் டி.எம்.இ பட்டதாரி

    ப.கர்ணமுருகனுக்கும் ராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் வடக்கு யாதவர் தெருவில் வசித்து வரும் தி.மு.க ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய விவசாய அணி துணைச் செயலாளர் எம்.பி.ஆறுமுகம், தி.மு.க. ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய துணைச் செய லாளர் ஆ.மேனகா தம்பதி யினரின் மகள் பி.எஸ்.சி பட்டதாரி ஆ.மீனா (எ) ஐஸ்ஸிற்கும் பெரியோர்க ளால் திருமணம் நிச்ச யிக்கப்பட்டு இருந்தது.

    இவர்களது திருமணம் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் இன்று காலை நடைபெற்றது. இத்திருமணத்திற்கு ராம நாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ராமநாதபுரம் ஒன்றிய பெருந்தலைவ ருமான கே.டி.பிரபாகரன், தமிழ்நாடு யாதவ மகாசபை பொதுச்செயலாளரும், தொழிலதிபருமான வேலு மனோகரன் ஆகியோர் தலைமையேற்று நடத்தி வைத்தனர்.

    ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ராஜவேணி பார்த்தசாரதி,உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள், தொண் டர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,பேராவூர் வடக்கு யாதவர் தெரு முதியோர் சங்கம்,மாவீரன் அழகு முத்துக்கோன் இளை ஞர் சங்கத்தைச் சேர்ந்த வர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    • பழமுதிர்சோலை முருகன் கோவிலில் நாளை அ.தி.மு.க.வினர் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெறும்.
    • அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அருகில் கூறியிருப்பதாவது-

    மதுரை வளையங்குளத் தில் கடந்த 20-ந்தேதி அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தமிழகத்தில் ஆட்சி அரியணையில் ஏறுவதற்கும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை அழகர் கோவில் உள்ள பழமுதிர் சோலை கோவிலில் நாளை (29-ந்தேதி) மாலை 4 மணி அளவில் தங்கத் தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

    இந்த தங்க தேர் இழுக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவ நாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், கே.டி. ராஜேந்திர பாலாஜி, அமைப்புச் செயலாளர் ஜக்கையன், சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் ராஜ் சத்யன் மற்றும் முன்னாள், இந்நாள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகி கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வழக்கமாக தீர்த்தம் கொண்டு செல்லும் காளை மாட்டுடன் புதியதாக வளர்க்கப்பட்ட காளை மாட்டினை பயிற்சிக்காக ஓட்டி சென்றனர்.
    • புதிய காளை மாடு பயிற்சி பெற்ற காளை மாடு போல் வெகு எளிதாக படி வழியில் ஏறியது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலுக்கு மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்த கிணற்றில் இருந்து காலை 8 மணி பூஜைக்கு பொதி காளைகள் மூலம் 1,320 படிவழியாக தீர்த்த குடங்கள் கொண்டு செல்வது பல வருடங்களாக தொற்று தொட்டு இருந்து வரும் வழக்கம்.

    இந்த அதிசயம் 100 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. மலை அடிவாரத்தில் உள்ள இடுபன் கோவிலுக்கு பூஜை செய்யும் குருக்கள் வந்து காலை 7.20 மணிக்கு தீர்த்த கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து பொதி காளை மீதுள்ள மூங்கில் கூடையில் வைத்துவிடுவர். மலை கோவிலுக்கு படி வழியாக கோவில் பணியாளர்கள் காளை மாட்டினை ஓட்டி செல்வர்.

    இந்த பணிக்காக தனியாக கோசலையில் 3 பொதிகாளைகள் பாராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதில் ஒரு மாடு வயது ஆகிவிட்டதால் படி வழியாக திருமஞ்சன தீர்த்த குடம் கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறது. இதற்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பக்தர் ஒருவர் முருகனுக்கு தானமாக கொடுத்த பொதி காளை மாடு சிறப்பாக பராமரிக்கபட்டு வந்தது.

