search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "motorists"

    • படூர் வரை 50 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.
    • தினமும் வாகன ஓட்டிகள் கேளம்பாக்கம் நகருக்குள் வந்து கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது.

    திருப்போரூர்:

    பழைய மாமல்லபுரம் சாலை திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், கிழக்கு கடற்கரை சாலைக்கு விரைவாக செல்லவும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கடந்த 2017 -ம் ஆண்டு சுமார் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆலத்தூர் ஊராட்சி வெங்கலேரி கிராமத்தில் இருந்து காலவாக்கம் தனியார் கல்லூரி வரை சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் மற்றும் தையூர் ஊராட்சி செங்கன் மால் பகுதியில் இருந்து படூர் வரை சுமார் 2½ கிலோ மீட்டர் தூரம் என மொத்தம் 7½ கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.

    இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2020-ம் ஆண்டு இச்சாலை பணிகள் முடிக்கப்பட வேண்டும். இடையில் கொரோனா காலகட்டம், ஆட்சி மாற்றம் ஆகியவற்றால் இந்தப் புறவழிச் சாலை பணிகள் மந்தகதியில் நடைபெற்று வந்தன. வெங்கலேரி முதல் காலவாக்கம் தனியார் கல்லூரி வரை 90 சதவீத பணிகள் நிறை வடைந்துள்ளன. இப்பணிகள் நிறைவு பெறும் முன்னே இச்சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்போரூர் நகரத்துக்குள் வராமல் இந்த புறவழிச் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயண நேரம் குறைவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தையூர் செங்கண்மால் பகுதியில் இருந்து படூர் வரை இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைய உள்ள சாலையில் ஒரு மேம்பாலம் அமைகிறது.

    இதில் படூர் வரை 50 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. மீதமுள்ள பாதி பணிகள் நடைபெறவில்லை. இதனால் தினமும் வாகன ஓட்டிகள் கேளம்பாக்கம் நகருக்குள் வந்து கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்தால் இப்பகுதியில் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பணிக்கு குறித்த நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைவர்.

    மந்தகதியில் நடைபெறும் திருப்போரூர், கேளம்பாக்கம் புறவழிச்சாலை பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மோட்டார் சைக்களில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை போக்குவரத்து போலீசார் பாராட்டி இனிப்பு வழங்கினார்.
    • 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்பன உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி போக்குவரத்து போலீசார் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன்படி மோட்டார் சைக்களில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை பாராட்டி இனிப்பு வழங்கினார். தொடர்ந்துஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், கார் ஓட்டும் டிரைவர்கள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்து கார்களை ஓட்ட வேண்டும். சிக்னல்களில் நின்று பார்த்து செல்ல வேண்டும். செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டக்கூடாது. மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது. இருசக்கர வாகனங்களில் 2 பேர்களுக்கு மேல் செல்லக்கூடாது, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்பன உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். நிகழ்ச்சியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், தலைமை காவலர் ஸ்டீபன் இளையராஜா, சிவக்குமார், ரமேஷ், பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • ஊர் பெயர் பலகையில் திருமண வாழ்த்து உள்ளிட்ட பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது.
    • வெளியூர் வாகன ஓட்டிகள், ஊர் பெயர் தெரியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெளியூரில் இருந்து வருபவர்கள் பாபநாசம் வழியை அடையாளம் காணும் வகையில் நகரின் முக்கிய சாலைகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    பெயர் பலகையை மறைத்து கண்ணீர் அஞ்சலி, திருமண வாழ்த்து ஆகிய போஸ்டர்கள் ஒட்டப்படு வதால்அந்த வழியாக புதிதாக வரும் வாகன ஓட்டிகள், ஊர் பெயர் தெரியாமல் திண்டாடு கின்றனர்.

    மேலும் ஒரு சில இடங்களில் ஊர் பெயர் எழுத்துக்கள் அழிந்து காணப்படுவதோடுபெயர் பலகை கீழே விழுந்து கேட்பார் இன்றி காணப்படுகிறது.

