search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை சரக டி.ஐ.ஜி.யிடம் பல்வேறு அமைப்பினர் மனு
    X

    மனு கொடுக்க வந்த பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினரை படத்தில் காணலாம்.

    நெல்லை சரக டி.ஐ.ஜி.யிடம் பல்வேறு அமைப்பினர் மனு

    • பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வருகையையொட்டி பல்வேறு இடங்களில் பேனர்கள், சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
    • ஒன்டிவீரன் நிகழ்ச்சிகளுக்கும் பேனர், சுவரொட்டிகள் வைக்க அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செய லாளர் கலைக்கண்ணன், தமிழர் உரிமை மீட்பு களம் லெனின் கென்னடி மற்றும் பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமாரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஜூலை 23-ந்தேதி மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தும் வகையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டது.

    வருகிற 20-ந்தேதி சுதந்திர போராட்ட வீரர் ஒன்டிவீரன் வீரவணக்க நிகழ்ச்சியை முன்னெடுக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்ட அனுமதி கேட்ட போது போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஆனால் நாளை மறுநாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வருகையை யொட்டி பல்வேறு இடங்களில் பேனர்கள், சுவரொட்டிகள் வைக்கப் பட்டுள்ளது. இதற்கு போலீசார் அனுமதி மறுக்கவில்லை. எனவே ஒன்டிவீரன் நிகழ்ச்சிகளுக்கும் பேனர், சுவரொட்டிகள் வைக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×