search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "amma restaurant"

    • உறவினர்கள், கூலித்தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தனர்.
    • மன நோயாளிகள் பிரிவில் மருந்து வழங்கும் இடத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

    ஈரோடு, 

    ஈரோடு அரசு மருத்துவமனை பின்புறம் அம்மா உணவகம் கடந்த 7 ஆண்டுகளாக ஈரோடு மாநகராட்சி சார்பில் இயங்கி வந்தது. இங்கு அரசு மருத்துவமனை நோயாளிகள், அவரது உறவினர்கள், கூலித்தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தனர்.

    குறைந்த விலையில் நிறைவான சாப்பாடு கிடைப்பதால் இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் அரசு மருத்துவமனை பின்புற பகுதியில் பல கோடி மதிப்பில் பல்துறை மருத்துவமனை மைய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

    இந்நிலையில் இந்த பணிக்காக இடம் தேவைப்பட்டதால் அம்மா உணவக கட்டிடத்தை இடிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக மாநகராட்சி இடம் முறையாக அனுமதி பெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மா உணவக கட்டிடம் இடிக்கப்பட்டது.

    இதனையடுத்து தற்போது தற்காலிகமாக அரசு மருத்துவமனை மன நோயாளிகள் பிரிவில் மருந்து வழங்கும் இடத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. அங்கு உணவு பரிமாறப்பட்டு வருகிறது.

    இந்த இடத்தையும் விரைவில் காலி செய்யுமாறு மருத்துமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனையடுத்து அம்மா உணவகத்திற்கு வேறு இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

    • விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் செயல்படும் ‘திடீர்’ அம்மா உணவகம் செயல்படுகிறது.
    • அதிகாரிகள் தகுந்த ஏற்பாடுகளை செய்து பழைய பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விருதுநகர்

    தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது அனைத்து மாவட்டங்களிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. குறைந்த விலையில் இங்கு உணவுகள் விற்கப்பட்டதால் ஏழை-எளிய மக்கள் பயனடைந்தனர்.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தற்போதும் அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.விருதுநகர் நகரில் அரசு ஆஸ்பத்திரி பகுதியிலும், ரெயில்வே பீடர் ரோட்டிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு நாள்தோறும் காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் ஏழை-எளிய மக்கள், தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள் உணவு சாப்பிட்டு வருகின்றனர். ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் பெண்கள் உள்பட 12 பேர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் ரெயில்வே பீடர் அம்மா உணவகத்தில் கடந்த சில மாதங்களாக ரூ.2000-க்கும் குறைவாக விற்பனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அம்மா உணவகத்தில் நாள்தோறும் குறிப்பிட்ட தொகைக்கு உணவுகள் விற்கப்பட வேண்டும். விற்பனை குறைந்தால் அம்மா உணவகம் மூடப்படும் என நகராட்சி நிர்வாகம் கண்டிப்புடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அந்த உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் விற்பனையை அதிகரிப்பதற்காக ரெயில்வே பீடர் அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார நிலையம் முன்பு ஊழியர்கள் தினமும் விற்பனை செய்து வருகின்றனர்.

    சாலையோர கடை போல் இயங்கும் இங்கு பொதுமக்கள், பயணிகள் உணவருந்தி செல்கின்றனர். சாப்பிட்ட பின் இலையை அங்கேயே வீசிவிட்டு நடுரோட்டிலேயே கை கழுவி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    தற்காலிக உணவகம் அமைந்துள்ள பகுதியில் குப்பைகளும், கழிவுகளும் தேங்கியுள்ளன. எனவே விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள திடீர் அம்மா உணவகத்தை சுகாதாரமான முறையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'பழைய பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் ஏழை எளிய மற்றும் பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் திறந்தவெளியில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் விற்கப்பட்டு வருவதால் உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் தகுந்த ஏற்பாடுகளை செய்து பழைய பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

    மதுரை அம்மா உணவகத்தில் பூரி ஆம்லெட் விற்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    மதுரை

    மதுரை  புதூரில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை நேரத்தில் பூரி, மதியம் நேரத்தில் ஆம்லெட், இரவு நேரத்தில் உப்புமா ஆகியவை விற்கப்படுகின்றன.

