search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரிவாயு குழாய்"

    • கோவையில் மட்டும் 9 லட்சம் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • கோவையில் 300 இயற்கை எரிவாயு விநியோக நிலையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

    கோவை,

    தமிழ்நாட்டில் 3 ஆயிரம் கி.மீ தூரத்திற்கு எரிவாயு குழாய் அமைக்கப்படுமென இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குநர் (குழாய் பதிப்பு பிரிவு) டி.எஸ் நானாவரே தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதில், கோவையும் ஒன்று. இங்கு கடந்த 2019-ம் ஆண்டு முதல் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 3 ஆயிரம் கிலோ மீட்டருக்கு எரிவாயு குழாய்கள் அமைக்கப்படும். உட்பகுதிகளை தவிர்க்க, எங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியே எரிவாயு குழாய்கள் பதித்து வருகிறோம்.

    கோவையில் மட்டும் 9 லட்சம் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்பணி 2027-ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும். மற்ற மாற்று எரிபொருள்களைவிட இயற்கை எரிவாயுவானது (சிஎன்ஜி) 30 சதவீதம் விலை குறைவானது. இதை பயன்படுத்துவது பாதுகாப்பானது. எனவே, கோவையில் 300 இயற்கை எரிவாயு விநியோக நிலையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

    மேலும், குழாய் மூலம் வீடுகள், கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், விடுதிகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்படும். தற்போது நாட்டில் இயற்கை எரிவாயு பயன்பாடு 6.50 சதவீதமாக உள்ளது.

    இதை 2030-ம் ஆண்டில் 15 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏனெனில், அங்குள்ள மலைப்பகுதிகளில் எரிவாயு கொண்டு செல்ல குழாய் பதிப்பது சிரமம். திரவ பெட்ரோலிய வாயுவானது (எல்பிஜி) பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் நமது நாட்டுக்கு தேவையான இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) இங்கேயே போதிய அளவில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    • காலி நிலங்கள் மற்றும் சாலைகள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்
    • மாவட்ட நிர்வாகம் குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய்களை பதிக்க அனுமதிக்க கூடாது

    ஓசூர்,

    கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு கெயில் நிறுவனம் குழாய்கள் மூலம் எரிவாயு கொண்டு செல்லவுள்ளது.

    இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ராயக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில், ஓசூர் அருகேயுள்ள நாகொண்டபள்ளி ஊராட்சிக்குட்பட்ட வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு நடுவே எரிவாயு குழாய்களை பதிக்க கெயில் நிறுவனம் பல இடங்களில் குழாய்களை இறக்கியுள்ளது.

    இதனைப்பார்த்து, அந்த பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் வீடுகளுக்கு அருகே எரிவாயு குழாய்களை பதித்து சென்றால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் ஏற்படும் எனக்கூறி எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தங்கள் குடியிருப்புக்கு நடுவே எரிவாயு குழாய்களை அமைக்க கூடாது என்றும், அந்த பணிகளை உடனடியாகதடுத்து நிறுத்த வேண்டும் எனக்கூறி அப்பகுதி பொதுமக்கள் ஒசூர் உதவி கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு இந்த பணிகளை நிறுத்தி, குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள காலி நிலங்கள் மற்றும் சாலைகள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மாவட்ட நிர்வாகம் குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய்களை பதிக்க அனுமதிக்க கூடாது. இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க விட்டால் குடியிருப்பில் வாழும் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • தோண்டிய குழிகளை சரிவர மூடாமல் விடுவது என அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர்.
    • பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம்- திருப்பூர் மெயின் ரோட்டில் தனியார் நிறுவனத்தினர் எரிவாயு குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முறையாக பணிகளைச் செய்யாமல் பகல் நேரங்களில், குழிகளை தோண்டுவது, தோண்டிய குழிகளை சரிவர மூடாமல் விடுவது என அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார்தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் நேற்று பல்லடம் அருகே உள்ளசின்னக்கரை பகுதியில் சென்ற சரக்கு லாரி ஒன்று எரிவாயு குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் சிக்கிக்கொண்டது.ஓட்டுநர் எவ்வளவோ முயன்றும் குழியில் இருந்து லாரியை எடுக்க முடியவில்லை. இதனால் பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் லாரி மீட்கப்ப ட்டது. எரிவாயு குழாய் பதிக்கும் பணியை முறை ப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
    • ஒளிரும் ஒளிபட்டைகளை வைக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் திருப்பூர் மெயின் ரோட்டில் தனியார் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எரிவாயு குழாய் அமைக்கும் பணிகளை ரோட்டின் ஓரத்தில் அமைக்காமல், ரோட்டின் நடுவில் தோண்டி பதிப்பதால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடும் அவதி ஏற்பட்டது. இதற்கிடையே, சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் அண்ணாதுரை பல்லடம் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.அதைத்தொடர்ந்து கோட்டப் பொறியாளர் தனலட்சுமி, உதவி பொறியாளர் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ரோடு ஓரமாக குழாய் பதிக்க வேண்டும். வாகன ஒட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது.

