search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இனிப்பு"

    • 8 ஆண், 4 பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் பிறந்துள்ளன.
    • தீபாவளி பண்டிகைகளில் குழந்தை பிறந்தது தங்களுக்கு பரிசாக திகழ்கிறது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் கோர்ட்டு அருகில், அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கும்பகோணம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    அதன்படி தினமும் 100-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் அவசர சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது.

    இந்த ஆஸ்பத்திரியில் தினமும் சுகபிரசவமாகவும், அறுவை சிகிச்சையின் மூலமும் ஏராளமான குழந்தைகள் பிறக்கின்றன.

    அதன்படி தீபாவளி பண்டிகை நாளில் 8 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் சுக பிரசவமாக 6 குழந்தைகளும், அறுவை சிகிச்சை மூலம் 6 குழந்தைகளும் பிறந்துள்ளன.

    குழந்தைகளும், தாய்மார்க ளும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

    குழந்தைகளை பெற்றெடுத்த பெண்கள், தீபாவளி பண்டிகை பரிசாக தங்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    • குற்றாலத்தில் குடோனில் வைத்து இனிப்பு வகைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
    • ஆய்வின்போது கெட்டுப்போன, செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்ட இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    தென்காசி:

    தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் இனிப்புகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில் தென்காசி அருகே பிரானூர் பார்டர் மற்றும் குற்றாலத்தில் குடோனில் வைத்து இனிப்பு வகைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனை தென்காசி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் நாக சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்கு கெட்டுப்போன மற்றும் செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்ட இனிப்புகள் 26 கிலோ, சவ்வரிசி 25 கிலோ, கெட்டுப்போன உளுந்து 3 கிலோ, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 250 கிராம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அங்கு வைத்தே கிருமி நாசினி ஊற்றி அழிக்கப்பட்டது. மீண்டும் பயன்படுத்திய 15 லிட்டர் சமையல் எண்ணையும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

    • கிளாங்காடு ஊராட்சியில் 3-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஊராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் புத்தாடைகள், இனிப்பு வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள கிளாங்காடு ஊராட்சியில் 3-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கேக் வெட்டி பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் கால்நடை மருத்துவர் சிவக்குமார், ஊராட்சி செயலர் இசக்கிமுத்து, வார்டு உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள்,தூய்மை காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிளாங்காடு ஊராட்சியில் பணிபுரிந்து வரும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் தீபாவளி பண்டி கைக்கான புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    • ஜெயங்கொண்டம் முத்துச்சேர்வார்மடம் ஊராட்சியில்ரூ.1.50 லட்சம் செலவில் பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு
    • ஊராட்சி மன்ற தலைவர் பாரதி ரமேஷ் வழங்கினார்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மீன்சுருட்டி அருகே உள்ள முத்துச்சேர்வார்மடம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்ற தலைவராக பாரதி ரமேஷ் உள்ளார். இவர் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள், பம்பு ஆப்ரேட்டர்கள், புது வாழ்வு திட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு தனது சொந்த செலவில் புத்தாடை, இனிப்பு வழங்குவது வழக்கம்.

    இந்த ஆண்டு ரெட்டிப்பாளையம், முக்குளம், நல்லிதோப்பு முத்துச்சேர்வார்மடம், சம்போடை, சுண்டிபள்ளம், கங்கவடங்கநல்லூர் உள்ளிட்ட 9 வார்டுகளில் பணிபுரிந்து வரும் 50 பணியாளர்களுக்கு அவர் தனது சொந்த செலவில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

    ஊராட்சி மன்ற தலைவர் பாரதி ரமேஷ் தனது சொந்த செலவில் 4வது ஆண்டாக புத்தாடை, இனிப்புகள், நலத்திட்ட உதவிகள் செய்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் தனது சொந்த முயற்சியினால், வீடு வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் முத்துச்சேர்வார்மடம் ஊராட்சியில் வாழ்ந்து வரும் 3 பழங்குடி இனத்தவர்களுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை அவர் வழங்கினார்.

