search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Millet Recipes"

    • கேழ்வரகில் அதிகளவு கால்சியம் உள்ளது.
    • இந்த தீபாவளிக்கு வித்தியாசமான, சத்தான இந்த பலகாரத்தை செய்து பாருங்களேன்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 500 கிராம்

    வெல்லம் - 250 கிராம்

    தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் பொடி - சிறிதளவு

    எண்ணெய் - பொரித்தெடுக்க

    செய்முறை :

    வெல்லத்தை பாகு காய்ச்சி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அந்த மாவில் பாகு காய்ச்சிய வெல்லத்தை ஊற்றி நன்கு கிளறி வைக்கவும்.

    அதை ஒரு நாள் ஊற விட்டு, மறுநாள் மாவை அதிசரமாக பிடித்து வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்த அதிசரங்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுககவும்.

    இப்போது மிருதுவான, சுவையான கேழ்வரகு அதிரசம் தயார்.

    • குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று கேழ்வரகில் பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருள்கள்:

    கேழ்வரகு மாவு - 1/2 கப்,

    கோதுமை மாவு - 1/2 கப்,

    ஓமம் - சிறிதளவு,

    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி,

    லேசாக சூடு படுத்திய தண்ணீர் - 1/2 கப்,

    உப்பு - தேவையான அளவு,

    ண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கேழ்வரகு மாவு,கோதுமை மாவு, ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய், உப்பு, ஓமம் சேர்த்து நன்றாக கலந்து அதில் சிறிது சிறிதாக லேசாக சூடு படுத்திய தண்ணீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு தடவை பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிக்கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தேய்த்து வைத்த பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு இருபுறமும் பொன்னிறமானவுடன் எடுத்து விடவும்.

    இப்போது சுவையான கேழ்வரகு பூரி ரெடி.

    • சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • இன்று தினை அரிசியில் சர்க்கரை பொங்கல் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையானப் பொருட்கள்

    தினை - 1 டம்ளர்

    பாசிப்பருப்பு - 1/4 டம்ளர்

    தண்ணீர் - 4 1/2 டம்ளர்

    வெல்லம் - 1 டம்ளர் (பொடித்தது)

    ஏலக்காய் - 4

    தேங்காய் துருவல் - 1/4 டம்ளர்

    முந்திரி பருப்பு - 6-8

    செய்முறை

    தினை மற்றும் பாசிப்பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில், 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    பாசிப்பருப்பை கொதிக்கும் நீரில் போட்டு வேகவைக்கவும்.

    பாசிப்பருப்பு பாதி வெந்த பின்னர், தினை அரிசியை போட்டு, மீதமுள்ள 3 1/2 குவளை தண்ணீரையும் ஊற்றவும். இடையிடையே அடிபிடிக்காமல் கிளறி விடவும்.

    தூளாக்கிய வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு 1/4 குவளை நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு அதை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். சுத்தமான வெல்லமாக இருந்தால் அப்படியே பயன்படுத்தலாம்.

    முந்திரி பருப்பை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

    தினை அரிசியும், பாசிப்பருப்பும் நன்றாக வெந்து, குழைவான பதத்தை அடைந்ததும், அதில் பொடித்து வைத்துள்ள வெல்லம் அல்லது வெல்லக் கரைசலை சேர்த்து நன்றாக கிளறவும்.

    ஒரு ஐந்து நிமிடம் வரை அடுப்பில் வைத்திருந்து பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

    அதில் ஏலக்காய் தூள் மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து கிளறவும்.

    தேவைப்பட்டால், பொங்கல் சூடு சற்று குறைந்ததும், தேங்காய் துருவல் சேர்த்து கிளறி சாப்பிடவும்.

    இப்போது சூப்பரான திணை சர்க்கரை பொங்கல் ரெடி.

    • சிறுதானியங்களை அடிக்கடி சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    • சிறுதானியங்களில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    தினை அரிசி - ஒரு கப்

    தேங்காய் - அரை மூடி (துருவி பால் எடுக்கவும்)

    வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

    தண்ணீர் - ஒரு கப்

    பச்சைப் பட்டாணி - அரை கப்

    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்)

    எண்ணெய் - 4 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    பட்டை - 2

    சோம்பு - கால் டீஸ்பூன்

    பிரியாணி இலை - ஒன்று

    ஏலக்காய் - ஒன்று

    செய்முறை:

    தினை அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும்.

    அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, ஒரு கப் தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு, தினை அரிசி சேர்த்து ஒரு கொதிவிடவும்.

    பிறகு, குக்கரை மூடி, ஒரு விசில்விட்டு இறக்கவும்.

    இப்போது சூப்பரான தினை - தேங்காய்ப்பால் புலாவ் ரெடி.