    எரிவாயு குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளும்போது, இரவில் விபத்துக்கள் நிகழாமல் இருக்க ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் ஒளிரும் ஒளிபட்டைகளை வைக்க வேண்டும். குழாய் பதித்த பின்னர் குழிகளை நன்றாக மண் போட்டு மூட வேண்டும். ரோட்டில் மண் தேங்க கூடாது.இவ்வாறு அவர்கள் அறிவுறுத்தினர்.  

    • நுகர்வோர் பயன்பாட்டிற்கு பூமிக்கு அடியில் கொண்டு செல்ல ப்பட்ட புதைவட மின்கம்பி பாதை திட்டம் மற்றும் தமிழகத்தில் முதல்மு றையாக சமையலறைக்கு கொண்டு செல்லப்பட்ட எரிவாயு குழாய் இணைப்பு பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு செய்தனர்.
    • இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாகை மற்றும் வேளாங்கண்ணியில் தமிழக அரசு 62 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் பூமிக்கு அடியில் புதைவட மின்கம்பி அமைக்கும் பணியை துவங்கின.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நுகர்வோர் பயன்பாட்டிற்கு பூமிக்கு அடியில் கொண்டு செல்ல ப்பட்ட புதைவட மின்கம்பி பாதை திட்டம் மற்றும் தமிழகத்தில் முதல்மு றையாக சமையலறைக்கு கொண்டு செல்லப்பட்ட எரிவாயு குழாய் இணைப்பு பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு செய்தனர்.

    நாகை மாவட்டத்தில் அவ்வப்போது ஏற்படும் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களால் பல்வேறு சமயங்களில் மின் தடை ஏற்படுகிறது. இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாகை மற்றும் வேளாங்கண்ணியில் தமிழக அரசு 62 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் பூமிக்கு அடியில் புதைவட மின்கம்பி அமைக்கும் பணியை துவங்கின. இப்பணிகள் யாவும் முடிவுற்ற நிலையில் 11, ஆயிரம் நுகர்வோர்கள் பயன்பாட்டிற்குகொண்டு வரப்பட்ட புதைவட மின்கம்பி பாதைதிட்ட பணிகளை வேளாங்க ண்ணியில் சட்டமன்ற பேரவை பொது நிறுவ னங்கள் குழுவினர் பார்வை யிட்டனர்.

    தாம்பரம் எம்.எல்.ஏ ராஜா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணசாமி, நாகை மாலி, எஸ்.எஸ்.பாலாஜி, ஜெயக்குமார் உள்ளிட்ட குழுவினர் பணிகள் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து நாகை மாவட்டம் சீயாத்தமங்கையில் பூமிக்கு அடியில் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ள எரிவாயு இணைப்பு நிலையத்தினையும் ஆய்வு செய்தனர்.

    கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு பைப் லைன் மூலமாக சமையலறைக்கு எரிவாயு கொண்டு சென்ற திட்டத்தினை, டோரண்டோ கேஸ் நிறுவனத்தினர் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினருக்கு எடுத்துரைத்தனர். சமையலறைக்கு எடுத்துச் செல்லப்படும் எரிவாயு இணைப்பு திட்டத்தின் விவரங்களை கேட்டறிந்த தமிழக சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு, டோரண்டோ கேஸ் நிறுவனத்தின் பணிகளையும் பாராட்டினர்.

    ×