search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Millet Recipes"

    • தினையில் அரிசி, ராகியை விட அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.
    • அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    தினைமாவு - ஒரு கப்

    நெய் - 1/2 கப்

    நறுக்கிய முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா கலவை - 1/2 கப்

    நாட்டுச் சர்க்கரை - முக்கால் கப்

    செய்முறை :

    வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா சேர்த்து இலேசாக வறுத்து எடுக்கவும்.

    பின்பு தினைமாவை மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்.

    அதனுடன் நாட்டுச் சர்க்கரை, நட்ஸ் கலவை சேர்த்து கைகளால் உதிர்த்து இலேசாக பிசிறவும்.

    பிறகு சூடான நெய் விட்டு கலந்து கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடிக்கவும்.

    இப்போது சுவையான தினை நட்ஸ் லட்டு ரெடி.

    • நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. 
    • ஓட்ஸில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ், கேழ்வரகு மாவு - தலா ஒரு கப்,

    மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 2,

    பெரிய வெங்காயம் - ஒன்று

    கேரட் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,

    தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்,

    பொட்டுக் கடலை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

    தயிர் - ஒரு டேபிள் ஸ்பூன்,

    நெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லித்தழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, ப.மிளகாயை போட்டு நன்றாக கலக்கவும்.

    பின்னர் அதனுடன் கேரட் துருவல், தேங்காய் துருவல், பொட்டுக்கடலை மாவு, தயிர் சேர்த்து சிறிதளவு நீர் விட்டுக் கலந்து நன்கு கெட்டியாக பிசையவும். 

    கொஞ்சம் மாவை எடுத்து சிறு உருண்டயாக்கி, வாழையிலை (அ) பிளாஸ்டிக் கவரில் நெய் தடவி, அதன் மீது உருண்டையை வைத்து ரொட்டியாக தட்டவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து நெய் தடவி சூடானதும் ரொட்டியைப் போட்டு, சுற்றிலும் நெய் விட்டு, வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    இப்போது சூப்பரான ஓட்ஸ் கேழ்வரகு ரொட்டி ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.

    • சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு - 2 கப்

    சாதம் - அரை கப்

    சோடா மாவு - அரை டீஸ்பூன்

    துருவிய தேங்காய் - 1 1/2 கப்

    நாட்டுச்சர்க்கரை - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    கேழ்வரகு மாவை சலித்து அதை ஒரு கடாயில் கொட்டி மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து ஆற வையுங்கள்.

    மிக்ஸியில் சாதம், தேங்காய், நாட்டுச்சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    பின்னர் அதனுடன் வறுத்த கேழ்வரகு மாவை போட்டு கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    தற்போது அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதில் சோடா மாவு மற்றும் உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.

    மறு நாள் நன்கு புளித்து மாவு தயார் நிலையில் இருக்கும்.

    ஆட்ட கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி மாவை ஊற்றி சுட்டு எடுங்கள்.

    அவ்வளவுதான் கேழ்வரகு ஆப்பம் தயார்.

    இதற்கும் தேங்காய்பால், முட்டை குருமா சூப்பராக இருக்கும்.

    • இந்த பொங்கல் செய்வது மிகவும் சுலபம்.
    • இந்த பால் பொங்கல் செய்வதற்கு அதிக பொருட்கள் தேவைப்படாது.

    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி - ஒரு கப்

    நெய் - 2 டீஸ்பூன்

    வெல்லம்/சர்க்கரை - 3/4 கப்

    பால் - 4 கப்

    முந்திரி - 20

    உலர் திராட்சை - 20

    ஏலக்காய் பொடி - ஒரு டீஸ்பூன்

    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    * பச்சரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

    * ஒரு குக்கரில் கழுவிய பச்சரிசியைப் போட்டு, அதில் ஒரு டீஸ்பூன் நெய் மற்றும் பாலை ஊற்றி குக்கரை மூடி, குறைவான தீயில் 3-4 விசில் விட்டு இறக்கவும்.

    * விசில் போனதும், குக்கரைத் திறந்து கரண்டியால் நன்கு கிளறி, பின் அதில் வெல்லம்/சர்க்கரையைப் போட்டு கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து 2 நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.

    * அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து பொங்கலில் ஊற்ற வேண்டும்.

    * இறுதியில் அதில் 3-4 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான பால் பொங்கல் தயார்.

