search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்கோடா"

    • கீரை சாப்பிடாத குழந்தைகளும் இந்த ஸ்நாக்ஸை விரும்பி சாப்பிடுவார்கள்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    ஏதாவது ஒரு கீரை - 1 கட்டு

    கடலை மாவு - 2 கப்

    அரிசி மாவு - 4 டீஸ்பூன்

    முந்திரிப்பருப்பு - தேவைக்கேற்ப

    பச்சை மிளகாய் - 4

    இஞ்சி - சிறு துண்டு

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

    செய்முறை :

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முந்திரிப்பருப்பு, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றுடன் இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை சேர்த்து பக்கோடா மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

    தண்ணீர் சேர்த்து பிசிறினாற்போல் உதிரியாக தயாரிக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் 2 டீஸ்பூன் எடுத்து பக்கோடா மாவில் விட்டு பிசிறி கொள்ளவும்.

    எண்ணெய் காய்ந்ததும் மாவை சிறிது சிறிதாக கிள்ளிப்போட்டு எடுக்கவும்.

    இப்போது சூப்பரான கீரை பக்கோடா ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தயிர் வடை கேள்விப்பட்டிருப்பீங்க. அது என்ன தயிர் பக்கோடா?
    • வாங்க இன்னைக்கு இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    தயிர் - 400 கிராம்

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

    கரம் மசாலா - அரை டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தண்ணீர் - 3 கப்

    பக்கோடா செய்ய :

    கடலை மாவு - 1 கப்

    சீரகம் - 4 டீஸ்பூன்

    மஞ்சள் - 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    உப்பு - 1/2 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 2

    கொத்தமல்லி - சிறிதளவு

    தாளிக்க :

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    சீரகம் - 1/4 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 1

    செய்முறை :

    வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் , நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய் ஊற்றி கடலை மாவுக் கலவையை பக்கோடா போல் உதிர்த்து போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் தயிர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். இறுதியாக தண்ணீர் ஊற்றி கலந்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், கரம் மசாலா பொடி சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.

    இவை நன்கு வதக்கியபின் கலந்து வைத்துள்ள தயிர் கலவையை அதில் ஊற்றவும்.

    ஒரு முறை கொதித்ததும் வறுத்து வைத்துள்ள பக்கோடாவை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி இறக்கி பரிமாறவும்.

    அடுப்பில் இருந்து இறக்கி அரை மணி நேரம் கழித்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    இப்போது சூப்பரான தயிர் பக்கோடா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ஸ்நாக்ஸ்.
    • இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பிரெட் - 5 துண்டு,

    பெரிய வெங்காயம் - 2,

    பச்சை மிளகாய் - 4,

    உப்பு - தேவையான அளவு,

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,

    சீரகம் - அரை டீஸ்பூன்,

    கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்,

    பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை,

    காய்கறி - கால் கப்.

    செய்முறை :

    ஒரு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    சீரகத்தை கொரகொரப்பாக பொடித்துகொள்ளவும்.

    காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸியில் பிரெட் துண்டுகளை பிய்த்து பிய்த்து போட்டு அதனுடன் பெரிய வெங்காயம், 4 பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள், சீரகம், கடலை மாவு, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    அடுத்துஅதில் பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து நன்கு கெட்டியாக உருண்டை பிடிக்கும் அளவிற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    பக்கோடா மாவு பதம் வந்த பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மீடியம் பிளேமில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக பக்கோடா மாவை எடுத்து போட்டு எல்லா பக்கமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுக்க வேண்டும்.

    ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த பிரெட் பக்கோடா எண்ணெய் குடிக்காது.

    சாதாரண வெங்காய பக்கோடாவை விட கூடுதல் சுவையுடன் நிச்சயம் இருக்கும்.

    சட்டென ஐந்தே நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த பிரட் பக்கோடா டொமேட்டோ சாஸ் உடன் தொட்டு கொண்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.

    மாலையில் டீயுடன் சாப்பிடலாம் வயிறு நிறைவாக இருக்கும்.