    அந்த காளையினை கால்நடை உதவி மருத்துவர் மூலம் கடந்த 3 மாதங்களாக சிறப்பான உணவுகள் கொடுத்து பராமரித்து வந்த பணியாளர்கள் இன்று, வழக்கமாக தீர்த்தம் கொண்டு செல்லும் காளை மாட்டுடன் புதியதாக வளர்க்கப்பட்ட காளை மாட்டினை பயிற்சிக்காக ஓட்டி சென்றனர்.

    வழக்கமாக புதிய மாட்டினை படி வழியாக கொண்டு சென்றால் மிரண்டு கொள்ளும், படியில் ஏறாது. ஆனால் இந்த காளை சிறப்பாக இன்று வந்து சென்றது.

    இனி பயிற்சிக்காக தினமும் காலையில் மாலை, சந்தன பொட்டு, புதிய சலங்கை அணிவித்து பூஜை செய்து தீர்தகுடம் வைக்காமல் அதை பழக்கப்படுத்த பிடித்து செல்வர்.

    புதிய காளை மாடு பயிற்சி பெற்ற காளை மாடு போல் வெகு எளிதாக படி வழியில் ஏறியது. இதை காலை தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் பார்த்து மெய்சிலிர்தனர். காளை சில இடங்களில் மட்டும் இரண்டு இரண்டு படியாக தாண்டி சென்றது. 3 மாதத்தில் நன்கு பயிற்சி பெரும் என மாடு பராமரிக்கும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

    • 18 வகை திரவியங்களால் முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
    • ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பல்லடம்:

    பல்லடம் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதன்படி பல்லடம் காந்தி ரோடு, தண்டாயுதபாணி கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜையும் வழிபாடும் நடைபெற்றது. இதில் சந்தனம்,பால், தயிர், தேன், உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். இதேபோல பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில்,பொன்காளியம்மன் கோவில், மாதப்பூர் முத்துக்குமார சுவாமி மலை கோவில், உள்ளிட்ட கோவில்களில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

    • தங்க கவசம், வைர கிரீடம் பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
    • பக்தர்கள் பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    திருவள்ளூர்:

    ஆடிக்கிருத்திகை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் முருகன் கோவில்களில் குவிந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது. இதை யொட்டி இன்று அதிகாலையே கோவில் நடை திறக்கப்பட்டு முருகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் தங்க கவசம், வைர கிரீடம் பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார். இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநி லங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து இருந்தனர்.

    பக்தர்கள் பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    பக்தர்கள் அதிக அளவு குவிந்ததால் மலைக்கோவில் முழுவதும் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு இன்று மாலை, முதல் நாள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து நாளையும், நாளை மறுநாளும் தொடர்ந்து தெப்பஉற்சவம் நடைபெற உள்ளது. 3 நாட்கள் தெப்ப உற்சவத்தில் முருகர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதில் திரளான பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதியில் இருந்து 240 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் அரக்கோணம்-திருத்தணி இடையே சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகிறது. 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், பாகாசாலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி ஆறுமுகசாமி கோவில் உள்ளிட்ட முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா விமரிசையாக நடைபெற்றது.

    சிறுவாபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பால்குடம், பால் காவடி, பன்னீர் காவடியுடன் பக்தி கோஷத்துடன் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலுக்கு வந்தனர். சிறப்பு வழிபாட்டில் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட குழு உறுப்பினர் டி.லட்சுமி நாராயணன் பங்கேற்றார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர். பக்தர்கள் கூட்டத்தால் சிறுவாபுரி முருகன் கோவில் வளாகம் முழுவதும் நிரம்பி காணப்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பொன்னேரி அடுத்த பெரும்பேடு பகுதியில் உள்ள முத்துக்குமரன்சுவாமி கோவிலில் ஊஞ்சல் சேவை, சிறப்பு பூஜை, அன்னதானம், சாமி ஊர்வலம் நடை பெற்றது.

