என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "minister rajendra balaji"
சிவகாசி:
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணியில் பிளவை ஏற்படுத்தலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களது எண்ணம் நிறைவேறாது. தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டது எங்கள் கூட்டணி. நாங்கள் பள்ளி வாசலில் தொழுகை நடத்துவோம். தேவாலயத்தில் பிரார்த்தனை செய்வோம். அனைத்து கோவில்களில் சாமியும் கும்பிடுவோம்.
மகாபாரதத்தில் கிருஷ்ணர் தலைமையில் அவரது ஆலோசனைப்படி பஞ்சபாண்டவர்கள் வெற்றி பெற்றனர். அதேபோல நாங்களும் வெற்றி பெறுவோம். தேர்தல் யுத்தத்தில் மோடிதான் எங்களின் கிருஷ்ணர். அர்ஜுணனாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
8 வழிச்சாலை திட்டத்தை பொதுமக்கள் எதிர்த்தால் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த திட்டத்தை கைவிடலாம். 8 வழிச்சாலை திட்டம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பொதுமக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வார்.
மோடி வாயால் வடை சுடுவார் என மு.க. ஸ்டாலின் எழுதி வைத்து பேசுகிறார். மோடி வடை சுட்டால் அனைவருக்கும் பயன்படும். தி.மு.க.வினர் சூடான எண்ணையை மக்கள் மீது ஊற்றி விடுவார்கள். சாப்பிட்ட வடை, புரோட்டாவுக்கு காசு கேட்டால் முகத்தில் குத்துகிறார்கள். பெண்களிடமே மாமூல் கேட்கும் கட்சி தி.மு.க.
கிருஷ்ணரை கேவலப்படுத்தும் வீரமணியை வைத்துக் கொண்டு திருநீறு பூசுவது போல் நாடகம் போட்டு ஓட்டு வாங்க அலைகின்றனர். தி.மு.க.வினர் வீரமணி பேச்சை திசை திருப்பு வதற்காக நாடகம் நடத்துகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterRajendraBalaji #ADMK
ஸ்ரீவில்லிபுத்தூர்:
தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இது அரசுக்கு பின்னடைவு கிடையாது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யும்.
தொழில் துறை வளர்ச்சிக்கு சாலை வசதி மிகவும் அவசியம். எனவே அடுத்த கட்டமாக கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து பேசி யாரும் பாதிக்காத அளவுக்கு முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார்.
கருத்து கணிப்பை தாண்டி மக்களின் கணிப்பு அ.தி.மு.க. தான். டெல்லியில் மோடி பிரதமராக வர வேண்டும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல, விஷ வாயு என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். எடப்பாடியை எதிர்க்கும் அரசியல் இயக்கம் டெட்பாடி ஆகி விடும்.
எழுதிக் கொடுத்த பேப்பரை பார்த்து தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் படிக்கிறார். சட்டசபையிலும் எழுதி வைத்து தான்பேசுவார்.
கலைஞரிடம் இருந்த திறமை மு.க.ஸ்டாலினிடம் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தலைவர் ஆகி விட்டார்.
மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் டி.டி.வி. தினகரனுக்கு துளியும் இல்லை. அவர் பணம், பணம் என்று தான் உள்ளார். அவரிடம் மனம் இல்லை, குணம் இல்லை.
ஸ்டாலின் ஒரு இடத்தில் மட்டும் கூட்டத்தை நடத்தி கூட்டம் கூட்டுகிறார். பல்வேறு இடங்களுக்குச் சென்று முதல்-அமைச்சரை போல் திறந்த வேனில் ஸ்டாலின் பிரசாரம் செய்வாரா?
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக இருப்பதால் தான் மு.க.ஸ்டாலின் டி-சர்ட் போட்டு நடந்து சென்று ஓட்டு கேட்கிறார். தி.மு.க. ஆட்சி போல் சட்டம், ஒழுங்கு இருந்தால் அவரால் நடக்க முடியுமா?