    இந்த விழாவில் துணைத் தலைவர் அறிவழகன் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.
    • முடிவில் சங்க பொருளாளர் சதா பத்மநாதன் நன்றி கூறினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் ரோட்டரி சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக சங்க செயலாளர் ரோட்டரியன் சோமசுந்தரம் அனைவ ரையும் வரவேற்றார்.

    வட்டார கல்வி அலுவலர்கள் ரோட்டரியன் அறிவழகன், பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ரோட்டரியன் வாசுதே வனின் பங்களி ப்புடன் சிறப்பாக கொண்டா டப்பட்ட விழாவில் சுமார் 30 மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள், இனிப்பு பலகாரங்கள் வழங்கப்பட்டது.

    இதில் ரோட்டரியன் ஏ.ஆர்.ஜான், ரோட்டரியன் தனிகாசலம், பள்ளி தலைமை ஆசிரியர் வேதரத்தினம், ஆசிரியர் சுபாஷ், வார்டு உறுப்பினர் எழிலரசன், ஆசிரியர் வேதரத்தினம் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சங்க பொருளாளர் சதா பத்மநாதன் நன்றி கூறினார்.

    • உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை
    • தயாரிப்பு தேதி தெளிவாக இருக்க வேண்டும்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட நியமன அலுவர் செந்தில் குமார் தலைமையில், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற் பனை செய்யும் வியாபாரி களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    மாவட்டத்தில் உள்ள வட்டாரம், நகராட்சிகளில் செயல்பட்டு வரும் பேக்கரி, இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரித்து விற்பனை செய்பவர்கள், நுகர்வோர்கள் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இனிப்பு, காரவகைகள் விற்பனைக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப் பட்டுள்ளது குறித்து நியமன அதிகாரி செந்தில்குமார் கூறியதாவது:-

    இனிப்பு பாக்சுகளை விற்பனை செய்யும் வணிகர்கள், அந்த பாக்ஸில் இனிப்பு தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் உண்ணத்தகுந்த காலம் ஆகியவற்றை தவறா மல் குறிப்பிட வேண்டும். உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

    இனிப்பு, கார வகைகளை தயாரிக்க பயன்படுத்தப்ப டும் சமையல் எண்ணெய் மற்றும் நெய்யின் விபரங் களை தகவல் பலகையாக உணவு விற்பனை கூடத்தில் வைக்க வேண்டும். சமைப்ப தற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர், தூய்மையாக பாது காக்கப்பட்ட தண்ணீ ராக இருக்கவேண்டும்.

    இனிப்பு காரவகைகளை தயாரிக்க பயன்படுத்தப்ப டும் நீரின் தரத்தினை அறி யும் பொருட்டு பகுப்பாய்வு சான்றிதழ் பெற்று இருத்தல் வேண்டும். சுத்தமான தண்ணீரில் தான் பொருட் களை சுத்தம் செய்ய வேண் டும். உணவு வியாபாரம் முடிந்தவுடன் பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்து பூஞ்சை தொற்று ஏற்படாதவாறு உலர வைத்தல் வேண்டும்.

    உணவு கையாளுதல் மற்றும் பரிமாறுதல் ஆகிய பணிகளை செய்பவர்கள் கையுறைகள், தலைகவசம் மற்றும் மேலங்கிகள் அணிய வேண்டும். உணவு பொருட் களை கையாளுபவர்கள் உடற்தகுதி குறித்த மருத்துவ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

    பொட்டலங்களில் பேக்கிங் செய்து விற்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளில் தயாரிப்பு தேதி, உபயோகப்படுத்தும் காலம், தொகுப்பு எண், தயாரிப்பா ளரின் முகவரி, உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு எண் ஆகி யவை லேபிளில் தெளி வாகத் தெரியும்படி அச்சி டப்பட வேண்டும்.

    பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு விபர சீட்டு இடும் போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி சிறந்த பயன்பாட்டு காலம் (காலா வதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு போன்றவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

    இனிப்பு மற்றும் கார வகைகளை பேக்கிங் செய்து நுகர்வோருக்கு கொடுக்கும் போது உணவு சேமிப்புக் குரிய தரத்துடன் உள்ள பிளாஸ்டிக் கொள்கலன் களையே பயன்படுத்த வேண்டும்.

