search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shawl"

    • நாங்கள் இருவரும் 50 ஆண்டு கால நண்பர்கள் எனக்கு அவர் சகோதரர் மாதிரி
    • பொது இடத்தில சால்வையை தூக்கி எரிந்தது என்னுடைய தவறு. மன்னிப்பு கேட்கிறேன் என்று சிவகுமார் தெரிவித்துள்ளார்

    பொது இடத்தில் சால்வையை தூக்கி எறிந்தது என்னுடைய தவறுதான் மன்னிப்பு கேட்கிறேன் என நடிகர் சிவகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சிவகுமாரும் அவரது நண்பரும் பேசியுள்ளனர்.

    அதில், "நான் சால்வையை தூக்கி எறிந்த நபர் வேறு யாருமில்லை. நாங்கள் இருவரும் 50 ஆண்டு கால நண்பர்கள் எனக்கு அவர் சகோதரர் மாதிரி. 1971-ல் மன்னார்குடியில் ஒரு நாடகத்தை தலைமை தாங்க போயிருந்தேன். அப்போதுதான் இவரை சந்திந்தேன். 1974-ல் நடைபெற்ற எனது திருமணதிற்கு இவர் வந்திருக்கிறார். பின்பு இவரின் கல்யாணத்தையே நான்தான் செய்து வைத்தேன். அதுமட்டுமில்லை அவரின் மகன், பேரன் திருமணத்திற்கும் நான் சென்றுள்ளேன்.

    பொது இடத்தில சால்வை அணிவிப்பது எனக்கு பிடிக்காது. ஆனாலும் பொது இடத்தில சால்வையை தூக்கி எரிந்தது என்னுடைய தவறு. மன்னிப்பு கேட்கிறேன்" என்று சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்பு ஒருமுறை செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை சிவகுமார் தட்டி விட்டது சர்ச்சையானது. அப்போதும் சிவகுமார் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • செஞ்சி பகுதியை சேர்ந்த நெகனூர் மற்றும் இல்லோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொது தேர்வு எழுதிய மாணவர்கள் 100% பேர் தேர்ச்சி பெற்றனர்.
    • செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் அவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    விழுப்புரம்:

    செஞ்சி பகுதியை சேர்ந்த நெகனூர் மற்றும் இல்லோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொது தேர்வு எழுதிய மாணவர்கள் 100% பேர் தேர்ச்சி பெற்றனர். நெகனூர் அரசு பள்ளியில் 42 மாணவர்கள் 51 மாணவிகள் என 93 பேர் தேர்வு எழுதினர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் இல்லோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 41 மாணவர்கள் 34 மாணவிகள் என 75 பேர் தேர்வு எழுதினர். அவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெற்று சாதனை புரிந்தனர். அரசு பள்ளியில் பயின்று நூறு சதவீதம் சாதனை பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

    மேலும் அரசு பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் செஞ்சி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் செந்தமிழ், ஜெயாஷாலினி, கோபிகிருஷ்ணன், குருநாத், உள்ளிட்டவர்களை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் அவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    • நாகை வழியாக வேளாங்கண்ணிக்கு நேற்று இரவு சென்று அடைந்தது.
    • ரெயில் ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    பெங்களூர்- வேளாங்கண்ணி இடையே புதிய வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே துறை அறிவித்தது.

    அந்த அறிவிப்பில் 25-ந் தேதி, வரும் 1, 8 மற்றும் 15-ந் தேதிகளில் ( சனிக்கிழமைகளில்) பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணிக்கும், 26-ந் தேதி, வரும் 2, 9 மற்றும் 16-ந் தேதிகளில் ( ஞாயிற்றுக்கிழமைகளில் ) வேளாங்கண்ணியில் இருந்து பெங்களூருக்கும் இடையே 4 வாரங்கள் புதிய சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக அறிவித்தது.

    அதன்படி இந்த சிறப்பு ரெயிலின் முதல் சேவை நேற்று ( சனிக்கிழமை ) பெங்களூரில் இருந்து தொடங்கியது. நேற்று காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கன்டோன்மென்ட் ,கிருஷ்ணாபுரம், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி ,தஞ்சை, திருவாரூர், நாகை வழியாக வேளாங்கண்ணிக்கு நேற்று இரவு சென்று அடைந்தது.

    வரவேற்பு

    இந்த சிறப்பு ரெயிலை வரவேற்கும் விதமாக தஞ்சாவூருக்கு ரெயில் வந்த போது சில நிமிடம் நின்றது. அப்போது காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்க தலைவர் அய்யனாபுரம் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் ஆகியோர் தலைமையில் ரெயில் ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் ரெயிலில் ஏறி அதில் பயணம் செய்த பயணிகள் மற்றும் இறங்கிய பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர். அப்போது பெங்களூர்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதனிடையே மறுமார்க்கமாக இந்த ரெயில் நேற்று இரவு 11.55 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திருவாரூர், தஞ்சை, திருச்சி, சேலம், ஜோலார்பேட்டை வழியாக இன்று மதியம் பெங்களூருக்கு சென்றடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் கண்ணன், நிர்வாகிகள் பேராசிரியர் திருமேனி, செல்லகணேசன், வக்கீல் உமர்முக்தார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி.
    • மாணவி வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்து பாராட்டி ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி அபிநயா.

    இவர் தமிழ் திறனாய்வு தேர்வில் தமிழக அளவில் நடைபெற்ற தேர்வில் முதலிடம் பெற்றார்.

    சாதனை படைத்த அபிநயாவை ஆசிரியர்கள், மாணவிகள், பாராட்டினர்.

    நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் அழைத்து தனது இருக்கையில் அமரச் செய்து சால்வை அணிவித்து வாழ்த்தினார் .

    இந்நிலையில் நாகை மாவட்ட மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் , அபிநயா வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்து பாராட்டி ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. துணைசெயலாளர் ரவிச்சந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம்முருகையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், நகர செயலாளர் புகழேந்தி , மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தாமரை செல்வன், ஒன்றியகுழு உறுப்பினர் உஷாராணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • புதுகரியப்பட்டி கிராமத்திற்க்கு அரசு பஸ் மீண்டும் இயக்கப்படும்.
    • டிரைவர், கண்டக்டருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

    வல்லம்:

    தஞ்சாவூரிலிருந்து புதுகரியப்பட்டி கிராமத்திற்க்கு செங்கிப்பட்டி வழியாக இயக்கப்பட்ட அரசு நகர பேருந்து கொரோனா பொது முடக்கத்திலிருந்து நிறுத்தப்பட்டிருந்தது.

    இப்பேருந்தை மீண்டும் அதே வழிதடத்தில் இயக்கிட கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த செப்டம்பர் 26 அன்று செங்கிப்பட்டியில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதனைதொடர்ந்து செப்டம்பர் 24 அன்று பூதலூர் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தஞ்சாவூர் கோட்ட மேலாளர் செந்தில்குமார், கிளை மேலாளர் திருஞானம் ஆகியோர் தஞ்சாவூரிலிருந்து புதுகரியப்பட்டி கிராமத்திற்க்கு அரசு நகர பேருந்து மீண்டும் இயக்கப்படும் என உறுதியளித்த அடிப்படையில் இன்றைய தினத்திலிருந்து மீண்டும் பேருந்து இயக்கப்பட்டது.

    இந்நிலையில் செங்கிப்பட்டியில் இன்று காலை 07 மணிக்கு வந்த இப்பேருந்திற்க்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமையில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பேருந்திற்க்கு மாலை அணிவித்து, ஓட்டுனர், நடத்துனருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

    நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றிய செயலாளர் இரா.முகில், செங்கிப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் லதா சுப்பிரமணியன், நிர்வாகிகள்ஜி.தங்கமணி, அய்யாராசு, பெரியசாமி, சம்சுதீன், இப்ராகிம் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பேருந்திற்க்கு வரவேற்பளித்தனர்.

    • இருக்கையில் அமரவைக்கப்பட்டு சால்வை அணிவித்து மாணவி கவுரவிக்கப்பட்டார்.
    • மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    மன்னார்குடி:

    குழந்தைகள் தினத்தை யொட்டி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை அரசு பள்ளியின் ஒருநாள் தலைமை ஆசிரியராக 11 ஆம் வகுப்பு மாணவி யுவஸ்ரீ பதவி வகித்தார்.

    நாடுமுழுவதும் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் அப்பள்ளியில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவி யுவஸ்ரீக்கு இன்று ஒருநாள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    மாணவி யுவஸ்ரீ தலைமை ஆசிரியர் இருக்கையில் அமரவை க்கப்பட்டு சால்வைகள் அணிவித்து மாணவி கௌரவிக்கப்பட்டார்.

    பின்னர் மாணவி யுவஸ்ரீ வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களிடம் கலந்துரையாடினார். குழந்தைகள் தினத்தை யொட்டி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    பின்னர் அப்பள்ளி மாணவர்கள் ஆயிரம் பேருக்கு பிரியாணி மதிய உணவாக வழங்கி கொண்டாடப்பட்டது. முன்னதாக காலையில் நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர் மித்தேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலாஜி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கயல்விழிபொய்யாமொழி, இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

    • 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.
    • மாணவிக்கு சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி எம்.எல்.ஏ வாழ்த்துகளை தெரிவித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் ஆதர்ஷ் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி கிருஷாந்தா, மத்தியப்பிரதேசம் இந்தூரில் நடைபெற்ற எஸ்பிகேஎப் 7வது நேசனல் கேம்ஸ் 2022 விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, 200 மீட்டர் குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார்.

    இதன்மூலம் அடுத்த மாதம் நேபாளில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

    அவருக்கு நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ் சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

    மாணவிக்கு பயிற்சி வழங்கியஏ.ஐ.ஒ விளையாட்டு அகாடமிக்கும், ஆதர்ஷ் பள்ளிக்கும் எம்.எல்.ஏ பாராட்டு தெரிவித்தார்.

    அதுபோல், திட்டச்சேரி ப.கொந்தகை அண்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், ஹரிஹரசுதன் - வெற்றிவேல் நினைவாக நடைபெற்ற, 39-ம் ஆண்டு மாபெரும் கபடி தொடர் போட்டி நிகழ்வில் நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ் கலந்து கொண்டு கபடி வீரர்களுக்கு வாழ்த்து கூறினார்.

    • பிறந்தநாளை யொட்டி காமராஜர் குறித்து பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது.
    • போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் திருத்துறை–ப்பூண்டி இணைந்து நடத்திய பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தின கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர்தங்கராசு தலைமை வகித்தார். சோமநாதன், பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர், கோ.பழனி, ஊராட்சி மன்றத்தலைவர், இரா.சதீஷ்குமார், ஊராட்சி துணை தலைவர் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.தனபாலன் உதவி தலைமை ஆசிரியர் வரவேற்றார். ராய் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் முனைவர் நா.துரை ராயப்பன், ரோட்டரி சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்

    உத்தமசோழன், ஆசிரியர் கிழக்கு வாசல் சிறப்புரையாற்றினார். காமராஜர் குறித்து பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ராய் டிரஸ்ட் சார்பாக பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.ரோட்டரி சங்கத் தலைவர் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். யோகராசன் பட்டதாரி ஆசிரியர் நன்றி கூறினார். ஏற்பாட்டை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் கோவி. வேதகிருஷ்ணன் மற்றும் ப.வரதராஜன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    ×