ஸ்டாலின் பேச்சில் வன்மம் உள்ளது. சண்டையை தூண்டி விடுகிறார். எப்படியாவது ஆட்சியை பிடித்து விடலாம் என்று ஏக்க பெருமூச்சு விடுகிறார். இது நடக்கவே நடக்காது.
40 பாராளுமன்ற தொகுதிகளிலும் 18 சட்டசபை இடைத் தேர்தலிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் தான் வெற்றி பெறும்.
மேற்கண்டவாறு அவர் கூறினார். #ministerrajendrabalaji #admk #mkstalin #salemtochennai8wayroad
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தென்காசி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமியை வெற்றிபெறச் செய்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும். அனைத்து சமுதாய மக்களின் ஆதரவை பெற்ற டாக்டர் கிருஷ்ணசாமிக்கு வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
நெசவு தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு, நெசவு தொழிலில் தற்போதுள்ள நூல் பிரச்சனைகள் குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
தொழிலாளர்களுக்கு விரைவில் கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நெசவாளர்கள் சங்கங்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். நெசவு தொழிலை பாதுகாக்க டாக்டர் கிருஷ்ணசாமியை வெற்றிபெற செய்ய வைத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர்களுடன் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி, சந்திரபிரபா எம். எல்.ஏ., மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரித்தனர்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அழகர்சாமி போட்டியிடுகிறார். அவரது அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியதாவது:-
எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. எங்கள் கட்சியில் உழைப்பவர்களுக்கு மட்டும் தான் சீட் கிடைக்கும். அம்மா இருந்த போதே ஓ.பி.எஸ். மகனுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஜனநாயக கூட்டணி. தி.மு.க. ரவுடி கட்சி. ராதாரவியை சமயம் பார்த்து ஸ்டாலின் பழிவாங்கி விட்டார்.
ஜெயலலிதா இருந்த போதே ஓ.பி.எஸ். மகனுக்கு இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. தி.மு.க.வில் 3-வது தலை முறையாக ஸ்டாலின் மகன் வந்துள்ளார்.
அ.தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்படும். அ.தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. டி.டிவி. தினகரனுக்கு கண்டிப்பாக பொதுச் சின்னம் கிடைக்காது. தேர்தல் கமிஷனில் ஒரு மாதத்திற்கு முன்பே பதிந்திருக்க வேண்டும். சட்டத்தை யாராலும் வளைக்க முடியாது.
ஜல்லிக்கட்டிற்கு தடை போட்டது தி.மு.க. ஆட்சி. தடையை நீக்கியது அ.தி.மு.க. ஆட்சி. மோடியை டாடி எனக் கூறுவதில் என்ன தவறு? இந்திராவை அவர்கள் அன்னை எனக் கூறவில்லையா? நாங்களும் இந்திராவை அன்னை என்றுதானே கூறுகிறோம். மோடியை தந்தை (டாடி) என கூறுவதில் தவறில்லை. எங்கள் கூட்டணி மதச்சார் பற்ற கூட்டணி.
இதற்கு மதச்சாயம் பூசுகிறார்கள். பி.ஜே.பி. ஆட்சி காலத்தில் தான் அப்துல்கலாம் ஜனாதிபதி ஆக்கப்பட்டார்.
ஜார்ஜ் பெர்னான்டஸ் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. 40-க்கு 40 பாராளுமன்ற தொகுதியிலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்றார். #ministerrajendrabalaji
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதனை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார். உதயநிதி ஸ்டாலின் மோடியை வில்லன் என்று கூறி உள்ளார். அவருக்கு வேண்டுமானால் வில்லனாக தெரியலாம். ஆனால் இந்தியாவை பாதுகாக்கும் கதாநாயகன் மோடி. நாட்டுக்கு பிரச்சனை என்றால் அதை தீர்க்கும் ஸ்டண்ட் மாஸ்டர் அவர். சமூக விரோதிகளுக்கு தான் மோடி வில்லன்.
