search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூரி"

    • குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • சீஸ் பூரியை வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் செய்து கொடுத்து அசத்தலாம்

    தேவையான பொருட்கள்:

    பூரி மாவிற்கு...

    கோதுமை மாவு - 1 கப்

    ரவை - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர் - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    உள்ளே வைப்பதற்கு...

    துருவிய சீஸ் - 1 கப்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 1

    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை:

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பௌலில் கோதுமை மாவு, ரவை, உப்பு, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து ஈரத் துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்பு உள்ளே வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் ஒரு பௌலில் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    * சிறிது மாவை எடுத்து உருட்டி, அதை சப்பாத்தி போன்று தேய்த்து, அதன் நடுவே சிறிது சீஸ் கலவையை வைத்து மூடி அதை மீண்டும் தட்டையாக பூரி அளவிற்கு தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சீஸ் மசாலா பூரி தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த பூரிக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.
    • இந்த பூரி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - 1 1/2 கப்

    சீரகம் - 1/2 தேக்கரண்டி

    சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி

    எண்ணெய்

    வாழைப்பழம் - 1

    ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி

    சர்க்கரை - 2 தேக்கரண்டி

    தயிர் - 1 மேசைக்கரண்டி

    செய்முறை

    மிக்சியில் வாழைப்பழம, ஏலக்காய் தூள், சர்க்கரை, தயிர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் சீரகம், சமையல் சோடா சேர்த்து நன்றாக கலந்த பின்னர் அரைத்த வாழைப்பழ விழுதை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். இதற்கு தண்ணீர் சேர்க்க தேவையில்லை. அரைத்ததே போதுமானது.

    மாவை நன்றாக பிசைந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    பின்னர் மாவை பூரிகளாக தேய்த்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான வாழைப்பழ பூரி ரெடி.

    • குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று கேழ்வரகில் பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருள்கள்:

    கேழ்வரகு மாவு - 1/2 கப்,

    கோதுமை மாவு - 1/2 கப்,

    ஓமம் - சிறிதளவு,

    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி,

    லேசாக சூடு படுத்திய தண்ணீர் - 1/2 கப்,

    உப்பு - தேவையான அளவு,

    ண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கேழ்வரகு மாவு,கோதுமை மாவு, ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய், உப்பு, ஓமம் சேர்த்து நன்றாக கலந்து அதில் சிறிது சிறிதாக லேசாக சூடு படுத்திய தண்ணீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு தடவை பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிக்கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தேய்த்து வைத்த பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு இருபுறமும் பொன்னிறமானவுடன் எடுத்து விடவும்.

    இப்போது சுவையான கேழ்வரகு பூரி ரெடி.

    மதுரை அம்மா உணவகத்தில் பூரி ஆம்லெட் விற்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    மதுரை

    மதுரை  புதூரில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை நேரத்தில் பூரி, மதியம் நேரத்தில் ஆம்லெட், இரவு நேரத்தில் உப்புமா ஆகியவை விற்கப்படுகின்றன.

    அம்மா உணவகத்தில் இட்லி, பொங்கல், மதிய சாப்பாடு, சப்பாத்தி ஆகியவை மட்டுமே விற்கப்படுவது வழக்கம் ஆனால்  புதூரில் மாநகராட்சி உணவு பட்டியலில் இல்லாத பொருட்கள் விற்பனை செய்யப்படுவது பொதுமக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    புதூர் அம்மா உணவகம் அந்தப் பகுதியில் வசிக்கும் கவுன்சிலர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இதன் மூலம் அவருக்கு தினந்தோறும் ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    இதுதொடர்பாக   மாநகராட்சி 14-வது வார்டு கவுன்சிலர் அந்தோணி அம்மாள் கூறுகையில், “அம்மா உணவகத்தில் அரசு நிர்ணயித்த விலைக்கு மட்டுமே பொருட்கள் விற்கப்படுகின்றன. இதற்கு முன்பு இங்கு வேலை பார்த்த பெண்  உளுந்து மூட்டை கடத்தல் வேலையில் ஈடுபட்டார். அவரை மாநகராட்சி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. அந்தப் பெண்தான் இதுபோல உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருவதாக தெரிவித்து உள்ளார்.

    புதூர் அம்மா உணவகத்தில் மாநகராட்சி உணவு பட்டியலில் இல்லாத பூரி, ஆம்லெட் ஆகியவை விற்பனை செய்யப்படுவது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ×