search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவரொட்டிகள்"

    • பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வருகையையொட்டி பல்வேறு இடங்களில் பேனர்கள், சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
    • ஒன்டிவீரன் நிகழ்ச்சிகளுக்கும் பேனர், சுவரொட்டிகள் வைக்க அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செய லாளர் கலைக்கண்ணன், தமிழர் உரிமை மீட்பு களம் லெனின் கென்னடி மற்றும் பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமாரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஜூலை 23-ந்தேதி மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தும் வகையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டது.

    வருகிற 20-ந்தேதி சுதந்திர போராட்ட வீரர் ஒன்டிவீரன் வீரவணக்க நிகழ்ச்சியை முன்னெடுக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்ட அனுமதி கேட்ட போது போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஆனால் நாளை மறுநாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வருகையை யொட்டி பல்வேறு இடங்களில் பேனர்கள், சுவரொட்டிகள் வைக்கப் பட்டுள்ளது. இதற்கு போலீசார் அனுமதி மறுக்கவில்லை. எனவே ஒன்டிவீரன் நிகழ்ச்சிகளுக்கும் பேனர், சுவரொட்டிகள் வைக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஊர் பெயர் பலகையில் திருமண வாழ்த்து உள்ளிட்ட பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது.
    • வெளியூர் வாகன ஓட்டிகள், ஊர் பெயர் தெரியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெளியூரில் இருந்து வருபவர்கள் பாபநாசம் வழியை அடையாளம் காணும் வகையில் நகரின் முக்கிய சாலைகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    பெயர் பலகையை மறைத்து கண்ணீர் அஞ்சலி, திருமண வாழ்த்து ஆகிய போஸ்டர்கள் ஒட்டப்படு வதால்அந்த வழியாக புதிதாக வரும் வாகன ஓட்டிகள், ஊர் பெயர் தெரியாமல் திண்டாடு கின்றனர்.

    மேலும் ஒரு சில இடங்களில் ஊர் பெயர் எழுத்துக்கள் அழிந்து காணப்படுவதோடுபெயர் பலகை கீழே விழுந்து கேட்பார் இன்றி காணப்படுகிறது.

    மேலும் இரவில் வரும் வெளியூர் வாகன ஓட்டிகள், ஊர் பெயர் தெரியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

    தொடர்ந்து ஒட்டப்படும் சுவரொட்டிகளால் ஊர் பெயர் பலகை விளம்பர பலகையாக மாறிவருகிறது.

    உடனடியாக விளம்பர சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுத்து அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை அமைக்கப்படுகிறது.
    • சுவர் விளம்பரங்களை தடுக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

    கோவை,

    கோவை அவினாசி ரோடு மிக முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் ஏராளமான கல்லூரிகள், ஓட்டல்கள், நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் இந்த சாலையில் எப்போது போக்குவரத்து அதிகமாக காணப்படும்.

    இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டே கடந்த பல வருடம் முன்பு 6 வழி சாலையாக மாற்றப்பட்டது. இருந்த போதும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.

    இதையடுத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் போக்குவரத்து வசதிக்காகவும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. 10.10 கி.மீ நீளத்தில் ரூ.1,621.30 கோடி மதிப்பில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

    தற்போது பாலத்தி ற்கான தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோல்டு வின்சிலிருந்து விமான நிலையம் வரை தாங்கு தூண்களில் ஓடுதளம் அமைக்கும் பணி விரைந்து நடைபெற்ற வருகிறது.

    இந்த நிலையில் மாநகராட்சி சுவர் விளம்பரங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக காந்திபுரத்தில் உயர்மட்ட மேம்பால சுவரொட்டிகள் அகற்றப்பட்டு தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது.

    இதன் அடுத்தப்படியாக அவினாசி மேம்பால தூண்களிலும் சுவரொட்டிகள் அகற்றும் பணியில் மாநகராட்சி தீவிரமாக செய்து வருகிறது. மேலும் வருகிற 18-ந் தேதி ஜனாதிபதி கோவை வர உள்ளார். இதனால் தூண்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்து வருகின்றனர்.

    சாலையின் நடுவே உள்ள தடுப்புகள், அவினாசி மேம்பாலம் ரவுண்டானா ஆகிய இடங்களில் வண்ணம் பூசப்பட்டு கோவை புதுப்பொலிவு அடைந்து வருகிறது. 

    • சுவரொட்டிகள், நோட்டீஸ்கள், பதாகைகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
    • சுவர் ஓவியங்களும், மேம்பாலத்தின் தூண்களில் சுவர்களில் தேச தலைவர்களின் படங்கள் ஒட்டப்பட்டும் வருகிறது.

    கோவை:

    கோவை மாநகரில் அரசு கட்டிடங்களின் சுவர்கள், மேம்பாலத்தின் தூண்கள், சுரங்கப் பாதைகள், சாலைகளின் மையத்தடுப்பான்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அரசியல் கட்சியினர், தனி நபர் மற்றும் நிறுவனங்களால் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.

    மேலும் விளம்பரங்கள், வாழ்த்துச் செய்தி, அறிவி ப்புகள் எழுதப்படுகின்றன. தவிர, மின்கம்பங்களில் கயிறுகளை கட்டியும், மரங்களில் ஆணியால் அடித்தும் விளம்பரப்பதாகைகளை தொங்க விடுகின்றனர். சில சுவரொட்டிகள், நோட்டீஸ்கள், பதாகைகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகன ஓட்டுநர்களின் கவனத்தை திசை திருப்பி விபத்துக்கு வழிவகுக்கும் வகையிலும், முகம் சுளிக்கும் வகையிலும் உள்ளதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

    இதனை தடுக்க சுவர் ஓவியங்களும், மேம்பாலத்தின் தூண்களில் சுவர்களில் தேச தலைவர்களின் படங்கள் ஒட்டப்பட்டும் வருகிறது. காந்திபுரம் மேம்பாலத்தின் துண்களில் ஓவியங்கள் வரையும் திட்டத்தையும் கடந்த சில நாட்கள் முன்பு மாநகராட்சி கமிஷனர் தொடங்கி வைத்தார். ஆனாலும் சுவரொ ட்டிகள் ஒட்டப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பொது இடங்கள், அரசு கட்டிடங்கள், சுவர்கள், தெரு விளக்கு கம்பங்கள், சாலை மையத்திட்டுகள், பாலங்கள், இயற்கை வளங்களில் விளம்பரங்கள் எழுதவோ, சுவரொட்டிகள் ஒட்டவோ கூடாது. இதை மீறினால், தொடர்புடைய வர்த்தக நிறுவனம், விளம்பர நிறுவனம், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள், பொது நிகழ்ச்சி, குடும்ப நிகழ்ச்சிக்காக போர்டு வைப்பவர்கள் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    ×