    • முருங்கைக் கீரையில் பொரியல், கூட்டு செய்து இருப்பீங்க.
    • இன்று முருங்கைக் கீரையில் பக்கோடா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கடலை மாவு - 200 கிராம்

    வெங்காயம் - 50 கிராம்

    முருங்கைக் கீரை - 2 கைப்பிடி அளவு

    நறுக்கிய பச்சை மிளகாய் - 2

    நெய் - ஒரு டீஸ்பூன்

    சோம்பு - ஒரு டீஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    முருங்கைக் கீரையை காம்பு இல்லாமல் இலையை மட்டும் ஆய்ந்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் உருக்கிய நெய்யுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக் கீரை, சோம்பு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    பின்பு சிறிது நீர் தெளித்து கையால் நன்றாக கலக்கிக் கொள்ளவும். மாவு உதிரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயக் கலவையை உதிரி உதிரியாகப் போட்டு, பொன்னிறமாக சிவந்து வரும்வரை பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான முருங்கைக் கீரை பக்கோடா ரெடி.

    • சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    • காபி, டீயுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    பெரிய வெங்காயம் - கால் கிலோ,

    கடலை மாவு - 150 கிராம்,

    அரிசி மாவு - 25 கிராம்,

    கறிவேப்பிலை - 2 ஆர்க்கு,

    இஞ்சி - ஒரு துண்டு,

    பச்சை மிளகாய் - 5

    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு,

    எண்ணெய் - 300 கிராம்.

    செய்முறை:

    பெரிய வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவை போட்டு நன்றாக கலந்த பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் சூடான எண்ணெய் 2 டீஸ்பூன், சிறிது தண்ணீர் தெளித்து பக்கோடா மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சூடான எண்ணெயில் உதிர்த்து போட்டு சிவக்க பொரிக்கவும். விருப்பப்பட்டால்... 4, 5 பூண்டுப் பற்களை நசுக்கி சேர்க்கலாம்.

    இப்போது சூப்பரான தூள் பக்கோடா ரெடி.

    • பாகற்காய் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • பாகற்காயில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாகற்காய் - 200 கிராம்,

    கடலை மாவு - 100 கிராம்,

    அரிசி மாவு - 20 கிராம்,

    ஓமம் - கால் டீஸ்பூன்,

    ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை,

    மோர் - சிறிதளவு,

    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,

    மிளகாய்த்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    பாகற்காயை விதை நீக்கி வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

    நீரை சூடாக்கி பாகற்காயை போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டவும்.

    பிறகு பாகற்காயை மோரில் போட்டு 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். அப்போது தான் கசப்பு இருக்காது.

    அடுத்து பாகற்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கடலை மாவு, அரிசிமாவு, உப்பு, மிளகாய்த்தூள், ஓமம் மற்றும் ஃபுட் கலர் சேர்த்து, நீர் தெளித்து நன்கு பிசிறவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்தக் கலவையை சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பாகற்காய் பக்கோடா ரெடி.

    • கேழ்வரகில் சத்தான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று கேழ்வரகு பக்கோடா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 100 கிராம்,

    அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,

    தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்,

    வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 1

    இஞ்சி - சிறிய துண்டு

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,

    உப்பு - தேவையான அளவு,

    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி - கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்துக் கொள்ளவும்.

    * சூப்பரான சத்தான கேழ்வரகு பக்கோடா ரெடி.

    • குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று மீன் பக்கோடா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    முள் நீக்கிய மீன் துண்டுகள் - கால் கிலோ

    முட்டை - 2

    சோளமாவு - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - சிறிதளவு

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை:

    மீன் துண்டுகளை நன்றாக கழுவி இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ளவும். பின்னர் அவைகளை உதிர்த்துக்கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் முட்டையை அடித்து ஊற்றி நன்றாக கலக்கி அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோள மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

    அதனுடன் மீன் துண்டுகளை கொட்டி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் இந்த மீன் கலவையை கொதிக்கும் எண்ணெய்யில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்தெடுக்கவும்.