    குறிப்பு:

    * பால் பொங்கல் நன்கு குளிர்ந்த பின் மிகவும் கெட்டியாக இருப்பது போன்று இருந்தால், அதில் சிறிது சுடுநீர் அல்லது சூடான பாலை ஊற்றி கிளறிக் கொள்ளலாம்.

    * பால் பொங்கலுக்கு சர்க்கரை அல்லது வெல்லம் என எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

    * பால் பொங்கலை குக்கரிலும் செய்யலாம் அல்லது பாத்திரத்திலும் செய்யலாம்.

    • இந்த பொங்கல் டயட்டில் இருப்பர்களும் சாப்பிடலாம்.
    • சிறுதானியங்களில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    திணை - 1/2 கப்

    பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

    கருப்பட்டி - 1 கப்

    முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்

    நெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்

    உலர் திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

    சுக்கு பொடி - 1/2 டீஸ்பூன்

    செய்முறை:

    * ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பாசிப்பருப்பை சேர்த்து ஒரு நிமிடம் வறுக்க வேண்டும்.

    * பின் அதில் திணையை சேர்த்து கிளறி விட வேண்டும்.

    * பின்பு 2 கப் தண்ணீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

    * மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் கருப்பட்டியை போட்டு, அரை கப் நீர் ஊற்றி, கருப்பட்டி முற்றிலும் கரைந்ததும் வடிகட்டி வெந்து கொண்டிருக்கும் திணையில்ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.

    * பின் அதில் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி, ஏலக்காய் பொடி மற்றும் சுக்கு பொடி சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.

    * இறுதியில் ஒரு சிறு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி சூடானதும் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தயாரித்து திணை பொங்கலுடன் சேர்த்து கிளறினால், சூப்பரான திணை கருப்பட்டி பொங்கல் தயார்.

    • கேழ்வரகில் பல்வேறு சத்தான ரெசிபிகளை செய்யலாம்.
    • கேழ்வரகில் ஆப்பம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு - 1 கப்

    சாதம் - 1/4 கப்

    சோடா மாவு - 1/4 டீஸ்பூன்

    துருவிய தேங்காய் - 3/4 கப்

    நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    கேழ்வரகு மாவை சலித்து அதை ஒரு கடாயில் கொட்டி மிதமான தீயில் சூடேற பிரட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஆற வையுங்கள்.

    பின் மிக்ஸியில் சாதம், தேங்காய், நாட்டுச்சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    தற்போது அதில் பிரட்டி வைத்துள்ள மாவையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    தற்போது அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி சோடா மாவு மற்றும் உப்பு சேர்த்து கரைத்து மூடி ஓரமாக வையுங்கள்.

    இது 8 மணி நேரம் ஊற வேண்டும்.

    மறுநாள் நன்கு புளித்து மாவு தயார் நிலையில் இருக்கும். நன்கு கிளறி ஆப்ப சட்டியில் ஊற்றி சுட்டு எடுங்கள்.

    அவ்வளவுதான் கேழ்வரகு ஆப்பம் தயார்.

    இதற்கும் தேங்காய்பால் சூப்பராக இருக்கும்.

    • குழந்தைகளுக்கு இந்த டிபன் மிகவும் பிடிக்கும்.
    • கேழ்வரகில்(ராகி) அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு சேமியா - 1 பாக்கெட்

    உப்பு - தேவையான அளவு

    தேங்காய் - தேவையான அளவு

    ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி

    வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு

    செய்முறை :

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    கால் கப் தண்ணீரில் உப்பு கலந்து அதை கேழ்வரகு சேமியாவில் தெளித்து 5 நிமிடம் ஊற விடவும்.

    பின்னர் ஊறிய கேழ்வரகு சேமியாவை இட்லி தட்டில் வேக வைத்து கொள்ளவும்.

    வெந்ததும் அதில் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சத்தான கேழ்வரகு சேமியா புட்டு ரெடி.

    • சிறுதானியங்களில் நிறைய தாதுச்சத்துகளும், வைட்டமின்களும் உள்ளன.
    • அரிசியில் இருப்பதைவிட இதில் அதிக நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்:

    குதிரைவாலி அரிசி - 100 கிராம்,

    இட்லி அரிசி - 100 கிராம்,

    உளுந்து - 25 கிராம்,

    வெந்தயம் - அரை தேக்கரண்டி,

    கருப்பட்டி - 200 கிராம்,

    இளநீர் - அரை கப்.

