search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்கடவுள்"

    • பல கோடி பிறவிகளில் செய்த புண்ணியங்கள் திரண்டு ஒன்றுபட்டால் தான் முருக பக்தி உண்டாகும்.
    • முருகப் பெருமான் குன்றுகள் இருக்குமிடம் தோறும் வீற்றிருக்கிறான்.

    சித்தர்கள் பரம்பரையை துவக்கி வைத்த பெருமை முருகனுக்கு உண்டு.

    முருகப் பெருமான் குன்றுகள் இருக்குமிடம் தோறும் வீற்றிருக்கிறான்.

    முருகனை மந்திரவடிவிலும், யந்திர வடிவிலும், யாக நெருப்பிலும், பற்பல சிற்ப வடிவிலும், ஓவிய வடிவிலும்,

    தமிழ் மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்.

    முருகப்பெருமானைப் பற்றி நாம் மேலும் அறிய வேண்டு மானால் கச்சியப்பரின் கந்தபுராணம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை,

    அருணகிரியாரின் திருப்புகழ், குமரகுருபரரின் கந்தர்கலிவெண்பா முதலான படைப்புகளை சலிப்பே இல்லாமல் படித்து,

    அதை நுணுக்கமாக ஆராய வேண்டும்.

    அப்போது தான் முருகன் யார் என்பது மிகத்தெளிவாக தெரியவரும்.

    பல கோடி பிறவிகளில் செய்த புண்ணியங்கள் திரண்டு ஒன்றுபட்டால் தான் முருக பக்தி உண்டாகும்.

    முருகன் அருள் பெற அறுபடை வீடுகளுடன் தொண்டை மண்டலத்தின் வைரக்கிரீடமாகத் திகழும் வடபழனி தலமும் உள்ளது.

    • அகத்திய முனிவருக்கே தமிழ் இலக்கணம் போதித்த முதல் ஆசிரியன்.
    • அவ்வைப் பிராட்டிக்கு தத்துவ ஞானத்தை நாவல்பழம் மூலம் போதித்தவன்.

    முருகப் பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது.

    தெய்வ யானை கிரியா சக்தியாகவும் வள்ளி இச்சா சக்தியாகவும் வேல் ஞான சக்தியாகவும் மயில் ஆணவம் என்றும் சேவல் சிவஞானம் என்றும் கூறுவார்கள்.

    சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து அவதரித்த சிவக்குமரன், சக்தி பார்வதிதேவி சேர்த்தெடுத்து ஞானப்பாலூட்டி வளர்த்த சக்திமைந்தன் தான் முருகன்.

    இவர் விநாயகப்பெருமானின் இளைய சகோதரன், ஐயப்ப சுவாமியின் அண்ணன்.

    திருமாலின் மருமகன், இந்திரனின் மாப்பிள்ளை, தேவயானை எனும் தேவியின் கணவன்.

    வள்ளிக்குற மகளின் காதலன், வீரபாகு முதலான நவ வீர வாகுத் தேவர்கள் 9 பேரின் தோழன், தேவர்களுக்கு இன்னல்கள் விளைத்த தாரகா சூரன் சிங்கமுகன் சூரபதுமன் முதலான அசுரர்களை அழித்தவன்.

    அகத்திய முனிவருக்கே தமிழ் இலக்கணம் போதித்த முதல் ஆசிரியன்,

    அவ்வைப் பிராட்டிக்கு தத்துவ ஞானத்தை நாவல்பழம் மூலம் போதித்தவன்.

    நக்கீரர், அருணகிரியார், குமரகுருபரர், கச்சியப்பசிவ சாரியார் போன்ற ஞானிகளுக்கே தமிழ் நூல்கள் எழுத போதித்த சற்குரு.

    அப்பனுக்கே ஞானம் சொன்ன சுப்பன். தமிழகத்திற்கும் தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் உண்மையான தமிழ்த் தலைவன்,

    வடக்கே பிறந்து தெற்கே வந்தாலும் முற்றிலும் செந்தமிழ் நாட்டிற்கே உரியவன்.

    • இந்நாளில் சூரிய பகவான் விரதமிருந்து முருகப்பெருமானின் ப்ரீதியைப் பெற்றார் என்கிறது புராணம்.
    • விசாக விரதம் இருப்போர்க்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.

    முருகப்பெருமான் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று திரு அவதாரம் செய்தவர்.

    இந்நாளில் சூரிய பகவான் விரதமிருந்து முருகப்பெருமானின் ப்ரீதியைப் பெற்றார் என்கிறது புராணம்.