    பண்டிகை கால இனிப்பு வகைகளை பரிசு பேக்கிங் செய்யும் போது பாலால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை மற்ற இனிப்பு பொருட்களுடன் பேக்கிங் செய்து விற்பனை செய்யக் கூடாது.

    பண்டிகை காலமான தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ள தற்காலிக உணவு கூடங்கள், திருமண மண்ட பங்கள், வீடுகள் ஆகிய இடங்களில் ஆர்டரின் பேரில் விற்பனைக்காகத் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின் படி உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றுத்தான் விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனிப்பு மற்றும் கார வகைகள் சில்லறை விற்பனை செய்யும் பொழுது காட்சிப்ப டுத்தப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் முன் தயா ரிக்கப்பட்ட தேதி மற்றும் சிறந்த பயன்பாட்டு தேதி கண்டிப்பாக எழுதி வைக்க வேண்டும்.

    இனிப்பு, காரவகை உணவுப் பொருட்களை வாங்கும் நுகர்வோர்கள், ஈக்கள் மொய்க்கும் வண் ணம் இனிப்பு, காரவகைகள் திறந்த நிலையில் இருந்தால் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். வாங்கும் இனிப்பு மற்றும் கார வகை களுக்கு முறையான ரசீது பெற்றி ருத்தல் வேண்டும். அதிகப்படி யாக செயற்கை வண்ணங்கள் கொண்டு இனிப்பு பொருட் கள் தயாரிக்கப் பட்டிருந்தால் அதனை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

    பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் முறையான விபரச்சீட்டு உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். உணவு தயாரிப்பாளர்கள் அனை வரும் முறையான பயிற்சி களை பெற்றிருக்க வேண் டும். பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பொட்டலங்களில் பேக்கிங் செய்து விற்கப்படும் இனிப்பு மற்றும் காரவகை பலகா ரங்களை வாங்கும் போது உணவுப்பாதுகாப்பு துறையின் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விபரச்சிட்டு இருந்தால் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.

    மேலும் நுகர்வோர்கள் உணவுப் பொருட்கள் தரம் பற்றிய குறைபாடுகளுக்கு உணவு பாதுகாப்பு துறை யின் வாட்ஸ் ஆப் புகார் எண் 94440 42322 என்ற எண்ணி லோ அல்லது உணவு பாது காப்புதுறை மாவட்ட நியமன அலுவலக தொலைபேசி எண் 04652-276786 என்ற எண்ணிலோ புகார் தெரி விக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உணவு, இனிப்பு பொருட்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும்.
    • ஒவ்வொரு இனிப்பு பொருட்களிலும் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகளை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டு க்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்உள்ள உணவகங்கள் மற்றும் இனிப்பகங்கள் உள்ளி ட்ட கடைகளுக்கு தஞ்சை மாவட்ட உணவுபாதுகாப்பு துறை அதிகாரி சித்ரா தலைமையிலான அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்தனர்.

    இதில் தீபாவளிபண்டிகைக்கு தயாராகி வரும் இனிப்புகள் தரமானதாக உள்ளதா எனவும் அத்தோடு அதில் தயாரிப்பு மற்றும் காலாவதி யாகும் தேதிகள் கட்டாயம் குறிப்பிடப்பட்டு ள்ளதா எனவும் ஆய்வு செய்தனர்.

    இதனை தொடர்ந்து தனியார் திருமண மண்ட பத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் இனிப்பாக உரிமையாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவு மற்றும் இனிப்பாக உரிமை யாளர்களிடத்தில் உணவு பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகள் மற்றும் சில விதிமுறைகள் வழங்கினர்.

    பின்னர் தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சித்ரா செய்தி யாளர்களிடத்தில் கூறுகை யில், ஒவ்வொரு இனிப்பு பொருட்களிலும் தயாரிப்பு தேதி மற்றும் அதன் காலாவதி தேதியை கட்டாயம்குறிப்பிட வேண்டும்.

