பல்லடம் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

18 வகை திரவியங்களால் முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான்.
சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான்.
Published on

பல்லடம்:

பல்லடம் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதன்படி பல்லடம் காந்தி ரோடு, தண்டாயுதபாணி கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜையும் வழிபாடும் நடைபெற்றது. இதில் சந்தனம்,பால், தயிர், தேன், உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். இதேபோல பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில்,பொன்காளியம்மன் கோவில், மாதப்பூர் முத்துக்குமார சுவாமி மலை கோவில், உள்ளிட்ட கோவில்களில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com