    அம்மா உணவகத்தில் இட்லி, பொங்கல், மதிய சாப்பாடு, சப்பாத்தி ஆகியவை மட்டுமே விற்கப்படுவது வழக்கம் ஆனால்  புதூரில் மாநகராட்சி உணவு பட்டியலில் இல்லாத பொருட்கள் விற்பனை செய்யப்படுவது பொதுமக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    புதூர் அம்மா உணவகம் அந்தப் பகுதியில் வசிக்கும் கவுன்சிலர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இதன் மூலம் அவருக்கு தினந்தோறும் ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    இதுதொடர்பாக   மாநகராட்சி 14-வது வார்டு கவுன்சிலர் அந்தோணி அம்மாள் கூறுகையில், “அம்மா உணவகத்தில் அரசு நிர்ணயித்த விலைக்கு மட்டுமே பொருட்கள் விற்கப்படுகின்றன. இதற்கு முன்பு இங்கு வேலை பார்த்த பெண்  உளுந்து மூட்டை கடத்தல் வேலையில் ஈடுபட்டார். அவரை மாநகராட்சி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. அந்தப் பெண்தான் இதுபோல உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருவதாக தெரிவித்து உள்ளார்.

    புதூர் அம்மா உணவகத்தில் மாநகராட்சி உணவு பட்டியலில் இல்லாத பூரி, ஆம்லெட் ஆகியவை விற்பனை செய்யப்படுவது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    வெள்ளம் பாதித்த பகுதிகளில் செயல்படும் 2 அம்மா உணவகங்களில் இலவசமாக சாப்பிடவும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் பருவமழையின் தாக்கம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாநகராட்சி செய்து வருகிறது.

    ஏரிகள் திறக்கப்பட்டு இருப்பதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோரத்தில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையையும் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

    அடையார், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் கரையோர மக்கள் பாதுகாப்பாக தங்கும் முகாமிற்கு அழைத்து வரப்படுகிறார்கள். 200 வார்டுகளில் செயல்படும் 403 அம்மா உணவகங்கள் முழுமையாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொது மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் உணவு அருந்தவும் போதுமான அளவு உணவுப் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அம்மா உணவக ஊழியர்கள் 3 வேளையும் தேவைக்கு ஏற்ப உணவுகளை தயாரித்து பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் செயல்படும் 2 அம்மா உணவகங்களில் இலவசமாக சாப்பிடவும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. 20 உணவு தயாரிக்கும் கூடங்களில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் சாப்பிடுவதற்கு உணவு தயாரிக்கப்படுவதாக துணை கமி‌ஷனர் விஷ்ணு மகாஜன் தெரிவித்தார்.

    இதையும் படியுங்கள்... புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 11-ந்தேதி சென்னையை நெருங்கும்: மிக மிக பலத்த மழை எச்சரிக்கை

    சென்னை பாந்தியன் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென ஆய்வு செய்தார். #SPVelumani
    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அம்மா உணவகங்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.8.50 லட்சம் வரை உணவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சென்னை பாந்தியன் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென ஆய்வு செய்தார். அங்கு வழங்கப்படும் உணவு மற்றும் அதன் தரம் குறித்து சோதனை மேற்கொண்டார்.

    மேலும், அங்கு தயாரிக்கப்படும் உணவு தரமானதாகவும், சுகாதாரமானதாகவும், வீட்டில் தயாரிப்பது போன்ற சுவையில் இருக்க வேண்டும் என ஊழியர்களிடம் தெரிவித்த அமைச்சர் வாடிக்கையாளர்களை நல்ல முறையில் உபசரிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘அம்மா உணவகம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் இந்த திட்டத்தை பாராட்டியது மட்டுமின்றி, தங்கள் மாநிலங்களிலும் இதனை செயல்படுத்தியுள்ளன’ என்றார்.

    இந்த ஆய்வின் போது பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் ஆர்.லலிதா, பி.மதுசுதன் ரெட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
    ×