என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உணவு வழங்க தயார் நிலையில் 403 அம்மா உணவகங்கள்
சென்னை:
சென்னையில் பருவமழையின் தாக்கம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாநகராட்சி செய்து வருகிறது.
ஏரிகள் திறக்கப்பட்டு இருப்பதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோரத்தில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையையும் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
அடையார், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் கரையோர மக்கள் பாதுகாப்பாக தங்கும் முகாமிற்கு அழைத்து வரப்படுகிறார்கள். 200 வார்டுகளில் செயல்படும் 403 அம்மா உணவகங்கள் முழுமையாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் உணவு அருந்தவும் போதுமான அளவு உணவுப் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அம்மா உணவக ஊழியர்கள் 3 வேளையும் தேவைக்கு ஏற்ப உணவுகளை தயாரித்து பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் செயல்படும் 2 அம்மா உணவகங்களில் இலவசமாக சாப்பிடவும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. 20 உணவு தயாரிக்கும் கூடங்களில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் சாப்பிடுவதற்கு உணவு தயாரிக்கப்படுவதாக துணை கமிஷனர் விஷ்ணு மகாஜன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 11-ந்தேதி சென்னையை நெருங்கும்: மிக மிக பலத்த மழை எச்சரிக்கை
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்