search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
    X

    தஞ்சை மாவட்ட காங்கிரஸ் (தெற்கு) சார்பாக மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமையில் தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

    • பிறந்தநாளை யொட்டி காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • தஞ்சை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமை வகித்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட காங்கிரஸ் (தெற்கு) சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்ததினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமை வகித்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

    முன்னதாக ஐ.என்.டி.யூ.சி மாவட்ட பொதுச்செயாலளர் பூதலூர் என்.மோகன்ராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்டிதம்பட்டு ஆர்.கோவிந்தராஜூ, மாவட்ட ஊடக பிரிவுதலைவர் பிரபு மண்கொண்டார், சோழ மண்டல சிவாஜி பாசறைத்தலைவர் சதா வெங்கட்ராமன், மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாநகர மாவட்ட கோட்டத்தலைவர் கதர்வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் களிமேடு ராமலிங்கம், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரமேஷ்சிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏரிப்புரக்கரை ராஜேந்திரன், தேசிகன், அய்யாறு, சுந்தர், பாலசுப்ரமணியன் காலிங்கராயர், பின்னையூர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×