    விசாக விரதம் இருப்போர்க்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.

    இந்த விரதத்தை வைகாசி மாதம் விசாகத்தன்று தொடங்கி, தொடர்ந்து செய்து வந்தால் குடும்பத்தில்

    சகல சவுபாக்கியங்களும் பொங்கிப் பெருகும்.

    • தந்தைக்கு “ஓம்” என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.
    • ஓம் என்பது அ, உ, ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.

    தந்தைக்கு "ஓம்" என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.

    ஓம் என்பது அ, உ, ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.

    அ- படைத்தல் உ- காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும்.

    அ, உ, ம என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துகளுக்கும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது.

    முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ, உ, ம மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவாக உள்ளான்.

    குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கூறுவார்கள்.

    முருகனுக்குப் படை வீடு ஆறு. அவை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர் சோலை, திருத்தணி ஆகும்.

    • பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாக முருகன் திகழ்கிறான்.
    • முருகு என்ற சொல்லில் மு-மெல்லினம், ரு-இடையினம், கு-வல்லினம்.

    முருகப் பெருமான் தமிழ்க் கடவுள். சங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் முருகனை வணங்கி வருகின்றனர்.

    பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாக முருகன் திகழ்கிறான்.

    முருகு என்ற சொல்லில் மு-மெல்லினம், ரு-இடையினம், கு-வல்லினம்.

    எனவே தமிழே முருகன், முருகனே தமிழ் என்பார்கள்.

    முருகன் "ஓம்" எனும் பிரணவப் பொருளாகவும் விளங்குகிறான்.

    பிரணவம் என்றால், "சிறந்த புதிய ஆற்றலைத் தருவது" என்று பொருள்.

    முருகன் தன்னை நாடி, தேடி வருபவர்களுக்கு புதிய ஆற்றலை வற்றாமல் கொடுக்கிறான்.

    • வேலின் முகம் அகன்று விரிந்து இருக்கும்! ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்!
    • ஆண்கள்-பெண்கள், இருவருமே வேல் பிடித்து ஆடின செய்திகள், சங்கத் தமிழில் உள்ளன!

    வேலின் முகம் அகன்று விரிந்து இருக்கும்! ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்!

    வேலின் கீழ் நுனி வட்டமாக முடியும்! ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்!

    வேல் பெருமை மிக்கது! மன்னர்களும், படைத் தலைவர்களுமே பெரும்பாலும் ஏந்துவார்கள்!

    ஈட்டி அனைத்து போர் வீரர்களிடமும் உண்டு!

    வேல் எறிவதும், சிறந்த பகைவர்களை நோக்கியே! எல்லார் மேலேயும் வேல் எறிந்து விடுவதில்லை!

    ஆண்கள்-பெண்கள், இருவருமே வேல் பிடித்து ஆடின செய்திகள், சங்கத் தமிழில் உள்ளன!

    இப்படி, பண்டைத் தமிழ்ச் சமூகம், "வேலை" முன்னிறுத்தி, எப்படித் தன் மரபுகளை ஒத்து வாழ்ந்தது.

    இன்றும் கிராமத்தவர்கள், இந்த வேல் வழிபாட்டையே அதிகம் போற்றுகிறார்கள்!

    தொலைந்து போன வேல் வழிபாடு, தமிழ் வழி வழிபாட்டை மீண்டும் முன்னிறுத்த, அருணகிரி நாதர் முயற்சிகள் பல செய்தார்.

    பின்னால் வந்த பல கவிஞர்களும், வேலைப் போற்றிப் பாடியுள்ளார்கள்! பாரதியாரின் வேலன் பாட்டு, அதில் மிகவும் பிரபலம்!

    முருகன் அன்னையிடம் வேல் வாங்கும் காட்சியை, சிக்கல் சிங்காரவேலர் சன்னிதியில், ஒவ்வொரு ஆண்டும் நடித்துக் காட்டுவது வழக்கம்!

    அப்போது சிங்காரவேலர் திருமேனி, வேலின் கொதியால் வியர்க்கிறது என்று சொல்வாரும் உளர்! முருகன் திருமேனியைத் துடைத்து எடுப்பதும் வழக்கம்!

    முருகன் வேறு, வேல் வேறு அல்ல!

    முருகனைப் போலவே வேலுக்கும் ஆறு முகம் உண்டு! ஆறு படைகள் உண்டு.

    • வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம்!
    • தொன்மையான கோவில்களில் முருகன் சிலையே இருக்காது! வெறும் வேல் வழிபாடு தான்!

    வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம்!

    'வெல்' என்ற வினைச்சொல்லே நீண்டு 'வேல்' என்ற பெயர்ச்சொல் ஆகிறது!

    ஆகவே, வேல் என்றால் வெற்றி என்று அர்த்தமாகும்.

    ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் வேல்!

    ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப் பாடுறா!

    வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு! திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு!

    சங்க காலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது!

    பின்னாளில் தான் ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும்! ஆகமம், அது இதுன்னு நுழைத்த பின்பே,

    ஒரு சாராரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன!

    சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்!

    இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது! வேல் வழிபாடு ன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, விக்ரஹாதி மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது

    பல தொன்மையான கோவில்களில் முருகன் சிலையே இருக்காது! வெறும் வேல் வழிபாடு தான்!

    பழமுதிர்சோலை, திருச்செங்கோடு, ஈழத்தில் செல்வர் சந்நிதி, மலேசியாவில் பத்துமலை, உள்ளிட்ட பல ஊர்களில் எல்லாம் வேல் வழிபாடு தான் நடைமுறையில் உள்ளது.

    • கந்த கடவுள் விரும்பி உறையும் தலங்களில் இதுவும் ஒன்று.
    • இன்றும் அவர் லிங்கசொரூபமாக திகழ்வதாக சொல்கிறார்கள்.

    வீடுபேறு அருளும் அற்புதத் திருத்தலம் சிறுவாபுரி.

    சென்னை, கொல்கத்தா நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டிக்கு முன்னதாக இத்தலம் அமைந்திருக்கிறது.

    கந்த கடவுள் விரும்பி உறையும் தலங்களில் இதுவும் ஒன்று.

    அருணகிரிநாதரின் கனவில் தோன்றி முருகன் அருள் பாலித்த தலம் என்ற சிறப்பும் இந்த தலத்துக்கு உண்டு.

    முருகனுக்கு உகந்த தினங்களில் சிறுவாபுரிக்கு சென்று, அபிஷேக ஆராதனைகள் செய்து தரிசித்து வழிபட வீடு மனை யோகம் அமையும் என்பது ஐதீகம்.

    மயிலம்

    முருகப்பெருமானின் வாகனமாகும் ேபறுபெற்ற சூரன், மயில் உருவத்தில் மலைபோல் நின்று தவம் செய்த தலம், மயிலம்.

    திண்டிவனம் அருகேயுள்ள இந்த தலத்தில் கடும் தவமிருந்து முருகனை தரிசிக்கும் பாக்கியம் பெற்றார் சங்குகண்ணன் என்ற சித்தர்.

    இன்றும் அவர் லிங்கசொரூபமாக திகழ்வதாக சொல்கிறார்கள்.

    மயிலம் முருகனை வழிபட அல்லல்கள் நீங்கும்;

    ஆனந்தம் பெருகும்.

    • சென்னை மயிலாப்பூர், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெற்குப் பிராகாரத்தில் சிங்காரவேலர் சந்நிதி உள்ளது.
    • இருபுறமும் ஸ்ரீவள்ளி தெய்வானை தேவியர் உள்ளனர்.

    சென்னை மயிலாப்பூர், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெற்குப் பிராகாரத்தில் சிங்காரவேலர் சந்நிதி உள்ளது.

    ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில், மேற்கு நோக்கி சிங்காரவேலர் காட்சி தருகிறார்.

    இருபுறமும் ஸ்ரீவள்ளி தெய்வானை தேவியர் உள்ளனர்.

    செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சஷ்டி, கிருத்திகை மற்றும் தைப்பூச தினங்களிலும்

    மயிலை சிங்காரவேலருக்கு நெய் தீபமேற்றி வழிபட, சகல பிரச்சினைகளும் காணாமல் போகும்.

    ஆண்டார்குப்பம்

    சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச்சாலை வழியாகபொன்னேரி செல்லும் வழியில் ஆண்டார் குப்பம் தலம் அமைந்துள்ளது.

    ஆதியில் ஆண்டிகள் நிறைந்த அவர்கள் வழிபட்ட தலமாதலாலும் ஆண்டவர் குப்பம் என்றும், இந்தப் பெயரே மருவி ஆண்டார்குப்பம் என்றும் வழங்கப்படுகிறது.

    இங்கே காலையில் பாலனாக, நண்பகலில் வாலிபனாக, மாலையில் வயோதிகனாக அருள்கிறார் முருகன்.