    செய்முறை:

    குதிரைவாலி அரிசியுடன் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் நைசாக அரைக்கவும். இளநீரை முதல் நாளே வாங்கி வைத்துப் புளிக்க வைக்க வேண்டும்.

    புளித்த இளநீரை அரைத்து வைத்துள்ள மாவுடன் கரைத்து 6 மணி நேரம் புளிக்க விடவும்.

    கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைத்து, கொதித்ததும் அப்படியே சூடாக வடிகட்டி மாவுடன் சேர்க்கவும்.

    ஆப்பச் சட்டியை அடுப்பில் வைத்து லேசாக எண்ணெய் தடவி தேவையான மாவினை ஊற்றி ஒரு சுற்று சுற்றி மூடி வைத்து வேக விடவும்.

    ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும்.

    சத்தும், சுவையுமிக்க குதிரைவாலி கருப்பட்டி ஆப்பம் தயார்.

    • சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
    • அரிசியை விட 8 மடங்கு அதிக இரும்புச்சத்து கம்பில் உள்ளது.

    தேவையான பொருட்கள்

    கம்பு - 1 கப்

    உளுந்தம் பருப்பு - 1 குழிக்கரண்டி

    வெந்தயம் - 2 ஸ்பூன்

    கருப்பட்டி - 300 கிராம்

    ஏலக்காய் - 2

    எண்ணெய் - சிறிதளவு

     செய்முறை

    கம்பு, உளுந்து, வெந்தயத்தை நான்கு மணிநேரம் ஊற வைக்கவும்.

    கருப்பட்டியை சிறு சிறு துண்டுகளாக நொறுக்கிக் கொள்ளவும்.

    ஏலக்காயை ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும்.

    ஊறிய கம்பை மிக்சியில் போட்டு அதனுடன் கருப்பட்டியை சேர்த்து அரைக்கவும்.

    அடுத்து நசுக்கிய ஏலக்காயைச் சேர்த்து இட்லிப் பதத்தில் அரைத்து கொள்ளவும்.

    இந்த மாவை ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து கல் சூடு ஏறியதும் குழிகளில் சிறிது எண்ணெய் தடவவும்.

    • சர்க்கரை நோயாளிகளுக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம்.
    • உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு.

    தேவையான பொருட்கள்

    அரிசி - 1 கப்

    கம்பு - 1 கப்

    கொள்ளு - கால் கப்

    காய்ந்த மிளகாய் - 5

    வெந்தயம் - 1 டீஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - சுவைக்கு

    செய்முறை

    அரிசியை, வெந்தயத்தை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

    கொள்ளு, கம்பை நன்றாக கழுவி 8 மணிநேரம் ஊறவைக்கவும்.

    நன்றாக ஊறியதும் அரிசியை, வெந்தயத்தை தனியாக அரைத்து கொள்ளவும்.

    கொள்ளு, கம்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து அதனுடன் அரைத்த அரிசி மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    உப்பு சேர்த்து புளிக்க விடவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான கம்பு - கொள்ளு தோசை ரெடி.

    • கேழ்வரகில் சத்தான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று கேழ்வரகு பக்கோடா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 100 கிராம்,

    அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,

    தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்,

    வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 1

    இஞ்சி - சிறிய துண்டு

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,

    உப்பு - தேவையான அளவு,

    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி - கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்துக் கொள்ளவும்.

    * சூப்பரான சத்தான கேழ்வரகு பக்கோடா ரெடி.

    • கேழ்வரகில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு - அரை கிலோ,

    வறுத்த உளுந்து - 50 கிராம்,

    கடலைப் பருப்பு - 50 கிராம்,

    உப்பு, மிளகாய்த் தூள், எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    * கேழ்வரகை அரைத்து மாவாக்கிக்கொள்ளவும்.

    * இந்த மாவுடன் வறுத்த உளுந்து சேர்த்து, நன்றாக அரைக்கவும்.

    * அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், கடலைப் பருப்பைச் சேர்த்து, நன்றாகக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

    * மாவை சிறிது எடுத்து சிறிய அளவில் உருண்டையாக உருட்டி, வாழை இலையில் போட்டு, மெல்லியதாகத் தட்டிக்கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தட்டி வைத்துள்ள தட்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

    * சூப்பரான ஸ்நாக்ஸ் கேழ்வரகுத் தட்டுவடை ரெடி.

    * இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    ×