search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு ஆப்பம்
    X

    நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு ஆப்பம்

    • சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு - 2 கப்

    சாதம் - அரை கப்

    சோடா மாவு - அரை டீஸ்பூன்

    துருவிய தேங்காய் - 1 1/2 கப்

    நாட்டுச்சர்க்கரை - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    கேழ்வரகு மாவை சலித்து அதை ஒரு கடாயில் கொட்டி மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து ஆற வையுங்கள்.

    மிக்ஸியில் சாதம், தேங்காய், நாட்டுச்சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    பின்னர் அதனுடன் வறுத்த கேழ்வரகு மாவை போட்டு கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    தற்போது அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதில் சோடா மாவு மற்றும் உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.

    மறு நாள் நன்கு புளித்து மாவு தயார் நிலையில் இருக்கும்.

    ஆட்ட கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி மாவை ஊற்றி சுட்டு எடுங்கள்.

    அவ்வளவுதான் கேழ்வரகு ஆப்பம் தயார்.

    இதற்கும் தேங்காய்பால், முட்டை குருமா சூப்பராக இருக்கும்.

    Next Story
    ×