search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழமுதிர்சோலை முருகன் கோவிலில் அ.தி.மு.க.வினர் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு
    X

    பழமுதிர்சோலை முருகன் கோவிலில் அ.தி.மு.க.வினர் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு

    • பழமுதிர்சோலை முருகன் கோவிலில் நாளை அ.தி.மு.க.வினர் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெறும்.
    • அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அருகில் கூறியிருப்பதாவது-

    மதுரை வளையங்குளத் தில் கடந்த 20-ந்தேதி அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தமிழகத்தில் ஆட்சி அரியணையில் ஏறுவதற்கும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை அழகர் கோவில் உள்ள பழமுதிர் சோலை கோவிலில் நாளை (29-ந்தேதி) மாலை 4 மணி அளவில் தங்கத் தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

    இந்த தங்க தேர் இழுக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவ நாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், கே.டி. ராஜேந்திர பாலாஜி, அமைப்புச் செயலாளர் ஜக்கையன், சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் ராஜ் சத்யன் மற்றும் முன்னாள், இந்நாள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகி கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×