search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு
    X

    தங்கம் வென்ற மாணவியை ஷாநவாஸ் எம்.எல்.ஏ பாராட்டினார்.

    குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு

    • 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.
    • மாணவிக்கு சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி எம்.எல்.ஏ வாழ்த்துகளை தெரிவித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் ஆதர்ஷ் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி கிருஷாந்தா, மத்தியப்பிரதேசம் இந்தூரில் நடைபெற்ற எஸ்பிகேஎப் 7வது நேசனல் கேம்ஸ் 2022 விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, 200 மீட்டர் குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார்.

    இதன்மூலம் அடுத்த மாதம் நேபாளில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

    அவருக்கு நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ் சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

    மாணவிக்கு பயிற்சி வழங்கியஏ.ஐ.ஒ விளையாட்டு அகாடமிக்கும், ஆதர்ஷ் பள்ளிக்கும் எம்.எல்.ஏ பாராட்டு தெரிவித்தார்.

    அதுபோல், திட்டச்சேரி ப.கொந்தகை அண்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், ஹரிஹரசுதன் - வெற்றிவேல் நினைவாக நடைபெற்ற, 39-ம் ஆண்டு மாபெரும் கபடி தொடர் போட்டி நிகழ்வில் நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ் கலந்து கொண்டு கபடி வீரர்களுக்கு வாழ்த்து கூறினார்.

    Next Story
    ×