    சென்னை, வடபழனி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 3 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு பள்ளியெழுச்சி பூஜைகள் நடந்தது. அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12 மணி வரை சந்தன காப்பு அலங்காரம், பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை 5மணி முதல் அபிஷேகம் மற்றும் புஷ்ப அங்கி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

    அடிக்கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய கோவில் முன்பு குவிந்தனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும் "கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா" என்று பக்தி கோஷத்துடன் முருகனை தரிசனம் செய்தனர். ஏராளமானோர் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    வெயிலின் தாக்கமின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் வரிசையில் காத்து நின்று செல்லும் வழி முழுவதும் 'அரேபியன் டென்ட்' அமைக்கப்பட்டு உள்ளது .மேலும் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், கை குழந்தையுடன் வருபவர்களுக்கு சிறப்பு பாதை அமைக்கப்பட்டு இருந்தன. அதேபோல் 3 இடங்களில் குடி தண்ணீர் பந்தல், தற்காலிக கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. வாகனம் நிறுத்து வதற்கு தனி இடமும் ஒதுக்கீடு செய்து இருந்தனர்.

    இன்று இரவு வள்ளி தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் மாட வீதி புறப்பாடு நடக்கிறது. இரவு 11மணி வரை வடபழனி முருகனை தரிசிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரகோட்டம் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உற்சவர் முருகன், வள்ளி-தெய்வானையுடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வல்லக்கோட்டை முருகன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், வாலாஜாபாத் அருகே உள்ள இளைஞனார் வேலூர் முருகன் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் குவிந்து இருந்தனர். ஏராளமான பக்தர்கள் பால் காவடி, புஷ்பக் காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 

    • முருகன் கோவிலில் வெள்ளி வேல் திருட்டுபோனது.
    • கிராம மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர் கோவில் சாலையில் உள்ள கிடாரிப்பட்டியில் வெள்ளிமலையாண்டி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பழமை வாய்ந்த 5 அடி உயர வெள்ளி வேல் பிரதிஷ்டை செய்து கிராம மக்கள் பாரம்பரியமாக வழிபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக கோவிலில் கட்டிட பராம ரிப்பு பணிகள் நடந்து வந்தன. இதன் காரணமாக வெள்ளிவேல் அங்குள்ள மண்டபத்தில் தகரத்தினால் மூடப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப் பட்டு இருந்தது. இந்த நிலையில் சம்பவத் தன்று இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பழமை வாய்ந்த வெள்ளி வேலை திருடிக் கொண்டு தப்பினர். இதனால் கோவில் நிர்வாகி கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து மேலவளவு போலீசில் புகார் செய்யப் பட்டது. சம்பவ இடம் வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களின் கைரேகைகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். வெள்ளி வேல் திருட்டு தொடர்பாக மர்ம நபர்க ளை போலீசார் தேடி வருகின்றனர். வெள்ளி மலையாண்டி முருகன் கோவிலில் பாரம்பரியமிக்க வெள்ளி வேல் திருட்டு போய் இருப்பது கிராம மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்த கோவிலின் தல வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.
    • சிக்கல் சிங்காரவேலவரை தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிடும் என்பது ஐதீகம்.

    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் எனும் ஊரில் ஸ்ரீவேல் நெடுங்கண்ணி அம்மன் சமேத ஸ்ரீநவநீதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 83- வது தலமாகும். 72 மாடக்கோவில்களில் ஒன்று மேலும், மாமன்னன் கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட 72 மாடக்கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலின் ராஜகோபுரம் சுமார் 80 அடி உயரத்தில் 7 நிலைகளை கொண்டுள்ளது.

    இங்கு சிங்காரவேலவர் (முருகன்) தனி சன்னதியிலும், கோமளவல்லி தாயார் சமேத ஸ்ரீகோலவாமன பெருமாள் தனிக்கோவில் கொண்டும் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். குழந்தைவரம் அருள்பவராக வீற்றிருக்கிறார். இங்கு முருகப்பெருமான் அம்மை, அப்பருக்கு நடுவில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அதனால், இங்கு சிங்காரவேலவர் குழந்தைவரம் அருள்பவராக வீற்றிருக்கிறார்.

