search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னிமலை முருகன் கோவிலுக்கு படி வழியாக திருமஞ்சனம் கொண்டு செல்ல புதிய காளை மாட்டிற்கு பயிற்சி
    X

    பழைய காளை மாட்டுடன் புதிய காளை மாட்டிற்கு பயிற்சி கொடுத்தனர்.

    சென்னிமலை முருகன் கோவிலுக்கு படி வழியாக திருமஞ்சனம் கொண்டு செல்ல புதிய காளை மாட்டிற்கு பயிற்சி

    • வழக்கமாக தீர்த்தம் கொண்டு செல்லும் காளை மாட்டுடன் புதியதாக வளர்க்கப்பட்ட காளை மாட்டினை பயிற்சிக்காக ஓட்டி சென்றனர்.
    • புதிய காளை மாடு பயிற்சி பெற்ற காளை மாடு போல் வெகு எளிதாக படி வழியில் ஏறியது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலுக்கு மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்த கிணற்றில் இருந்து காலை 8 மணி பூஜைக்கு பொதி காளைகள் மூலம் 1,320 படிவழியாக தீர்த்த குடங்கள் கொண்டு செல்வது பல வருடங்களாக தொற்று தொட்டு இருந்து வரும் வழக்கம்.

    இந்த அதிசயம் 100 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. மலை அடிவாரத்தில் உள்ள இடுபன் கோவிலுக்கு பூஜை செய்யும் குருக்கள் வந்து காலை 7.20 மணிக்கு தீர்த்த கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து பொதி காளை மீதுள்ள மூங்கில் கூடையில் வைத்துவிடுவர். மலை கோவிலுக்கு படி வழியாக கோவில் பணியாளர்கள் காளை மாட்டினை ஓட்டி செல்வர்.

    இந்த பணிக்காக தனியாக கோசலையில் 3 பொதிகாளைகள் பாராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதில் ஒரு மாடு வயது ஆகிவிட்டதால் படி வழியாக திருமஞ்சன தீர்த்த குடம் கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறது. இதற்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பக்தர் ஒருவர் முருகனுக்கு தானமாக கொடுத்த பொதி காளை மாடு சிறப்பாக பராமரிக்கபட்டு வந்தது.

    அந்த காளையினை கால்நடை உதவி மருத்துவர் மூலம் கடந்த 3 மாதங்களாக சிறப்பான உணவுகள் கொடுத்து பராமரித்து வந்த பணியாளர்கள் இன்று, வழக்கமாக தீர்த்தம் கொண்டு செல்லும் காளை மாட்டுடன் புதியதாக வளர்க்கப்பட்ட காளை மாட்டினை பயிற்சிக்காக ஓட்டி சென்றனர்.

    வழக்கமாக புதிய மாட்டினை படி வழியாக கொண்டு சென்றால் மிரண்டு கொள்ளும், படியில் ஏறாது. ஆனால் இந்த காளை சிறப்பாக இன்று வந்து சென்றது.

    இனி பயிற்சிக்காக தினமும் காலையில் மாலை, சந்தன பொட்டு, புதிய சலங்கை அணிவித்து பூஜை செய்து தீர்தகுடம் வைக்காமல் அதை பழக்கப்படுத்த பிடித்து செல்வர்.

    புதிய காளை மாடு பயிற்சி பெற்ற காளை மாடு போல் வெகு எளிதாக படி வழியில் ஏறியது. இதை காலை தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் பார்த்து மெய்சிலிர்தனர். காளை சில இடங்களில் மட்டும் இரண்டு இரண்டு படியாக தாண்டி சென்றது. 3 மாதத்தில் நன்கு பயிற்சி பெரும் என மாடு பராமரிக்கும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×