    • இந்த ஸ்நாக்ஸ் ஒரு வாரம் வைத்திருந்து சாப்பிடலாம்.
    • கடையில் வாங்க வேண்டாம். வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    கேழ்வரகு மாவு - 1 கப்

    வெங்காயம் - 1

    பொட்டுக்கடலை மாவு - 2 தேக்கரண்டி

    ப. மிளகாய் - 3

    பெருங்காயம் தூள் - 1 சிட்டிகை

    கறிவேப்பிலை - ஒரு கொத்து

    உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * ப.மிளகாய், வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு அதனுடன் உப்பு, பெருங்காய தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    * பின்பு அதில் கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, மாவு கெட்டியாகும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள ராகி மாவை உதிரி உதிரியாக போட்டு பொரித்து எடுத்தால் சுவையான ராகி பக்கோடா தயார்.

    * இவற்றை அனைவருக்கும் சுடசுட பரிமாறவும்.

    • சிறுதானியங்களில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று தினை அரிசியில் அல்வா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    தினை அரிசி மாவு - 200 கிராம்,

    வெல்லம் - 200 கிராம்,

    ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி,

    சுக்குத்தூள் - 2 சிட்டிகை,

    முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு - தலா 10 கிராம்,

    நெய் - 100 கிராம்.

    செய்முறை

    தினை அரிசி மாவுடன் வெல்லம், தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும்.

    சட்டியில் சிறிது நெய்யை விட்டு சூடாக்கி, கரைத்து வைத்துள்ள மாவை, சிறிது சிறிதாக விட்டு, நன்றாகக் கிளறவும்.

    கட்டியாகாமல் பார்த்துக்கொள்ளவும்.

    இடைவிடாமல் சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.

    அல்வா, சட்டியில் ஒட்டாமல் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் தூவி இறக்கவும்.

    இப்போது சூப்பரான சத்தான தினை அல்வா ரெடி.

    • சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • சிறுதானியங்களில் பல்வேறு ருசியான உணவுகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    சாமை அரிசி - 500 கிராம்,

    வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், சௌசௌ - தலா 100 கிராம்,

    பச்சைப்பட்டாணி - 50 கிராம்,

    தயிர் -அரை கோப்பை,

    இஞ்சி, பூண்டு விழுது, புதினா -தேவையான அளவு,

    சோம்பு, பட்டைப்பொடி - 2 மேசைக்கரண்டி,

    மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க:

    நெய் -100 மி.கி,

    ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு - தலா 2,

    பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.

    செய்முறை

    சாமை அரிசி நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதில் நெய்யைச் சூடானதும், தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் புதினாவை சேர்க்கவும்.

    புதினா நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் காய்கறிகள், பச்சைப்பட்டாணி சேர்த்து மிளகாய்த்தூள், உப்புடன் ஒரு லிட்டர் (5 டம்ளர்) தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்கு கொதி வந்ததும் தயிர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    பின் சாமை அரிசியைச் சேர்த்து நன்கு கிளறவும்.

    பின்பு 5 நிமிடம் தீயை மிதமாக வைத்து மூடி போட்டு வேகவிடவும்.

    பிரியாணி பதம் வந்ததும் இறக்கி புதினா தூவி பரிமாறவும்.

    சூப்பரான சாமை வெஜிடபிள் பிரியாணி ரெடி.

    • சிறுதானியங்களில் இருக்கும் சத்துக்களும் வைட்டமின்களும் எண்ணற்ற பயன்கள் கொண்டவை.
    • கம்பு நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

    தேவையான பொருட்கள்:

    கம்பு மாவு - 2 கப்

    வெல்லம் - 2 கப்

    பாதாம் - 10

    ஏலக்காய் - 10

    பிஸ்தா - 10

    முந்திரி - 10

    திராட்சை - 10

    எண்ணெய் - தேவையான அளவு

    தண்ணீர்- தேவையான அளவு

    செய்முறை :

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு போட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    கொழுக்கட்டை வடிவில் அந்த மாவை பிடித்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த கொழுக்கட்டையை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அது ஆறியவுடன் மிக்ஸியில் மாவாக பொடித்துக் கொள்ள வேண்டும்.

    மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா அனைத்தையும் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் அனைத்தையும் பொடித்துக் கொள்ள வேண்டும்.

    அதே கடாயில் வெல்லம் சேர்த்து பாகு எடுத்து அரைத்த மாவு, பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை, ஏலக்காய் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

    கெட்டி பதத்திற்கு வந்தவுடன் கையில் சூடு பொறுக்கும் வரை லட்டுகளாக பிடித்து எடுத்தால் சூடான சுவையான கம்பு லட்டு தயார்.

    • தினமும் ஒரு வேளை தினையை உணவாக சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
    • தினை அரிசி புரதசத்து அதிகம் உள்ளது. கொழுப்பு சத்து அறவே இல்லாதது.

