search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை
    X

    கோப்புபடம்

    திருப்பூரில் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை

    • திருப்பூர் மாநகரில் கடும் போக்குவரத்து நெருக்கடியும், அடிக்கடி சாலை விபத்துகளும், வாகன விதிமுறை மீறல்களும் நடைபெற்று வந்தது.
    • மது அருந்திவிட்டு செல்பவர்கள், சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    சென்னை உயர்நீதிமன்றம் வாகன விபத்துக்களை தடுக்க வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும். விதிமுறைகளை மீறி ஓட்டுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழக போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருப்பூர் மாநகரில் கடும் போக்குவரத்து நெருக்கடியும், அடிக்கடி சாலை விபத்துகளும், வாகன விதிமுறை மீறல்களும் நடைபெற்று வந்தது. இதனை தடுக்க சில நாட்களாக திருப்பூரின், பழைய பஸ்நிலையம், ஈஸ்வரன் தெரு, மாநகராட்சி முன்பு, குமரன் சாலை, காதர்பேட்டை, புதிய பஸ் நிலையம், கலெக்டர் ஆபிஸ் ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு ஆகிய முக்கிய பகுதிகளில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள், மது அருந்திவிட்டு செல்பவர்கள், சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் விளைவாக தற்போது வாகன விபத்துகள் குறைந்துள்ளது. வாகனம் ஓட்டிச்செல்பவர்கள், சாலையில் நடந்து செல்பவர்கள் அச்சமின்றி சென்று வருகின்றனர். இது தொடர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×