    இந்த நடை முறையை கட்டாயம் அனைத்து ஹோட்டல் மற்றும் இனிப்பக உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும் என அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் பொது மக்களுக்கு தரமான, பாதுகாப்பான உணவு மற்றும் இனிப்புகளை வழங்க முடியும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் ஹோட்டல்கள் உரிமையாளர் சங்கத் தலைவர் வெங்கடேசன் செயலாளர் அன்பு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • வைர வடிவத்துடன் இருக்கும் அதன் சின்னம் தனித்து நிற்கும் ஒரு பாரம்பரிய இந்திய இனிப்பு.
    • இந்த இனிப்பு உட்கொள்வது ஒருவரின் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருகிறது என்றும் நம்பப்படுகிறது.

    உலகளவில் இருக்கும் சிறந்த உணவு அனுபவங்களைக் கண்டறியும் ஆன்லைன் வழிகாட்டியான பிரபல டேஸ்ட்அட்லாஸ் என்கிற அமைப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதில், உலகளவில் உள்ள சிறந்த 50 இனிப்புகளின் பட்டியலை டேஸ்ட்அட்லாஸ் வெளியிட்டது.

    இதில், இந்தியாவின் பிரபல இனிப்புகளான காஜூ கத்லி மற்றும் ரச மலாய் இடம் பெற்றுள்ளன. இதில், ரச மலாய்க்கு 31வது இடமும், காஜூ கத்லிக்கு 41வது இடமும் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது. 

    இந்தியாவின் ஒரு பிரியமான இனிப்பாக கருதப்படும் ரச மலாய், வைட் க்ரீம், சர்க்கரை, பால் மற்றும் ஏலக்காய் சுவை கொண்ட பன்னீர் சீஸ் கொண்டு தயாரிக்கப்படும் கலவையாகும். இத்துடன், பாதாம், முந்திரி மற்றும் குங்குமப்பூவின் நறுமணத் தொடுகை ஆகியவற்றையும் இனிப்பில் சேர்த்து கூடுதல் சுவை அளிக்கிறது. மேற்கு வங்காளத்தில் இருந்து உருவான ரச மலாய் ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளில் பிரபலமாகும்.

    இதேபோல், காஜூ கத்லி இனிப்பு. பண்டிகை காலங்கள் மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் பலராலும் கவர்ந்திழுக்க கூடிய இனிப்புகளில் ஒன்று காஜூ கத்லி. 

    காஜூ பர்பி என்று அழைக்கப்படும் இந்த இனிப்பு வகை, முந்திரி பருப்பு, சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் நெய், வெண்ணெய் ஆகியவற்றின் கவலையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

    வைர வடிவத்துடன் இருக்கும் அதன் சின்னம் தனித்து நிற்கும் ஒரு பாரம்பரிய இந்திய இனிப்பு வகையாகும்.

    இந்திய கலாச்சாரத்தில், கஜு கட்லியை உட்கொள்வது ஒருவரின் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருகிறது என்றும் நம்பப்படுகிறது.

    ராச மலாய் மற்றும் காஜு கத்லி ஆகிய இனிப்புகள் பட்டியலில் தங்கள் இடங்களை சரியாகப் பெற்றிருந்தாலும், முதல் மூன்று இடங்களில் க்ரீப்ஸ், பாம்போகாடோ மற்றும் கியூசோ ஹெலடோ ஆகிய இனிப்புகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டினர்
    • மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அ.தி.மு.க 52-ம் ஆண்டு தொடக்க விழா மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் க சண்முகம் செய்திருந்தார்.

    தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க கட்சிக்கொடியேற்றி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டினர்.

    நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் டி.கே.டி தேவராஜ், பாசறை மாவட்ட செயலாளரும் நகரமன்ற உறுப்பினருமான அக்கீம்பாபு, மீனவர் அணி செயலாளர் விஷாந்த், பேரூராட்சி செயலாளர் கண்ணபிரான், எம்.ஜி.ஆர் மன்ற நகர தலைவர் ஜெயராமன், அம்மா பேரவை செயலாளர் திவாகர், அவைதலைவர் சிவக்குமார், வர்த்தக அணி செயலாளர் பூக்கடை ஸ்ரீ, அம்மா பேரவை துணைத் தலைவர் சாந்தகுமார், கூட்டுறவு முன்னாள் தலைவர் சங்கர், இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ராஜேஷ், பிரபு, நகரமன்ற உறுப்பினர் லயோலோ குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • உபசரிப்பு என்பது உதட்டளவில் இல்லாமல் மனதளவில் நிறைந்திருக்க வேண்டும்.
    • ஆறு சுவைகளுமே மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படுகின்ற சுவைகளாகும்.

    தமிழர்களின் பண்பாடுகள் எல்லாம் தலைசிறந்த விருந்தோம்பல் என்பதும் ஒன்று. உபசரிப்பு என்பது உதட்டளவில் இல்லாமல் மனதளவில் நிறைந்திருக்க வேண்டும். விருந்தளிக்கும் பொழுது சிறப்பாக எல்லா சுவைகளும் கலந்த விதத்தில் தலை வாழை இலைபோட்டு புன்னகையோடு விருந்தளித்தால் அறுசுவை உணவோடு அற்புதமான சாப்பாடு என்று சொல்வார்கள்.

    அந்த ஆறு சுவைகளுமே மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படுகின்ற சுவைகளாகும். இந்த ஆறு சுவைகளையும் யார் ஒருவர் உட்கொண்டு வந்தாலும் உடலில் நோய்க்கான அறிகுறிகளே இருக்க முடியாது. ஆறுசுவையும் ஒரே காலத்தில் ஒரு சேரக்கிடைப்பது என்பது அரிது. எனவே அதற்கான காலங்கள் வரும் பொழுது அவற்றை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

    ஒவ்வொரு மனிதனும் உடல் நலத்தை பேணுவதற்கு அத்தியாவசியத்தேவை நல்ல சத்துள்ள உணவாகும். இனிப்பு, உப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு என்னும் அறுசுவைகளும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவை. இவற்றை தேவைக்கேற்ப சாப்பிட்டால் தேகநலன் சீராகும்.

    வருடத்தின் முதல் நாள், மாதத்தின் முதல் நாட்களில் முக்கியமாக சதுர்த்தி, பொங்கல் விழா எனப்படும் முக்கிய நாட்களில் பிள்ளையாருக்கு சர்க்கரைப் பொங்கல் வைப்பது வழக்கம். அதில் வெல்லத்தை சேர்த்து இனிப்பு சுவையை கூட்டிக் கொள்கின்றோம். அதேபோல மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு அன்று நமது இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகுவதற்காக உப்பு வாங்குவது வழக்கம். அதை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி வருகின்றோம்.

    நமது உடம்பில் உள்ள எலும்பு, நரம்புகளுக்கு கால்சியம் சத்து தேவை. அதை சோடியம் குளோரைடு என்னும் உப்பின் மூலமாகப் பெறுகின்றோம்.

    வருடப்பிறப்பு அன்று எல்லா சுவைகளும் கலந்த உணவை நம் முன்னோர்கள் வைப்பது வழக்கம். இனிப்பு, உப்பு, கசப்பு. கார்ப்பு. துவர்ப்பு, புளிப்பு ஆகிய ஆறுசுவைக்கும் ஏற்ப சாம்பார். கூட்டு. பொரியல். அப்பளம், பாயசம், வேப்பம்பூ பச்சடி, மாங்காய் இனிப்பு பச்சடி, வாழைப்பூ வடை என்றெல்லாம் வைத்து உணவு பரிமாறிய பிறகு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வைத்து விருந்தினரை கவனிப்பது வழக்கம். பாக்கில் துவர்ப்பு சத்தும் வெற்றிலை ஜீரண சக்தியையும், சுண்ணாம்பு கால்சியம் சத்தையும் கொடுக்கின்றது.