ராகுல்காந்தி வெளியிட்டு இருக்கும் தேர்தல் அறிக்கை மோசடியானது. கனிமொழியின் தாயார் தனது மகள் ஜெயிக்க வேண்டும் என்று கோவிலுக்கு சென்றிருப்பது பாராட்டுக்குரியது. மு.க.ஸ்டாலின் கவுன்சிலர் பதவிக்கு நிற்ககூட தகுதியில்லை என்று கூறியவர் வைகோ.
ஆனால் தற்போது மு.க.ஸ்டாலினுடன்தான் வைகோ கூட்டணி வைத்துள்ளார். தி.மு.க. போட்ட வழக்கில்தான் ஜெயலலிதா மனஉளைச்சல் அடைந்தார். அவரது இறப்புக்கு தி.மு.க.வும் காரணம்.
தினகரன் அனுதாபத்தால் ஓட்டு வாங்க முடியாது. அவர் சர்வாதிகாரிபோல் நடந்து கொள்கிறார். அ.தி.மு.க.வை யாரிடமும் அடகு வைக்கவில்லை. அ.தி.மு.க. தான் ஆளப்போகிறது. தி.மு.க. அதை பார்க்கப்போகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #RajendraBalaji #PMModi
விருதுநகரில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் பாராளுமன்ற தே.மு.தி.க. வேட்பாளர் அழகர்சாமி, சாத்தூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜவர்மன் ஆகியோரை ஆதரித்து பேசியதாவது:-
பிரதமர் நரேந்திரமோடி வலிமையான, எளிமையான, தூய்மையான பிரதமர். பயங்கரவாதத்தை வேரறுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
மன்மோகன்சிங் ஆட்சியின்போது மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் பதில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
தமிழகத்தில் ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பான ஆட்சி நடத்தி வருகின்றனர். 2011-ம் ஆண்டு அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி சாதனை கூட்டணியாக இருந்தது. எதிர்க்கட்சியே இல்லாத நிலையை இந்த கூட்டணி உருவாக்கியது. இந்த கூட்டணி தொடர வேண்டும்.
விஜயகாந்த் தேசப்பற்று மிக்கவர். அவருடைய படத்தில் நல்ல கருத்துக்கள் இடம்பெற்றன. எம்.ஜி.ஆரை போல அவரும் சாமானிய வேட்பாளரைத்தான் விருதுநகர் தொகுதிக்கு அறிவித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளராக விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் மாணிக்தாகூர் போட்டியிடுகிறார். அவர் பணக்காரர். சாமானியர்கள் சாம்ராஜ்யத்தை சரித்ததாக வரலாறு உண்டு.
எளிமையான அழகர் சாமி இந்த தேர்தலில் மாணிக் தாகூரை தோற்கடிப்பார். மாணிக்தாகூர் இங்கு ஏன் போட்டியிடுகிறார்? உ.பி.யில் போய் நிற்க வேண்டியதுதானே. மாணிக் தாகூரை காங்கிரஸ்காரர்களே தோற்கடித்து விடுவார்கள்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பரமசிவ அய்யப்பன் கந்துவட்டிக்காரர். ஓட்டுக்கு பணம் கொடுப்பார். தேர்தலில் தோற்றுவிட்டால் மீண்டும் வாக்காளர்கள் வீட்டுக்கு வந்து கொடுத்த பணத்தை கேட்பார். அந்த பணத்தை வட்டி போட்டு வசூலிப்பார்.
மேற்கண்டவாறு அவர் பேசினார்.
மாணிக்தாகூர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். அவரது பெயர் வடமாநில பெயர் போல இருப்பதால் உ.பி.க்கு செல்ல வேண்டியதுதானே என்று அமைச்சர் பேசியுள்ளார். வேட்பாளரை அமைச்சர் விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #LSPolls #RajendraBalaji
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. ஒரு சில பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
“மது குடிப்பவர்கள் திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் உடனே பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. எனவே, குடிப்பவர்களின் உயிரை காப்பாற்றும் பொருட்டு படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும்” என்றார் அமைச்சர்.
முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுகவில் இருந்து விலகியது குறித்து கேட்டபோது, அவர் விலகி சென்றதால் அதிமுகவுக்கு ஒரு ஓட்டுதான் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. #TNLiquorBan #RajendraBalaji
சிவகாசி அருகே உள்ள ஆமத்தூரைச் சேர்ந்தவர் வீரம்மாள். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் மாடசாமி (வயது 15) படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டு பிளக்ஸ் போர்டு, கட்சி கொடிகள் கட்டும் வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவிலில் டி.டி.வி. தினகரன் பங்கேற்ற அ.ம.மு.க. கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் தினகரனை வரவேற்பதற்காக மதுரை -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
கொடியேற்றும் நிகழ்ச்சி முடிந்தபின் மாடசாமி பிளக்ஸ் போர்டுகளை எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது ரெங்கபாளையம் என்ற இடத்தில் இருந்த பிளக்ஸ் போர்டை எடுப்பதற்காக சாரம் மீது ஏறியபோது மாடசாமி தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதையறிந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, மாடசாமியின் வீட்டிற்கு சென்று அவரது தாயாருக்கும், குடும்பத்திற்கும் ஆறுதல் கூறினார். தொடர்ந்து ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கி அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத்தலைவர் ரமணா உள்பட அ.தி.மு.க.வினர் உடன் இருந்தனர். #MinisterRajendraBalaji
சிவகாசி:
சிவகாசி நகராட்சி முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் சுகாதார திருவிழா இன்று நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. - தி.மு.க. இடையேதான் போட்டி. புதிய தமிழகம், தே.மு.தி.க. வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தே.மு.தி.க. நிச்சயம் எங்கள் அணிக்கு வரும்.
ஜெயலலிதா இருந்த போது பா.ம.க. எங்கள் அணிக்கு வரவில்லை. தற்போது அம்மா இல்லாததால் வலுவான கூட்டணி அமைக்க பா.ம.க,வுடன் சேர்ந்துள்ளோம். கமல், ரஜினியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாங்கள் தற்போது அமைத்துள்ளதுதான் வலுவான கூட்டணி.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விஸ்வநத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-
அ.தி.மு.க. என்ற இயக்கம் எங்கள் நாடி நரம்புகளில் கலந்துவிட்ட ஒன்று. அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களையும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க. வெற்றி கூட்டணியை அமைத்துள்ளது. அ.தி. மு.க. அமைத்துள்ளது மங்களகரமான கூட்டணி. தி.மு.க. அமைத்துள்ளது மங்கிப்போன கூட்டணி. தி.மு.க. கூட்டணி உதிர்ந்து போன கூட்டணி. ஒவ்வாத கூட்டணி. ஒன்றுக்கும் ஆகாத கூட்டணி.
விருதுநகர் மாவட்டத்தை பல்வேறு துறைகளில் முதல் மாவட்டமாக உருவாக்கி உள்ளோம். தற்போது நாட்டில் போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பயங்கரவாதிகள் நமது நாட்டுக்குள் வந்து தாக்குதல் நடத்துகிறார்கள். 40 வீரர்கள் இறந்ததற்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.
வீரத்தில் இந்தியர்கள் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாதிகளை நமது இந்திய ராணுவம் அழித்திருக்கின்றது. தேசிய பற்றுடைய மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வர வேண்டும்.
அமிர்தசரசில் இருந்து லாகூர் சில கிலோ மீட்டர் தான். ஒரு குண்டு போட்டால் உங்களது ஊரே காலியாகி விடும். நாட்டின் பிரதமராக மோடி தொடர்ந்து இருக்க வேண்டும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தமிழக முதலமைச்சராக இருக்க வேண்டும்.
நாட்டு மக்கள் அண்ணா தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள். எம்.பி. தேர்தல், இடைத்தேர்தல்களில் வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். மக்கள் நலன் ஒன்றே தாரக மந்திரம் என்ற அடிப்படையில் செயல்படும் இந்த ஆட்சிக்கு பொதுமக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
மேற்கண்டவாறு அவர் பேசினார். #ADMK #RajendraBalaji #PMModi #Pakistan
சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இவ்வாறு அவர் கூறினார். #RajendraBalaji #ADMK #DMK
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்