    "பிரம்மதேவரை சிறையில் அடைத்து, அவரது அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

    எனவே முருகன் தன் பக்தர்களுக்கும் அதிகாரம் மிக்க பதவிகள் கிடைக்க அருள்வதில் வள்ளல்" என்கிறார்கள்.

    • திருத்தணி முருகன் கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது.
    • தணிந்து அமர்ந்த தலம் ஆதலின் திருத்தணிகை எனப் பெயர் அமைந்தது.

    திருத்தணி முருகன் கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது.

    இது தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ளது.

    முருகப் பெருமான் தேர்களின் துயரம் நீங்கும்பொருட்டு சூரபது மனுடன் செய்த பெரும் போரும்,

    வள்ளியம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறு போரும் முடிந்து,

    தணிந்து அமர்ந்த தலம் ஆதலின் திருத்தணிகை எனப் பெயர் அமைந்தது.

    தேவர்களின் அச்சம் தணிந்த இடம், முனியவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம்,

    அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடம் ஆதலாலும்,

    இதற்கு தணிகை என்று பெயர் அமைந்தது.

    • திருபோரூரானது பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது.
    • திருப்போரூர் கந்தசாமியை வழிபட, சகல காரியங்களும் நல்லபடியாக நடைபெறும்.

    திருப்போரூா் கந்தசுவாமி கோவில் தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அமைந்த முருகன் கோவில் ஆகும்.

    இக்கோவில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது.

    திருபோரூரானது பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது.

    திருப்போரூா் கந்தசாமி கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

    அகத்திய மாமுனிவர் ஒருமுறை, "போகத்தையும் முக்தியையும் அளித்து, கந்தன் குருமூர்த்தியாய் உபதேசிக்கும் தலம் எது?"

    என்று கேட்டார்., "சர்வ பாவங்களையும் போக்கும் அறுபத்து நான்கு தலங்களில் ஆறு தலங்கள் நமக்குரியவை.

    அவற்றிலும் மிக உகந்தது யுத்தபுரி (திருப்போரூர்)" என்று கந்தப் பெருமானே போற்றிய திருத்தலம் திருப்போரூர்.

    சிதம்பர ஸ்வாமிகள் அருள் பெற்ற தலமும் கூட!

    திருப்போரூர் கந்தசாமியை வழிபட, சகல காரியங்களும் நல்லபடியாக நடைபெறும்.

    • “கனககிரி” என்று அழைக்கப்படும் பொன்மலை சுமார் 660 அடி உயரம் உடையது.
    • மலை மீதுள்ள வற்றாதச் சுனைகளின் “நீர்” தீர்த்தமாக கருதப்படுகிறது.

    "கனககிரி" என்று அழைக்கப்படும் பொன்மலை சுமார் 660 அடி உயரம் உடையது.

    இதன் உச்சியில் உள்ள வேலாயுத சுவாமி கோவிலுக்கு செல்ல 200 படிக்கட்டுகள் உள்ளன.

    மலை எறும் வழியில் இடும்பன் சன்னதி உள்ளது.

    மலை மீதுள்ள வற்றாதச் சுனைகளின் "நீர்" தீர்த்தமாக கருதப்படுகிறது.

    கிழக்கு திசை பார்த்தவாறு கோவில் அமைந்துள்ளது.

    கோவில் மகா மண்டபத்தினுள் இடதுபுறம் ஆனந்தமாக தல விநாயகர் காட்சி தருகிறார்.

    கருவறையில் வோலயுத சுவாமி என்ற பெயருடன் மூலவர் கிழக்கு திசை நோக்கி காட்சி தருகிறார்.

    சுமார் 4 அடி உயரமுள்ள திருமேனி, வலக்கரத்தில் தண்டம் தரித்து இடக்கரத்தை இடுப்பில் வைத்த நிலையில் அருட்காட்சி தருகிறார்.

    ருத்ராட்சம் சுற்றி சூரிய சந்திரர்களையும் சூடி விளங்கும் திருமுடியுடன் கூடிய

    அழகன் முருகப்பெருமானின் அலங்கார காட்சி வேறு எந்த திருத்தலத்திலும் காணக்கிடைக்காத அருட்காட்சியாகும்.

    வேல் கொண்ட கையுடன் விளங்கும் இங்குள்ள வேலாயுத சுவாமியை கண்டு தொழ

    "நாலாயிரம் கண் அந்த நான்முகன் படைத்திலனே" என்று தனது கனககிரி திருப்புகழில் ஏங்குகிறார் அருணகிரிநாதர்.

    ×