search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dessert"

    • தினை கீர் ட்ரை பண்ணி பாருங்க.
    • வித்தியாசமான முறையில் தினை கீர் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

    ஏதாவது வித்தியாசமா சமைக்கனுமா? அப்போ இந்த தினை கீர் ட்ரை பண்ணி பாருங்க. சுவையான வித்தியாசமான முறையில் தினை கீர் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    தினை அரிசி- அரை கப்

    சர்க்கரை- 100 கிராம்

    கோவா- 50 கிராம் (சர்க்கரை இல்லாதது)

    நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் தலா- ஒரு டீஸ்பூன்

    கசகசா- 10 கிராம்

    ஏலக்காய்- 2

    பால்- டீஸ்பூன்

    குங்குமப்பூ- ஒரு சிட்டிகை

    செய்முறை:

    தினை அரிசியை தண்ணீரில் களைந்து சுத்தம் செய்து குக்கரில் குழைய வேகவைக்கவும். கசகசாவுடன் ஏலக்காய், பால் சேர்த்து விழுதாக அரைக்கவும். இனிப்பு இல்லாத கோவாவை உதிர்த்து போட்டு நன்றாக பிசைந்து சேர்க்க வேண்டும். அதனுடன் வேகவைத்துள்ள தினையையும், அரைத்த விழுது, சர்க்கரை மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்க்கவும். இறுதியாக குங்குமப்பூ (தேவைப்பட்டால்) தூவி பரிமாறினால் சுவையான தினை கீர் தயார். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறலாம்.

    • லட்டுக்கள் சூடாகவோ அல்லது குளிராகவோ சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
    • வித்தியாசமாக கொண்டைக்கடலை லட்டு செய்யலாம் வாங்க.

    உடுப்பி, மங்களூர் பகுதியில் உள்ள பல கொங்கனி குடும்பங்களில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி அன்று கிருஷ்ணருக்கு நைவேத்யமாக கொண்டைக்கடலை மாவு லட்டுகள் செய்து பரிமாறப்படுகிறது. இந்த லட்டுகள் கொண்டைக்கடலை மாவு, கொப்பளித்த நெல், வெல்லம் ஆகியவற்றின் கலவையாகும். அவை முந்திரி, காய்ந்த தேங்காய், நெய்யில் வறுத்த எள்ளுடன் சுவையூட்டப்படுகின்றன. இந்த லட்டுக்கள் சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்கும் போது சாப்பிட மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அவை சரியாக செய்யப்பட்டால், அவை பல மாதங்கள் சேமிக்கப்படும்.

    ஆனால் இன்று நாம் வெள்ளை கொண்டைகடலையை ஊறவைத்து அரைத்து, அதனை எண்ணெய் அல்லது நெய்யில் பொறித்து வரும் மாவில் இருந்து வித்தியாசமாக கொண்டைக்கடலை லட்டு செய்யலாம் வாங்க பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    வெள்ளை கொண்டைக்கடலை - 150 கிராம்

    சர்க்கரை - 150 கிராம்

    ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி

    பிஸ்தா, பாதாம் (பொடித்தது) - தேவைக்கு

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    கேசரி பவுடர் (ஆரஞ்சு நிறம்) - தேவைக்கு

    செய்முறை:

    கொண்டைக்கடலையை சுத்தம் செய்து 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்பு அதை வடிகட்டி மிக்சியில் போட்டு அரைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். கொண்டைக்கடலை மாவை தட்டையாக தட்டி எண்ணெயில்  போட்டு பொரித்து எடுக்கவும். ஆறியதும் அதை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதை அடுப்பில் வைக்க வேண்டும். ஒரு கம்பி பதம் அதாவது பிசுபுசுப்பத்தன்மை வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு அதில் கேசரி பவுடர், ஏலக்காய் பொடி சேர்த்து கலக்க வேண்டும்.

    இந்த பாகு கரைசலில் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள கொண்டைக்கடலை மாவினை அதனுடன் சேர்த்து கிளற வேண்டும். இந்த கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்போது நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடித்த முந்திரி, பாதாமை அதில் சேர்க்க வேண்டும். இதனை இளம் சூடாக இருக்கும்போதே. உருண்டைகளாக பிடிக்க வேண்டும். கடைசியாக, நெய்யில் வறுத்த பிஸ்தா, பாதாமை லட்டுகளின் மேல் தூவவும். இப்போது சுவையான 'கொண்டைக்கடலை லட்டு' தயார்.

    • புதுகரியப்பட்டி கிராமத்திற்க்கு அரசு பஸ் மீண்டும் இயக்கப்படும்.
    • டிரைவர், கண்டக்டருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

    வல்லம்:

    தஞ்சாவூரிலிருந்து புதுகரியப்பட்டி கிராமத்திற்க்கு செங்கிப்பட்டி வழியாக இயக்கப்பட்ட அரசு நகர பேருந்து கொரோனா பொது முடக்கத்திலிருந்து நிறுத்தப்பட்டிருந்தது.

    இப்பேருந்தை மீண்டும் அதே வழிதடத்தில் இயக்கிட கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த செப்டம்பர் 26 அன்று செங்கிப்பட்டியில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதனைதொடர்ந்து செப்டம்பர் 24 அன்று பூதலூர் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தஞ்சாவூர் கோட்ட மேலாளர் செந்தில்குமார், கிளை மேலாளர் திருஞானம் ஆகியோர் தஞ்சாவூரிலிருந்து புதுகரியப்பட்டி கிராமத்திற்க்கு அரசு நகர பேருந்து மீண்டும் இயக்கப்படும் என உறுதியளித்த அடிப்படையில் இன்றைய தினத்திலிருந்து மீண்டும் பேருந்து இயக்கப்பட்டது.

    இந்நிலையில் செங்கிப்பட்டியில் இன்று காலை 07 மணிக்கு வந்த இப்பேருந்திற்க்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமையில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பேருந்திற்க்கு மாலை அணிவித்து, ஓட்டுனர், நடத்துனருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

    நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றிய செயலாளர் இரா.முகில், செங்கிப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் லதா சுப்பிரமணியன், நிர்வாகிகள்ஜி.தங்கமணி, அய்யாராசு, பெரியசாமி, சம்சுதீன், இப்ராகிம் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பேருந்திற்க்கு வரவேற்பளித்தனர்.

    • பிறந்தநாளை யொட்டி காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • தஞ்சை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமை வகித்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட காங்கிரஸ் (தெற்கு) சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்ததினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமை வகித்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

    முன்னதாக ஐ.என்.டி.யூ.சி மாவட்ட பொதுச்செயாலளர் பூதலூர் என்.மோகன்ராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்டிதம்பட்டு ஆர்.கோவிந்தராஜூ, மாவட்ட ஊடக பிரிவுதலைவர் பிரபு மண்கொண்டார், சோழ மண்டல சிவாஜி பாசறைத்தலைவர் சதா வெங்கட்ராமன், மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாநகர மாவட்ட கோட்டத்தலைவர் கதர்வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் களிமேடு ராமலிங்கம், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரமேஷ்சிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏரிப்புரக்கரை ராஜேந்திரன், தேசிகன், அய்யாறு, சுந்தர், பாலசுப்ரமணியன் காலிங்கராயர், பின்னையூர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ×