என் மலர்
நீங்கள் தேடியது "Valli"
- முருகப் பெருமானின் பாதத்தின் கீழ் இந்த யானை இடம் பெற்றுள்ளது.
- கருவறையை அடைய இங்கு சடாட்சரப்படிகள் என்னும் ஆறுபடிகள் அமைந்துள்ளன.
முருகனின் அறுபடைத் தலங்களில் திருப்பரங்குன்றம் முதல் படை வீடாகத் திகழ்கிறது.
சூரனை வென்ற முருகனுக்குப் பரிசாகத் தன் மகள் தெய்வானையை தேவேந்திரன் மணம் செய்வித்த திருத்தலம் இதுவாகும்.
சைவம் (சிவவழிபாடு), வைணவம் (விஷ்ணு வழிபாடு), காணாபத்யம் (கணபதி வழிபாடு), சாக்தம் (அம்பாள் வழிபாடு),
சௌரம் (சூரிய வழிபாடு), கவுரமாரம் (முருக வழிபாடு) என்னும் ஆறு வகையான மதங்கள் பழங்காலத்தில் இருந்தன.
அவற்றை இணைக்கும் தலமாக திருப்பரங்குன்றம் கோவில் திகழ்கிறது.
இதை கருவறையில் காணலாம்.
ஐராவதம் என்னும் தேவலோகத்து யானையால் வளர்க்கப்பட்ட தெய்வானையை மணம் செய்த விழா
பங்குனி உத்திரத்தையொட்டி, இங்கு பிரம்மோற்சவமாக நடக்கிறது.
முருகப் பெருமானின் பாதத்தின் கீழ் இந்த யானை இடம் பெற்றுள்ளது.
கருவறையை அடைய இங்கு சடாட்சரப்படிகள் என்னும் ஆறுபடிகள் அமைந்துள்ளன.
இந்தப் படிகளில் ஏறும்போது "சரவணபவ" என்னும் ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடியே செல்வது நல்லது.
- தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.
- தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.
இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது.
இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.
தைப்பூச வழிபாடு:
நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தை மாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பவுர்ணமியில் வரும்.
முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.
தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.
- தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர்.
- உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம்.
தைப்பூச சிறப்புகள்:
சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.
சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே.
இக்காரணங்களுக்காகவே சிவன் கோவில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.
வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை பூச நட்சத்திரத்தன்றுதான் சமாதியானார்.
இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
தைப்பூச விரத முறை:
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு திருநீறு, ருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர்.
தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர்.
உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம்.
மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.
- வடலூரில் தைப்பூசத்தன்று அருட்பெரும் ஜோதி விழா நடைபெறும்.
- வருட பூசம் தை மாதத்தில் ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் காட்டுவதைக் காணலாம்.
வடலூரில் தைப்பூசத்தன்று அருட்பெரும் ஜோதி விழா நடைபெறும்.
மாத பூசத்தில் ஆறு திரை விலக்கிக் காட்டுவார்கள்.
வருட பூசம் தை மாதத்தில் ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் காட்டுவதைக் காணலாம்.
1. கறுப்புத்திரை - மாயசக்தி,
2. நீலத் திரை- திரியா சக்தி,
3. சிவப்புத் திரை - இச்சாசக்தி,
4. பச்சைத் திரை- பராசக்தி,
5. பொன்திரை- ஞானசக்தி,
6. வெள்ளைத்திரை- ஆதிசக்தி,
7. பல வண்ணத்திரை- சிற்பசக்தி.
- கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க,
- மற்றவர் முற்றிய புதுநெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர்.
தைப்பூசத்தில் தான் யாழ்ப்பாண மக்கள் புது நெல்லு (புதிர்) எடுப்பர்.
தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள்,
தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று,
கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க,
மற்றவர் முற்றிய புதுநெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர்.
அதனைக் குடும்பத்தலைவி பெற்று சுவாமி அறையில் வைப்பார்.
அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து,
வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர்.
அந்த அரிசியுடன் வீட்டில் உள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும்.
ஊரில் உள்ள முருகன் கோவில்களில் பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும் தமது நேர்த்திகளை நிறைவேற்றுவர்.
- தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.
- வள்ளல் பெருமான் தைப்பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்.
வள்ளல் பெருமான் தைப்பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்.
காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாகும்.
தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.
மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பதாகும்.
அகரம்+உகரம்+மகரம்=ஓம்
தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள் சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில் இருக்கும்.
அப்போது ஞானசபையில் இருந்து அக்னியான ஜோதி காண்பிக்கப்படும். அதாவது சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி
* சந்திரன் என்பது மனஅறிவு.
* சூரியன் என்பது ஜீவ அறிவு.
* அக்னி என்பது ஆன்மா அறிவு.
சந்திரன் சூரியனில் அடங்கி, சூரியன் அக்னியில் அடங்கி அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே தைபூசம்.
மனம் ஜீவனில் அடங்கி, ஜீவன் ஆன்மாவில் அடங்கி, ஆன்மா சிவத்துடன் கலந்து விடும் என்பதை காட்டவே தைபூசம் நமது வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது.
- முருகன் குறிஞ்சி நிலக்கடவுள், மலையும் மலை சார்ந்த இடங்களின் கடவுள் முருகன்.
- உருவ வழிபாட்டில் தொன்மையானதும் முருகன் வழிபாடாகும்.
மனித இனம் முதன் முதலில் தோன்றிய இடம் குறிஞ்சி நிலமாகும்.
ஆகவே முதன் முதலில் மக்கள் குறிஞ்சி நிலத்திலேயே தெய்வ வழிபாடு தொடங்கினார்கள்.
ஒரு குழந்தை வடிவம் படைத்து அதை கடவுளாக வழிபாடு செய்தது முருகன் வழிபாடு என சொல்கிறார்கள்.
உருவ வழிபாட்டில் தொன்மையானதும் முருகன் வழிபாடாகும்.
முருகன் குறிஞ்சி நிலக்கடவுள், மலையும் மலை சார்ந்த இடங்களின் கடவுள் முருகன்.
அதனால் முருகனைக் "குறிஞ்சிக் கிழவன்" "மலைகிழவோன்" என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன.
முருகன் தமிழ்க் கடவுள். முருகனே தமிழ் மொழியை முதன் முதலில் அகத்தியருக்கு அறிவுறுத்தினான் என்பது வரலாறு.
மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் தமிழிலேயே முருகன் உபதேசித்தான்.
"முருகு" என்ற சொல்லுக்கு அழியாத அழகும், குன்றாத இளமையும், இயற்கை மணமும், எல்லாப் பொருள்களிலும் கடவுள் தன்மை உண்டு என பல பொருள்கள் உண்டு.
"மு" என்பது திருமாலையும் "ரு" என்பது சிவபெருமானின் அம்சத்தையும் "க" என்பது பிரம்மனையும் குறிக்கும் என்பர்.
தமிழின் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் தன்னுடைய கண்களாகவும்,
தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் விளங்கும் எழுத்துக்கள் ஆறும் முகங்களாகவும்,
தனி நிலை எனப்படும் ஆய்தமே ஒப்புயர்வற்றுத் திகழும் வேலாகவும் கொண்டு,
தமிழ் தெய்வமாகிய முருகன் தமிழ் வடிவாக விளங்குகின்றான்.
ஞானமே உடலாகவும், இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்னும் முச்சக்திகளே மூன்று கண்களாகவும்,
இப்பெரிய உலகமே கோயிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற தனிச்சுடராகத் திகழ்பவன் முருகன்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நூறாயிரம் சூரியன்கள் ஒரே காலத்தில் ஒளி வீசுவது போன்ற பேரழகு வாய்ந்த தெய்வீக வடிவம் கொண்டவன் முருகன்.
முருகனை வணங்கினால் எல்லாக் கடவுள்களையும் வணங்கி அடையும் பயன்களை எல்லாம் நாம் ஒருங்கே பெறலாம்.
