என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் அம்மா உணவகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு
Byமாலை மலர்15 Oct 2018 10:18 PM GMT (Updated: 15 Oct 2018 10:18 PM GMT)
சென்னை பாந்தியன் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென ஆய்வு செய்தார். #SPVelumani
சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அம்மா உணவகங்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.8.50 லட்சம் வரை உணவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை பாந்தியன் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென ஆய்வு செய்தார். அங்கு வழங்கப்படும் உணவு மற்றும் அதன் தரம் குறித்து சோதனை மேற்கொண்டார்.
மேலும், அங்கு தயாரிக்கப்படும் உணவு தரமானதாகவும், சுகாதாரமானதாகவும், வீட்டில் தயாரிப்பது போன்ற சுவையில் இருக்க வேண்டும் என ஊழியர்களிடம் தெரிவித்த அமைச்சர் வாடிக்கையாளர்களை நல்ல முறையில் உபசரிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘அம்மா உணவகம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் இந்த திட்டத்தை பாராட்டியது மட்டுமின்றி, தங்கள் மாநிலங்களிலும் இதனை செயல்படுத்தியுள்ளன’ என்றார்.
இந்த ஆய்வின் போது பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் ஆர்.லலிதா, பி.மதுசுதன் ரெட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அம்மா உணவகங்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.8.50 லட்சம் வரை உணவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை பாந்தியன் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென ஆய்வு செய்தார். அங்கு வழங்கப்படும் உணவு மற்றும் அதன் தரம் குறித்து சோதனை மேற்கொண்டார்.
மேலும், அங்கு தயாரிக்கப்படும் உணவு தரமானதாகவும், சுகாதாரமானதாகவும், வீட்டில் தயாரிப்பது போன்ற சுவையில் இருக்க வேண்டும் என ஊழியர்களிடம் தெரிவித்த அமைச்சர் வாடிக்கையாளர்களை நல்ல முறையில் உபசரிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘அம்மா உணவகம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் இந்த திட்டத்தை பாராட்டியது மட்டுமின்றி, தங்கள் மாநிலங்களிலும் இதனை செயல்படுத்தியுள்ளன’ என்றார்.
இந்த ஆய்வின் போது பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் ஆர்.லலிதா, பி.மதுசுதன் ரெட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X