    பொதுவாக வாழ்க்கை என்பது இன்பமும். துன்பமும், நன்மையும். தீமையும் கலந்து வருவதுதான். எந்த விழாவிற்கு சென்றாலும் முதலில் இனிப்புத் தான் கொடுப்பர். பிறந்தநாள் என்றாலும் திருமண நாள் என்றாலும், திருமணத்தில் தாலிகட்டும் நேரத்திலும் இனிப்பு வழங்குவதுதான் வழக்கம். இவ்வாறு விழா நாட்களில் இனிப்பை உட்கொண்டாலும் மற்ற நாட்களில் பிறகவைகளும் நமக்குத் தேவை. எப்படித்தான் இனிப்பு சுவை இருந்தாலும் கசப்பு சுவையும் நம் உடலுக்கு அவசியம் தேவை.

    இன்பத்தை பார்க்கும் நாம் துன்பத் தையும் சமமாகப் பார்க்க வேண்டும். உதாரணமாக கரும்பு இனிப்பின் இருப்பிடம். வேம்பு கசப்பின் இருப்பிட மாகும். இதனால் தான் வருடப் பிறப்பன்று கசப்பாக இருந்தாலும் வேப்பம்பூ பச்சடியை சேர்க்கின்றோம்.

    தை மாதம் இனிப்புச்சுவை தரும் கரும்பினையும் உண்கின்றோம். ஆடி மாதத்தில் அம்பிக்கையைக் கொண்டாட வேப்பிலை எடுத்துச்செல்வர். கூழ் காய்ச்சிக் கொடுப்பதில் வேப்பிலை தூவுவர். வேம்பு என்பது ஒரு கிருமி நாசினி. சர்வரோக நிவாரணி என்று கூடச் சொல்ல லாம். இதைத்தவிர நீரழிவு, புற்றுநோய் தடுப்பு. அம்மை நோய் தடுப்பு, மற்றும் நம் உடலில் உருவாகும் நச்சுக் களை அழிப்பதற்கும் பயன்படுகின்றது.

    வீடுகளில் விருட்சங்களாக வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு தெய்வீக மூலிகை வேம்பாகும். கரும்பிற்கும், வேம்பிற்கும் உள்ள சுவை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தாலும் சுகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் இரண்டும் சமநிலை வகிக்கின்றது.

    உடம்பை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே' என்று திருமூலர் கூறியுள்ளார். எனவே ஆரோக்கியத்தில் அக்கரை செலுத்தினால் தான் சீரோடும். சிறப்போடும் ஒவ்வொருவரும் வாழமுடியும். எனவே அன்றாட வாழ்வில் அறுசுவை உணவால் ஆரோக்கிய வாழ்வை நாம் பெறவாம்.

    • லட்டுக்கள் சூடாகவோ அல்லது குளிராகவோ சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
    • வித்தியாசமாக கொண்டைக்கடலை லட்டு செய்யலாம் வாங்க.

    உடுப்பி, மங்களூர் பகுதியில் உள்ள பல கொங்கனி குடும்பங்களில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி அன்று கிருஷ்ணருக்கு நைவேத்யமாக கொண்டைக்கடலை மாவு லட்டுகள் செய்து பரிமாறப்படுகிறது. இந்த லட்டுகள் கொண்டைக்கடலை மாவு, கொப்பளித்த நெல், வெல்லம் ஆகியவற்றின் கலவையாகும். அவை முந்திரி, காய்ந்த தேங்காய், நெய்யில் வறுத்த எள்ளுடன் சுவையூட்டப்படுகின்றன. இந்த லட்டுக்கள் சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்கும் போது சாப்பிட மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அவை சரியாக செய்யப்பட்டால், அவை பல மாதங்கள் சேமிக்கப்படும்.

    ஆனால் இன்று நாம் வெள்ளை கொண்டைகடலையை ஊறவைத்து அரைத்து, அதனை எண்ணெய் அல்லது நெய்யில் பொறித்து வரும் மாவில் இருந்து வித்தியாசமாக கொண்டைக்கடலை லட்டு செய்யலாம் வாங்க பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    வெள்ளை கொண்டைக்கடலை - 150 கிராம்

    சர்க்கரை - 150 கிராம்

    ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி

    பிஸ்தா, பாதாம் (பொடித்தது) - தேவைக்கு

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    கேசரி பவுடர் (ஆரஞ்சு நிறம்) - தேவைக்கு