    ருசியான மீன் பக்கோடா தயார்.

    • இந்த ஸ்நாக்ஸ் ஒரு வாரம் வைத்திருந்து சாப்பிடலாம்.
    • கடையில் வாங்க வேண்டாம். வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    கேழ்வரகு மாவு - 1 கப்

    வெங்காயம் - 1

    பொட்டுக்கடலை மாவு - 2 தேக்கரண்டி

    ப. மிளகாய் - 3

    பெருங்காயம் தூள் - 1 சிட்டிகை

    கறிவேப்பிலை - ஒரு கொத்து

    உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * ப.மிளகாய், வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு அதனுடன் உப்பு, பெருங்காய தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    * பின்பு அதில் கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, மாவு கெட்டியாகும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள ராகி மாவை உதிரி உதிரியாக போட்டு பொரித்து எடுத்தால் சுவையான ராகி பக்கோடா தயார்.

    * இவற்றை அனைவருக்கும் சுடசுட பரிமாறவும்.

    • குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • தள்ளுவண்டி கடையில் சாப்பிட்ட அதே சுவையில் இன்று சிக்கன் பக்கோடா செய்யலாம்

    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்

    முட்டை - 1

    சோள மாவு - 1/4 கப்

    அரிசி மாவு - 1/4 கப்

    கடலை மாவு - 1/4 கப்

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    ஊற வைப்பதற்கு :

    மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 4 டேபிள் ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா - 2 டீஸ்பூன்

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். ஒரு பௌலில் சிக்கனைப் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு பிரட்டி 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்னர் அத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

    * பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

    * எண்ணெய் சூடானதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சிக்கன் பக்கோடா ரெடி!!!

    • மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இது.
    • மட்டன் கீமா வைத்து சூப்பரான பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மட்டன் கீமா - 150 கிராம்

    வெங்காயம் - 1 + 1

    இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி

    சோம்பு - 1 டீஸ்பூன்

    ப.மிளகாய் - 2

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

    பஜ்ஜி மாவு - தேவையான அளவு

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.

    ஒரு வெங்காயத்தை பொடியாகவும். மற்றொரு வெங்காயத்தை நீள வாக்கிலும் வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத் போட்டு தாளிக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, மட்டன் கீமா, மஞ்சள்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    இத்துடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 விசில் விடவும். மட்டனில் தண்ணீர் இருக்கும். தனியாக அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டிய தேவையில்லை.

    கறி வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி தனியே வைக்கவும்.

    வேக வைத்த மட்டன் கீமா ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பஜ்ஜி மாவு, சிறிது உப்பு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் அனைத்தையும் போட்டு நன்றாக கலக்கவும்.

    பக்கோடா மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் வேக வைத்த மட்டன் நீரை பயன்படுத்தி கொள்ளலாம்.

    வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மட்டன் கலவையை உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சுண்டி இழுக்கும் சுவையில் மட்டன் கீமா பக்கோடா ரெடி.

    • மாலை வேளையில் டீ, காபியுடன் மொறுமொறுப்பான பக்கோடாவை சாப்பிடலாம்.
    • இன்று காலிஃப்ளவர் பக்கோடா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு -1 கப்

    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்

    பூண்டு விழுது - அரை டீஸ்பூன்

    காலிஃப்ளவர் - 1

    வெங்காயம் - 2 (வட்டமாக நறுக்கவும்)

    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை:

    காலிஃப்ளவரை நன்றாக கழுவி பூக்களை சிறிதாக உதிர்த்துக்கொள்ளவும்.

    கடலை மாவுடன் பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு, போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    அதனுடன் வெங்காயம் மற்றும் காலிஃப்ளவரை கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    பின்னர் பக்கோடாவாக உருட்டி கொஞ்சம் கொஞ்சமாக கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான காலிஃப்ளவர் பக்கோடா ரெடி.

    ×