    தலவிருட்சம் குடமல்லிகை. தீர்த்தம் அமிர்த தடாகம் என்றழைக்கப்படும் க்ஷீரபுஷ்குரணி (பாற்குளம்).ஸ்ரீகோலவாமனப் பெருமாள் நீராடி இத்தல இறைவனை வழிபட்ட தீர்த்தம் கயாதீர்த்தம், லட்சுமிதீர்த்தம் ஆகும். இதுபோல் சைவமும் ,வைணவமும் இணைந்த கோவில்கள் தமிழகத்தில் சில மட்டுமே உள்ளன. இக்கோவிலை பற்றி திருஞானசம்பந்தர் "மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ் திடங்கொள்

    மாமறையோரவர் மல்கிய சிக்கலுள் விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப் பெருமானடி மேவிய அடைந்துவா மும்மடி யாரவர் அல்லல் அறுப்பரே" என தேவாரத்தில் பாடியுள்ளார். மேலும், இத்தல முருகனை பற்றி அருணகிரிநாதர் திருப்புகழில் 2 பாடல்கள் பாடியுள்ளார்.

    கோவிலின் தல வரலாறு

    இந்த கோவிலின் தல வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. விண்ணுலகத்தில் இருக்க கூடிய காமதேனு பசு ஒருமுறை பஞ்சம் காரணமாக மாமிசம் உண்டுவிட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சிவபெருமான் அந்த பசுவிற்கு சாபம் வழங்கினார். சாபத்தினால் மிகவும் கவலையுற்ற காமதேனு, இறைவனிடம் இறைஞ்சி சாப விமோசனம் கோரினார். மனம் இறங்கிய சிவபெருமான் பூலோகத்தில் மல்லிகை வனம் உண்டு அங்குள்ள தலத்தில் நீராடி அங்குள்ள இறைவனை வணங்கினால் சாபம் நீங்கும் என அருளினார். அதன்படியே இன்றைய சிங்காரவேலவர் கோவில் அமையப்பெற்றுள்ள இடத்தில் உள்ள குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றார் காமதேனு.

    அதன் பொருட்டு காமதேனு பசுவின் மடியில் பெருகிய பால் பாற்குளத்தை உருவாக்கியது. அதுவே இன்றும் புனிதகுளமாக கருதப்படுகிறது. வசிஸ்ட மாமுனி, அந்த பாலில் இருந்து கிடைத்த வெண்ணையை கொண்டு அங்கேயே சிவலிங்கம் வடித்து வழிபட்டார். தன்னுடைய பூஜை முடிந்த பின்பாக அந்த சிவலிங்கத்தை அவர் எடுக்க முற்பட்ட போது அது சிக்கி கொண்டு வர மறுத்தது அதன் பொருட்டே இந்த ஊருக்கு சிக்கல் என பெயர் வந்தது என்ற நம்பிக்கையும் உள்ளது.

    சிக்கல் சிங்காரவேலவரை தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிடும் என்பது ஐதீகம்.

    கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்கள்

    சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பிரமோற்சவ விழாவும், ஐப்பசி மாதத்தில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவும், கார்த்திகை மாதத்தில் நடைபெறும் திருக்கார்த்திகை விழாவும் மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். இக்கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் நடைபெறும். இங்கு வேண்டிய பிரார்த்தனைகள் நிறைவேறியதும், வெண்ணெய்நாதருக்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் உச்சிகால பூஜையின் போது வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    64 சக்தி பீடங்களில் ஒன்று

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சிக்கல் சிங்காரவேலவர் கோவில் அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் அன்னை உமையவள் முருகப்பெருமானுக்கு சூரனை வதம் செய்ய சக்தி எனும் வேல் வழங்கியதால் வேல்நெடுங்கண்ணி எனும் சக்தியாயதாக்ஷியாக அருள்பாலிக்கிறாள். இங்கு மரகதலிங்கம் (மரகதவிடங்கர்) உள்ளது கூடுதல் சிறப்பாகும்.

    தரிசன நேரம்: காலை 6 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படும். தொடர்ந்து, மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    கோவில் அமைவிடம்

    இக்கோவிலுக்கு, வந்து தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினம் வந்தடைந்து, அங்கிருந்து நகர பஸ்களில் ஏறி 5 கி.மீ தூரம் உள்ள சிக்கல் என்ற ஊரில் இறங்கி கோவிலை வந்தடையலாம்.