    மேலும் இரவில் வரும் வெளியூர் வாகன ஓட்டிகள், ஊர் பெயர் தெரியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

    தொடர்ந்து ஒட்டப்படும் சுவரொட்டிகளால் ஊர் பெயர் பலகை விளம்பர பலகையாக மாறிவருகிறது.

    உடனடியாக விளம்பர சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுத்து அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அபிராமத்தில் சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் பார்த்தி பனூர், கமுதி வழியாக சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

    இந்த சாலையில் உள்ள அச்சங்குளம், அகத்தாரிருப்பு, நத்தம், கமுதி, பசும்பொன் அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டில் அதிக அளவில் ஆடு, மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்ததுக்கள் ஏற்படுகிறது. சாலையின் குறுக்கே மாடுகள் அமர்ந்து விடுவதாலும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் 85 கி.மீ வேகத்திற்கும் மேலாக செல்லும் நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் கால்நடைகள் திடீரென ரோட்டின் குறுக்கே செல்வ தால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. சில நேரங்களில் உயிர் சேதமும் பொருட் சேதமும் ஏற்படுகின்றன.

    எனவே முக்கிய சாலையான இப்பகுதியில் கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.

    • தெருநாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்
    • இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினாலும், தெருநாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினாலும் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பனியன் நிறுவனங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் அதிகம் உள்ள பகுதி.
    • நான்கு பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    வீரபாண்டி :

    திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் டி.கே.டி. மில் பஸ் ஸ்டாப்பில் நால்ரோடு சந்திப்பு உள்ளது. பனியன் நிறுவனங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் நால்ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் நிறைந்து எந்நேரமும் பரபரப்பாக காணப்படும்.

    இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:- நால்ரோட்டில் எப்பொழுதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்று காலை முதல் மதியம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எரிவாயு குழாய் பதிக்க நால்ரோட்டில் மீண்டும் குழி தோண்டி உள்ளார்கள். இரவில் பணி செய்ய வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்த நிலையில் நேற்று பகலிலே எரிவாயு குழாய் பதிக்க குழி தோண்டியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நான்கு பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.மேலும் ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கி கொண்டது. எரிவாயு குழாய் பதிக்க பகலிலே தோண்டியதாலும் புதிதாக சிக்னல் அமைக்கப்பட்டு 6மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் செயல்படுவதில்லை.

    ஏற்கனவே நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில் இவை மேலும் கூடுதல் நெரிசலை ஏற்படுத்துகிறது. நான்கு பக்கமும் இருந்து வாகனங்கள் தாறுமாறாக வருவதால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்து போலீஸ் ஆகவே மாறிவிட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக போக்குவரத்து போலீசாரை நியமிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை இரவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காந்தளூர், மறையூர், மூணார் பகுதிகளை சுற்றிப் பார்ப்பதற்கு ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன.
    • வாகனங்கள் விலகி செல்ல முடியாமல் நிலை தடுமாறி பழுதடையும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    உடுமலை:

    உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக கேரள மாநிலம் மூணாறுக்கு செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக சுற்றுலா பயணிகள், வனப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் கேரளாவை சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் உடுமலை- மூணாறு சாலையில் எஸ் வளைவு பகுதியில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.அதை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில், கேரளா மாநிலத்திற்கு செல்வதற்கு உடுமலை -மூணார் சாலை பெரிதும் உதவிகரமாக உள்ளது. அங்குள்ள காந்தளூர், மறையூர், மூணார் பகுதிகளை சுற்றிப் பார்ப்பதற்கு ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த சூழலில் எஸ் வளைவுப் பகுதியில் நடு சாலையில் பள்ளம் போன்ற அமைப்பு ஏற்பட்டு உள்ளது.அதை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாகனங்கள் வளைவு பகுதியில் திரும்ப முடியாமல் நிலை தடுமாறும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி உடுமலை- மூணாறு சாலையின் ஓரத்தில் மழை பெய்த போது பள்ளம் போன்ற அமைப்பு ஏற்பட்டது. அதையும் மண் கொட்டி சீரமைப்பதற்கு முன் வரவில்லை. இதனால் வாகனங்கள் விலகி செல்ல முடியாமல் நிலை தடுமாறி பழுதடையும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது. எனவே உடுமலை - மூணாறு சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம் போன்ற அமைப்பை மண்ணை கொட்டி சீரமைப்பதற்கும் எஸ் வளைவு பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • திருப்பூர் மாநகரில் கடும் போக்குவரத்து நெருக்கடியும், அடிக்கடி சாலை விபத்துகளும், வாகன விதிமுறை மீறல்களும் நடைபெற்று வந்தது.
    • மது அருந்திவிட்டு செல்பவர்கள், சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    சென்னை உயர்நீதிமன்றம் வாகன விபத்துக்களை தடுக்க வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும். விதிமுறைகளை மீறி ஓட்டுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழக போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருப்பூர் மாநகரில் கடும் போக்குவரத்து நெருக்கடியும், அடிக்கடி சாலை விபத்துகளும், வாகன விதிமுறை மீறல்களும் நடைபெற்று வந்தது. இதனை தடுக்க சில நாட்களாக திருப்பூரின், பழைய பஸ்நிலையம், ஈஸ்வரன் தெரு, மாநகராட்சி முன்பு, குமரன் சாலை, காதர்பேட்டை, புதிய பஸ் நிலையம், கலெக்டர் ஆபிஸ் ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு ஆகிய முக்கிய பகுதிகளில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள், மது அருந்திவிட்டு செல்பவர்கள், சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் விளைவாக தற்போது வாகன விபத்துகள் குறைந்துள்ளது. வாகனம் ஓட்டிச்செல்பவர்கள், சாலையில் நடந்து செல்பவர்கள் அச்சமின்றி சென்று வருகின்றனர். இது தொடர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திருப்பூர் பல்லடம் ரோடு டி.கே.டி., மில் பஸ் நிறுத்தம் நால்ரோடு சந்திக்கும் இடத்தில் உள்ளது.
    • பெரும்பாலும் இங்கு போக்குவரத்து போலீசார் இருப்பதில்லை.

    வீரபாண்டி :

    திருப்பூர் பல்லடம் ரோட்டில் ஏற்பட்டு வரும் கடும் போக்குவரத்து நெரிச லால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தினந்தோறும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். திருப்பூர் பல்லடம் ரோடு டி.கே.டி., மில் பஸ் நிறுத்தம் நால்ரோடு சந்திக்கும் இடத்தில் உள்ளது. வாகன போக்குவரத்து நெரிசல் நிறைந்த இந்த நால் ரோட்டில் தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலும் இங்கு போக்குவரத்து போலீசார் இருப்பதில்லை. இங்கு சிக்னல் அமைத்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை . எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் மூடப்படாமல் இருப்பதால், பஸ்கள் நடுரோட்டில் நிற்கின்றன.இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் இன்றியும், சிக்னல் செயல்படாமல் இருப்பதாலும் வாகனங்கள் தாறுமாறாக வருவதால் தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் வாகன ஓட்டிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. போக்குவரத்து சிக்னலை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் . ஒரு மாதத்துக்கு மேலாகியும் மூடப்படாமல் உள்ள எரிவாயு குழாய் பதிக்க தோண்டிய குழியை உடனடியாக மூட வேண்டும். பஸ்கள் பஸ் நிறுத்தத்தில் நிற்க வழிவகை செய்ய வேண்டும். போக்குவரத்து போலீசாரை நிரந்தரமாக நியமித்து, வாகன நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மலைப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அமராவதி அணையை நோக்கி வன விலங்குகள் ரோட்டை கடந்து வருகின்றன.
    • உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு, மறையூர் பகுதிகளுக்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.பருவ மழை குறைந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அமராவதி அணையை நோக்கி யானை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட வன விலங்குகள் ரோட்டை கடந்து வருகின்றன.இந்நிலையில் ஏழுமலையான் கோவில் முதல் புங்கன் ஓடை பாலம் வரையிலான பகுதியில் ஒற்றை ஆண் யானை மட்டும் நீண்ட கொம்புகளுடன் முகாமிட்டுள்ளது.இவ்வழியே வரும் பஸ், லாரி, சுற்றுலா வாகனங்களை மறித்தும் கண்ணாடிகளை உடைத்தும், அச்சுறுத்தி வருகிறது.

    இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:- வறட்சி காரணமாக வன விலங்குகள் ரோட்டை கடக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. யானை கூட்டத்தில் இருந்து விலகி வந்த நீண்ட தந்தங்களுடன் கூடிய ஓர் ஆண் யானை மிகவும் கோபமான மன நிலையில் ரோடு பகுதியில் முகாமிட்டு வாகனங்களை தாக்கி வருகிறது.சில நாட்களில் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்துள்ளன. உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. எனவே இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
    • ஒளிரும் ஒளிபட்டைகளை வைக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் திருப்பூர் மெயின் ரோட்டில் தனியார் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எரிவாயு குழாய் அமைக்கும் பணிகளை ரோட்டின் ஓரத்தில் அமைக்காமல், ரோட்டின் நடுவில் தோண்டி பதிப்பதால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடும் அவதி ஏற்பட்டது. இதற்கிடையே, சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் அண்ணாதுரை பல்லடம் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.அதைத்தொடர்ந்து கோட்டப் பொறியாளர் தனலட்சுமி, உதவி பொறியாளர் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ரோடு ஓரமாக குழாய் பதிக்க வேண்டும். வாகன ஒட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது.

    எரிவாயு குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளும்போது, இரவில் விபத்துக்கள் நிகழாமல் இருக்க ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் ஒளிரும் ஒளிபட்டைகளை வைக்க வேண்டும். குழாய் பதித்த பின்னர் குழிகளை நன்றாக மண் போட்டு மூட வேண்டும். ரோட்டில் மண் தேங்க கூடாது.இவ்வாறு அவர்கள் அறிவுறுத்தினர்.  

    • மேம்பாலத்தில் இருந்து வந்த கார் சரக்கு வேன் பின்புறம் மோதி நின்றது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேன், காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இன்று பகல் 12 மணியளவில் வாகனங்கள் இடைவிடாமல் இயங்கி கொண்டிருந்தன. இந்தநிலையில் திருப்பூரில் உள்ள டையிங் நிறுவனத்தை சேர்ந்த சரக்கு வேன் ஒன்று பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தது. திருப்பூர் பழைய பஸ் நிலையம் பல்லடம் சாலை தபால் நிலையம் அருகே வந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அவர் மீது மோதாமல் இருக்க சரக்கு வேன் டிரைவர் வேனை ஓரமாக திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் ேமாதி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உயிர் தப்பினர். டிரைவர் சுதாரித்து செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதனிடையே விபத்து நிகழ்ந்த போது மேம்பாலத்தில் இருந்து வந்த கார் சரக்கு வேன் பின்புறம் மோதி நின்றது. காரில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தில் கார் மற்றும் வேனின் முன்பகுதி லேசான சேதமடைந்தது. இந்த விபத்து காரணமாக திருப்பூர் பல்லடம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கார், பஸ்கள் என ஏராளமான வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. இதனால் அவசர வேலையாக சென்றவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேன், காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்தை சீர் செய்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.

    திருப்பூர் பல்லடம் சாலையில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். மேலும் வாகனங்கள் மேம்பாலத்தில் இருந்து கீழ் இறங்கும் போது பழைய பஸ் நிலைய பகுதியில் இருந்து வாகனங்களும், மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்களும் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. மேலும் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றாமல் செல்வதால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. விபத்துகள் நிகழாமல் தடுக்க அங்குள்ள தனியார் ஓட்டல் அருகே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அதேப்போல் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    

    ×