    செய்முறை:

    கொண்டைக்கடலையை சுத்தம் செய்து 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்பு அதை வடிகட்டி மிக்சியில் போட்டு அரைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். கொண்டைக்கடலை மாவை தட்டையாக தட்டி எண்ணெயில்  போட்டு பொரித்து எடுக்கவும். ஆறியதும் அதை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதை அடுப்பில் வைக்க வேண்டும். ஒரு கம்பி பதம் அதாவது பிசுபுசுப்பத்தன்மை வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு அதில் கேசரி பவுடர், ஏலக்காய் பொடி சேர்த்து கலக்க வேண்டும்.

    இந்த பாகு கரைசலில் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள கொண்டைக்கடலை மாவினை அதனுடன் சேர்த்து கிளற வேண்டும். இந்த கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்போது நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடித்த முந்திரி, பாதாமை அதில் சேர்க்க வேண்டும். இதனை இளம் சூடாக இருக்கும்போதே. உருண்டைகளாக பிடிக்க வேண்டும். கடைசியாக, நெய்யில் வறுத்த பிஸ்தா, பாதாமை லட்டுகளின் மேல் தூவவும். இப்போது சுவையான 'கொண்டைக்கடலை லட்டு' தயார்.

    • லட்டு என்பது ஒரு பாரம்பரிய இனிப்பு ஆகும்.
    • லட்டை அனைத்து வயதினரும் விரும்புவர்.

    லட்டு என்பது ஒரு பாரம்பரிய இனிப்பு ஆகும், இது சர்க்கரை, கோதுமை மாவு, நெய் மற்றும் பிற பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான இனிப்பு ஆகும். லட்டை அனைத்து வயதினரும் விரும்புவர். லட்டு வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பிடித்த இனிப்பு ஆகும். இது ஒரு சிறந்த ஆரோக்கியமான இனிப்பு ஆகும், இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. லட்டு செய்ய பல வழிகள் உள்ளன. ஸ்ட்ராபெர்ரி பழத்தினை வைத்து வித்தியாசமான முறையில் ஸ்ட்ராபெர்ரி லட்டு செய்யலாம். அதற்கான செய்முறை விளக்கங்களை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பூந்தி தயாரிக்க:

    கடலை மாவு -150 கிராம்

    இளஞ்சிவப்பு நிற சிரப் - 1 தேக்கரண்டி

    உப்பு - ஒரு சிட்டிகை தண்ணீர் - 120 மில்லி

    நெய் - தேவையான அளவு

    சர்க்கரை பாகு தயாரிக்க:

    சர்க்கரை - 150 கிராம்

    ஸ்ட்ராபெர்ரி பழக்கூழ் அல்லது எசென்ஸ் - ஒரு மூடி

    சர்க்கரை - 100 கிராம்

    தண்ணீர் - 150 மில்லி

    பிஸ்தா, பாதாம் - தேவைக்கு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு. இளஞ்சிவப்பு நிற சிரப், தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். இதனை 10 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். மற்றொரு அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் ஸ்ட்ராபெர்ரி பழக்கூழ், சர்க்கரை சேர்த்து கலக்கி, கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும். தேவைப்பட்டால் அதில் சில துளிகள் இளஞ்சிவப்பு நிற சிரப் சேர்க்கலாம்.

    வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்தவும். இப்போது தயாரித்து வைத்திருக்கும் கடலை மாவு கலவையை சல்லடைக் கரண்டி மூலம் அதில் ஊற்றவும். பூந்தி நன்றாக பொரித்து வந்ததும், அதை ஸ்ட்ராபெர்ரி பாகில் போடவும். இந்த பூந்திக் கலவை சூடாக இருக்கும் போதே, உருண்டைகளாக பிடிக்கவும். தேவைப்பட்டால் அதில் சிறிது நெய் சேர்க்கலாம். கடைசியாக, நெய்யில் வறுத்த பிஸ்தா, பாதாமை லட்டுகளின் மேல் தூவவும். இப்போது 'ஸ்ட்ராபெர்ரி லட்டு தயார்.

    ×