    அல்லது, திருவாரூர் வந்தடைந்து அங்கிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ள சிக்கல் வந்து இறங்கி சாமி தரிசனம் செய்யலாம்.

    • கோவிலுக்கு செல்லும் சாலை பழுதடைந்து காணப்பட்டது.
    • வரும் 19-ந் தேதி முதல் சாலை சீரமைக்கும் பணிகள் முடியும் வரை மலைப்பாதையில் அனுமதி இல்லை.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்குமண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் நாட்டில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. இந்த நிலையில் கடந்த பல வருடங்களாக கோவிலுக்கு செல்லும் சாலை பழுதடைந்து காணப்பட்டது. இதனால் மலைக் கோவிலுக்கு வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதையடுத்து 2 கி.மீ. தூரத்திற்கு இந்த மலைப்பாதையை புதுப்பிக்கும் பணியை சென்னையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து, இதற்கான பூமி பூஜை சிவன்மலை முருகன் கோவில் அடிவா–ரத்–தில் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து சாலை சீரமைக்கும் பணிகள் சில நாட்கள் நடைபெற்றது. பின்னர் தை மாதத்தில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த சமயத்தில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால் சாலையை சீரமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் தற்போது மீண்டும் சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து கோவில் உதவி ஆணையர் எம்.அன்னக்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :- சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மலைப்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் வரும் 19-ந் தேதி முதல் சாலை சீரமைக்கும் பணிகள் முடியும் வரை மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் படி வழியை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுக்கிர தோஷ நிவர்த்திக்காக இங்கு சென்று வழிபடலாம்.
    • முருகன் கல்யாண வரம் தரும் கந்தனாக இந்தக் கோவிலில் குடிகொண்டுள்ளார்.

    திருவாரூர் -கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டையில் ஸ்ரீஅபினாம்பிகை உடனுறை ஸ்ரீஅபிமுக்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் திருமண வரம் தரும் கடவுளாக ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி உள்ளார்.

    18 படிகள் ஏறிச் சென்று மூலவரை தரிசிக்கும் அமைப்புடன் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. மூலவர் ஸ்ரீஅபிமுக்தீஸ்வரரை ஆயிரம் முல்லைப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தீராத நோயும் தீரும். சுக்கிரன், இந்தத் தலத்தின் சரவணப் பொய்கையில் நீராடி, தவம் இருந்து, இழந்த சக்தியைச் திரும்பப் பெற்றார். எனவே, சுக்கிர தோஷ நிவர்த்திக்காக இங்கு சென்று வழிபடலாம்.

    ஸ்ரீசுப்பிரமணியர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்குப்பொன்னும் பொருளும் அருள்வதுடன், திருமண வரமும் வழங்குகிறார். வள்ளியைக் கரம்பிடிக்க விரும்பிய முருகன், இந்தத் தலத்துக்கு வந்து பரமசிவனையும் பார்வதியையும் வேண்டி தவம் செய்து வழிபட்டதாகச் சொல்கிறது தல புராணம். பிறகு, சிவ-பார்வதியின் ஆசியோடும், அண்ணன் விநாயகரின் துணையோடும் வள்ளிமலையில் ஸ்ரீவள்ளியை மணம் செய்து கொண்டார்.

    தனது திருமணம் நிறைவேற பெற்றோரின் ஆசி கிடைத்த இந்தத் தலத்தில், பக்தர்களின் திருமண பிரார்த்தனைகளையும் நிறைவேற்ற முருகன் சித்தம் கொண்டு கல்யாண வரம் தரும் கந்தனாக இந்தக் கோவிலில் குடிகொண்டுள்ளார்.

    வேலவன் வழிபட்டதால், இந்த ஊருக்கு வேளூர் என்றும் பெயர் உண்டு. இந்த தலத்தில் உள்ள சரவண பொய்கையில் நீராடி, முருகனை வழிபட்டால், திருமண தோஷங்கள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வம் பெருகும்.

    ×