    தேவையான பொருட்கள் :

    தேங்காய் - அரை மூடி

    நெய் -அப்பம் பொரிக்க

    தினை - 200 கிராம்

    பொடித்த வெல்லம் - ஒரு கப்

    வாழைப்பழம் - 1

    ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.

    செய்முறை:

    தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.

    தினையை வறுத்து மாவாக அரைக்கவும்.

    வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, அதனுடன் தேங்காய்ப் பால், தினை மாவு, ஏலக்காய்த்தூள், வாழைப்பழம் சேர்த்து, நன்கு கெட்டியாகக் கரைக்கவும்.

    குழிப்பணியாரக்கல்லில் நெய் விட்டு , ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான தினை தேங்காய்ப் பால் அப்பம் ரெடி.

    • இந்த விநாயகர் சதுர்த்தியை சத்தான நைவேத்தியம் செய்து கொண்டாடுங்கள்.
    • இந்த கொழுக்கட்டையை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    கம்பு - ஒரு கப்,

    தினை - ஒரு கப்,

    கேழ்வரகு - ஒரு கப்,

    ஏலக்காய் - 4,

    கருப்பட்டி - 3 கப்,

    தேங்காய்த் துருவல் - 1 1/2கப்

    செய்முறை

    கம்பு, தினை, கேழ்வரகு ஆகியவற்றைத் தனித்தனியே வெறும் வாணலியில் போட்டு வறுத்து ஆறவைத்து அவற்றுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் குருணையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கருப்பட்டியை துருவி, மிக்ஸியில் தனியாகப் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    தேங்காய்த் துருவலைத் தனியாக வதக்க வேண்டும்.

    தானிய கலவை, கருப்பட்டி, வதக்கிய தேங்காய்த் துருவல் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது தண்ணீர் தெளித்துக் கொழுக்கட்டையாகப் பிடிக்க வேண்டும்.

    அவற்றை இட்லித் தட்டில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சத்தான சிறுதானிய இனிப்பு கொழுக்கட்டை ரெடி

    • கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • இந்த கொழுக்கட்டையை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    மேல் மாவிற்கு...

    கேழ்வரகு மாவு - 250 கிராம்,

    தண்ணீர் - 1/2 லிட்டர்,

    எண்ணெய் - 50 மி.லி.,

    உப்பு - 20 கிராம்.

    பூரணத்திற்கு...

    எள் - 100 கிராம் (பொடிக்கவும்),

    கருப்பட்டி - 200 கிராம்,

    முழு தேங்காய் - 2 (துருவியது),

    நெய் - 10 கிராம், ஏலக்காய் - 25 கிராம் (பொடிக்கவும்).

    செய்முறை

    மாவிற்கு...

    மிதமான சூட்டில் கடாயில் கேழ்வரகு மாவை கொட்டி வாசனை வரும்வரை வறுக்கவும். வறுத்த மாவு ஆறியதும் உப்பு, வெந்நீர், எண்ணெய் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்தில் நன்கு பிசைந்து கொள்ளவும்.

    பூரணத்திற்கு...

    அடுப்பில் கடாயை வைத்து பொடித்த எள், தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள், கருப்பட்டியை சேர்த்து கிளறி இறக்கவும். மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து உள்ளே பூரணத்தை வைத்து வேண்டிய வடிவத்தில் செய்து வைக்கவும்.

    இவ்வாறு செய்த கொழுக்கட்டைகளை இட்லி பானையில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான கேழ்வரகு பூரண கொழுக்கட்டை ரெடி.

    • வாரம் இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது பற்கள், எலும்புகளுக்கு நல்லது.
    • விரைவில் உடல் எடையை குறைக்க கேழ்வரகு உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்

    வெல்லம் அல்லது கருப்பட்டி - 1 கப் (துருவியது)

    நெய் - 2 மேசைக்கரண்டி

    முந்திரி - 1 தேக்கரண்டி

    கருப்பு எள் - தேக்கரண்டி

    திராட்சை - 1 தேக்கரண்டி

    ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

    சுக்கு தூள் - 1 சிட்டிகை

    செய்முறை :

    * வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். (வெல்லம் கரையும் வரை வைத்தால் போதுமானது)

    * எள்ளை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    * நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும்.

    * கேழ்வரகு மாவை இளஞ்சூடாக வாசனை வரும் வரை வறுத்தெடுத்து, சூடாக இருக்கும் போதே வெல்லம், நெயில் வறுத்த முந்திரி, திராட்சை, எள், ஏலக்காய் தூள், சுக்கு தூள் ஆகியவற்றை அதில் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.

    * சுண்ணாம்பு, இரும்பு, புரதம் நிறைந்த லட்டு தயார்.

    ×