மகனுக்கு செய்யும் சிறப்பால், தந்தை தாயாகிய சிவ பெருமானும் உமாதேவியும், தம்பியைப் போற்றுதலால்
சகோதரனாகிய விநாயகரும், மருமகனை வழிபடுதலால் மாமனாகிய திருமாலும், தலைவனை வணங்குதலால்
தேவரும், முனிவரும் ஆகிய அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.
எனவே முருகன் வழிபாடு மிக்க சிறப்புடையது.
முருகன் தன் பக்தர்கள் வேண்டும் கோரிக்கைகளை எல்லாம், அவர்கள் வேண்டியவாறே விரும்பிக் கொடுத்து அருளும் தன்மை வாய்ந்தவன்.
முருகனை அடைந்தால் அவன் நம் துன்பத்தை அழிப்பான்.
முருகனை அன்புடன் வழிபட்டு முருகா முருகா என எப்போதும் கூறித் தியானிப்பவர்கள்
என்றும் குறையாத பெரும் செல்வத்தைப் பெறுவார்கள், அவர்களை ஒருேபாதும் எத்தகைய துன்பமும் அணுகாது.
- திருபோரூரானது பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது.
- திருப்போரூர் கந்தசாமியை வழிபட, சகல காரியங்களும் நல்லபடியாக நடைபெறும்.
திருப்போரூா் கந்தசுவாமி கோவில் தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அமைந்த முருகன் கோவில் ஆகும்.
இக்கோவில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது.
திருபோரூரானது பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது.
திருப்போரூா் கந்தசாமி கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
அகத்திய மாமுனிவர் ஒருமுறை, "போகத்தையும் முக்தியையும் அளித்து, கந்தன் குருமூர்த்தியாய் உபதேசிக்கும் தலம் எது?"
என்று கேட்டார்., "சர்வ பாவங்களையும் போக்கும் அறுபத்து நான்கு தலங்களில் ஆறு தலங்கள் நமக்குரியவை.
அவற்றிலும் மிக உகந்தது யுத்தபுரி (திருப்போரூர்)" என்று கந்தப் பெருமானே போற்றிய திருத்தலம் திருப்போரூர்.
சிதம்பர ஸ்வாமிகள் அருள் பெற்ற தலமும் கூட!
திருப்போரூர் கந்தசாமியை வழிபட, சகல காரியங்களும் நல்லபடியாக நடைபெறும்.
- திருத்தணி முருகன் கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது.
- தணிந்து அமர்ந்த தலம் ஆதலின் திருத்தணிகை எனப் பெயர் அமைந்தது.
திருத்தணி முருகன் கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது.
இது தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ளது.
முருகப் பெருமான் தேர்களின் துயரம் நீங்கும்பொருட்டு சூரபது மனுடன் செய்த பெரும் போரும்,
வள்ளியம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறு போரும் முடிந்து,
தணிந்து அமர்ந்த தலம் ஆதலின் திருத்தணிகை எனப் பெயர் அமைந்தது.
தேவர்களின் அச்சம் தணிந்த இடம், முனியவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம்,
அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடம் ஆதலாலும்,
இதற்கு தணிகை என்று பெயர் அமைந்தது.
- சென்னை மயிலாப்பூர், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெற்குப் பிராகாரத்தில் சிங்காரவேலர் சந்நிதி உள்ளது.
- இருபுறமும் ஸ்ரீவள்ளி தெய்வானை தேவியர் உள்ளனர்.
சென்னை மயிலாப்பூர், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெற்குப் பிராகாரத்தில் சிங்காரவேலர் சந்நிதி உள்ளது.
ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில், மேற்கு நோக்கி சிங்காரவேலர் காட்சி தருகிறார்.
இருபுறமும் ஸ்ரீவள்ளி தெய்வானை தேவியர் உள்ளனர்.
செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சஷ்டி, கிருத்திகை மற்றும் தைப்பூச தினங்களிலும்
மயிலை சிங்காரவேலருக்கு நெய் தீபமேற்றி வழிபட, சகல பிரச்சினைகளும் காணாமல் போகும்.
ஆண்டார்குப்பம்
சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச்சாலை வழியாகபொன்னேரி செல்லும் வழியில் ஆண்டார் குப்பம் தலம் அமைந்துள்ளது.
ஆதியில் ஆண்டிகள் நிறைந்த அவர்கள் வழிபட்ட தலமாதலாலும் ஆண்டவர் குப்பம் என்றும், இந்தப் பெயரே மருவி ஆண்டார்குப்பம் என்றும் வழங்கப்படுகிறது.
இங்கே காலையில் பாலனாக, நண்பகலில் வாலிபனாக, மாலையில் வயோதிகனாக அருள்கிறார் முருகன்.
"பிரம்மதேவரை சிறையில் அடைத்து, அவரது அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
எனவே முருகன் தன் பக்தர்களுக்கும் அதிகாரம் மிக்க பதவிகள் கிடைக்க அருள்வதில் வள்ளல்" என்கிறார்கள்.
- கந்த கடவுள் விரும்பி உறையும் தலங்களில் இதுவும் ஒன்று.
- இன்றும் அவர் லிங்கசொரூபமாக திகழ்வதாக சொல்கிறார்கள்.
வீடுபேறு அருளும் அற்புதத் திருத்தலம் சிறுவாபுரி.
சென்னை, கொல்கத்தா நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டிக்கு முன்னதாக இத்தலம் அமைந்திருக்கிறது.
கந்த கடவுள் விரும்பி உறையும் தலங்களில் இதுவும் ஒன்று.
அருணகிரிநாதரின் கனவில் தோன்றி முருகன் அருள் பாலித்த தலம் என்ற சிறப்பும் இந்த தலத்துக்கு உண்டு.
முருகனுக்கு உகந்த தினங்களில் சிறுவாபுரிக்கு சென்று, அபிஷேக ஆராதனைகள் செய்து தரிசித்து வழிபட வீடு மனை யோகம் அமையும் என்பது ஐதீகம்.
மயிலம்
முருகப்பெருமானின் வாகனமாகும் ேபறுபெற்ற சூரன், மயில் உருவத்தில் மலைபோல் நின்று தவம் செய்த தலம், மயிலம்.
திண்டிவனம் அருகேயுள்ள இந்த தலத்தில் கடும் தவமிருந்து முருகனை தரிசிக்கும் பாக்கியம் பெற்றார் சங்குகண்ணன் என்ற சித்தர்.
இன்றும் அவர் லிங்கசொரூபமாக திகழ்வதாக சொல்கிறார்கள்.
மயிலம் முருகனை வழிபட அல்லல்கள் நீங்கும்;
ஆனந்தம் பெருகும்.
- வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம்!
- தொன்மையான கோவில்களில் முருகன் சிலையே இருக்காது! வெறும் வேல் வழிபாடு தான்!
வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம்!
'வெல்' என்ற வினைச்சொல்லே நீண்டு 'வேல்' என்ற பெயர்ச்சொல் ஆகிறது!
ஆகவே, வேல் என்றால் வெற்றி என்று அர்த்தமாகும்.
ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் வேல்!
ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப் பாடுறா!
வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு! திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு!
சங்க காலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது!
பின்னாளில் தான் ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும்! ஆகமம், அது இதுன்னு நுழைத்த பின்பே,
ஒரு சாராரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன!
சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்!
இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது! வேல் வழிபாடு ன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, விக்ரஹாதி மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது
பல தொன்மையான கோவில்களில் முருகன் சிலையே இருக்காது! வெறும் வேல் வழிபாடு தான்!
பழமுதிர்சோலை, திருச்செங்கோடு, ஈழத்தில் செல்வர் சந்நிதி, மலேசியாவில் பத்துமலை, உள்ளிட்ட பல ஊர்களில் எல்லாம் வேல் வழிபாடு தான் நடைமுறையில் உள்ளது.