search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேமியா சமையல்"

    • பிள்ளைகளுக்கு மதிய உணவிற்கு இதை செய்து கொடுக்கலாம்.
    • 20 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து முடிக்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 2 கப்

    பன்னீர் - 200 கிராம்

    புதினா - 1 கட்டு

    கிராம்பு - 4

    பட்டை - 1 இன்ச்

    வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 3

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    தண்ணீர் - 4 கப்

    செய்முறை :

    பன்னீரை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

    புதினாவை நன்றாக கழுவி, மிக்ஸியில் போட்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    அரிசியை நன்கு கழுவி உதிரியாக வடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை 3 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வதக்குங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும், அரைத்து வைத்திருக்கின்ற புதினா மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள்.

    புதினா பச்சை வாசனை போனவுடன் இறுதியில் வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகள் மற்றும் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் பிரட்டி, இறக்கி விட வேண்டும்.

    தற்போது சுவை நிறைந்த புதினா பன்னீர் புலாவ் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சேமியா, ரவையில் உப்புமா மட்டுமல்ல பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருள்கள்:

    சேமியா - 2 கப்

    ரவை - 1/2 கப்

    பாசிப்பருப்பு - 1/2 கப்

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    நெய் - தேவையான அளவு

    மிளகு - 1 தேக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    முந்திரி - 10

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    கறிவேப்பிலை

    செய்முறை:

    * வாணலியில் பாசிப்பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

    * அதே வாணலியில் சேமியாவையும், ரவையையும் தனித்தனியாகச் சூடு வரும்படியாக வறுத்துக்கொள்ளவும்.

    * பாசிப்பருப்பை நன்றாக கழுவி விட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் குழையாமல் வேக வைக்கவும்.

    * ஒரு வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை போட்டு தாளித்த பின் ஒரு பங்கு சேமியா & ரவைக்கு இரண்டு (அ) இரண்டேகால் பங்கு தண்ணீர் ஊற்றி,மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிவிட்டு மூடி வைக்கவும்.

    * பாசிப்பருப்பு ஏற்கனவே வெந்திருப்பதால் அதற்குத் தண்ணீர் ஊற்றவேண்டாம்.

    * தண்ணீர் கொதித்ததும் தேவையான உப்பு, வேக வைத்த பாசிப்பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.

    * மீண்டும் ஒரு கொதி வந்ததும் சேமியாவைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கட்டித் தட்டாமல் கிளறிவிட்டு அது வேகும் வரை மூடி வைக்கவும்.

    * சேமியா வெந்ததும் ரவையைச் சிறிதுசிறிதாகக் கொட்டி, கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

    * ரவை போட்டு நன்றாக கிளறிய பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும். இந்த சூட்டிலேயே ரவை வெந்துவிடும்.

    * ருசியான ரவா சேமியா பொங்கல் தயார்.

    * இதற்கு சாம்பார் அருமையான இணையாகும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சேமியாவில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று சேமியாவில் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்

    சேமியா - 2 கப்

    தண்ணீர் - 6 கப்

    பாசிப்பருப்பு - அரை கப்

    நெய் - 3 மேசைக்கரண்டி

    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

    முந்திரி - 20

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    காய்ந்த மிளகாய் - 4

    தனியளா - ஒரு தேக்கரண்டி

    சீரகம் - அரை தேக்கரண்டி

    மிளகு - 2 டீஸ்பூன்

    பட்டை - ஒன்று

    இலவங்கம் - 2

    ஏலக்காய் - 2

    செய்முறை:

    சேமியாவுடன் பாசிப்பருப்பை வெறும் கடாயில் தனித்தனியாக போட்டு வாசனை வரும் வரை வறுத்து தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 4 விசிலிற்கு வேக விடவும்.

    காய்ந்த மிளகாய் மற்றும் தனியாவை லேசாக வறுத்து பொடித்து கொள்ளவும்.

    கடாயை அப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மீதமுள்ள மசாலா பொருட்களை சேர்த்து தாளித்து முந்திரி சேர்த்து இறக்கவும்.

    வேகவைத்த சேமியாவில் உப்பு மற்றும் திரித்த பொடியைச் சேர்த்துக் கிளறவும்.

    தாளித்த பொருட்களை சேமியாவில் கொட்டி கிளறி சட்னியுடன் பரிமாறவும்.

    இப்போது சேமியா மசாலா பொங்கல் ரெடி.

    • கோதுமை சேமியாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று எளிய முறையில் பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை சேமியா - 250 கிராம்,

    பெரிய வெங்காயம் - ஒன்று,

    தக்காளி - ஒன்று ,

    பீன்ஸ் - 3,

    கேரட் - ஒன்று,

    பிரிஞ்சி இலை - ஒன்று,

    பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடியளவு,

    காலிஃப்ளவர் - சிறிதளவு (காலிஃப்ளவரில் இருந்து நறுக்கிய சிறிய பூக்கள்),

    உருளைக்கிழங்கு - ஒன்று,

    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,

    தனியாத்தூள் (மல்லித்தூள்) - கால் டீஸ்பூன்,

    கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,

    கொத்தமல்லி - சிறிதளவு,

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுடுநீரில் கோதுமை சேமியாவைப் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வடிகட்டி எடுக்கவும்.

    உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் பூக்கள், பச்சைப் பட்டாணி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து இதனுடன் வேகவைத்த காய்கறி, மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.

    பிறகு, கோதுமை சேமியா சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மிதமான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.

    வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கோதுமை சேமியா பிரியாணி ரெடி.

    • விரைவில் டிபன் செய்ய நினைப்பவர்கள் இந்த ரெசிபியை செய்யலாம்.
    • காலையில் வேலைக்கு செல்பவர்கள் இந்த ரெசிபியை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 250 கிராம்

    அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    தயிர் - 300 மில்லி

    சாம்பார் வெங்காயம் - ஒரு கைப்பிடி

    கேரட் - 1

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    பச்சை மிளகாய் - 2

    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

    நெய் - ஒரு குழி கரண்டி

    எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்

    கடுகு - ஒரு டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

    சீரகம் - அரை டீஸ்பூன்

    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 2

    முந்திரிப் பருப்பு - 15

    பெருங்காயம் - சிட்டிகை

    மஞ்சள் பொடி - சிட்டிகை

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    இஞ்சி, கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கொஞ்சம் நெய் விட்டு சேமியாவை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும். டபுள் ரோஸ்டட் சேமியாவாக இருந்தால் வறுக்க வேண்டிய அவசியம் இல்லை.

    வாணலியில் எண்ணெய் மற்றும் கொஞ்சம் நெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட், கொத்தமல்லித்தழையை சேர்த்து மிதமான தீயில் வதக்கி மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து, சேமியாவை அதில் கொட்டி கலந்து விட்டு வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

    இதனுடன் தயிர் மற்றும் அரிசி மாவை கலந்து நன்றாக கிளறி தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் மூடி வைத்து விடவும்.

    இட்லி தட்டில் நெய் தடவி முந்திரி வைத்து விட்டு அதன் மீது இந்த கலவையை ஊற்றி 5 லிருந்து 6 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான சேமியா இட்லி தயார்.

    இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அருமையான காம்பினேஷன்.

    • சேமியாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று சேமியா தேங்காய் பால் புலாவ் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சேமியா - 200 கிராம்,

    நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு - தலா 1/4 கப்,

    பச்சைப்பட்டாணி - 1/4 கப்,

    வெங்காயம் - 1,

    தக்காளி - 1,

    பச்சைமிளகாய் - 2,

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,

    தேங்காய்ப்பால் - 1 கப்,

    கொத்தமல்லி, உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கு.

    தாளிக்க...

    பட்டை - 1 துண்டு, லவங்கம், ஏலக்காய் - தலா 2,

    கடல்பாசி - சிறிது,

    நெய், எண்ணெய் - தேவைக்கு.

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

    இதில் 1 சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் எண்ணெய், சேமியாவை சேர்த்து முக்கால் பதம் வெந்ததும் வடிகட்டி, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசி தண்ணீரை வடிய விடவும்.

    அடிகனமான கடாயில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், கடல்பாசி, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் பச்சைமிளகாய், நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

    பின் தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து நன்கு கலந்து, குழம்பு பதமாக வரும்போது சேமியா சேர்த்து கிளறி, மூடி சேமியாக உதிரியாக வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    இப்போது சூப்பரான சேமியா தேங்காய் பால் புலாவ் ரெடி.

    • தயிர் உடலுக்கு மிகவும் சிறந்தது.
    • தயிரை சேமியாவுடன் சேர்த்து, ஒரு கலவை சாதம் செய்யலாம் வாங்க..

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 2 கப்

    தயிர் - 3 கப்

    தண்ணீர் - 1 கப்

    கடுகு - 1/4 டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

    வர மிளகாய் - 3

    பச்சை மிளகாய் - 1

    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    முந்திரி பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

    மாதுளை முத்துக்கள் - அரை கப்

    தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)

    சர்க்கரை - 1 சிட்டிகை

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததும் உப்பு மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து ஒரு கொதி வந்ததும், சேமியாவை போட்டு வேக வைக்க வேண்டும்.

    சேமியா வெந்ததும், அதில் உள்ள நீரை வடிகட்டி, பின் குளிர்ந்த நீரில் அலசி, அந்த நீரை வடிகட்டிவிட்டு, சேமியாவை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    தயிரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து, தயிரில் ஊற்ற வேண்டும்.

    பின் மிக்ஸியில் முந்திரி, பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து, அரைத்து, தயிரில் போட வேண்டும்.

    இறுதியில் வேக வைத்துள்ள சேமியாவையும் தயிரில் போட்டு, கிளற விட வேண்டும்.

    கடைசியாக மாதுளை முத்துக்கள், நறுக்கிய கொத்தமல்லியை தூவி பரிமாற வேண்டும்.

    இப்போது சுவையான தயிர் சேமியா ரெடி!!!

    • குழந்தைகளுக்கு இந்த டிபன் மிகவும் பிடிக்கும்.
    • கேழ்வரகில்(ராகி) அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு சேமியா - 1 பாக்கெட்

    உப்பு - தேவையான அளவு

    தேங்காய் - தேவையான அளவு

    ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி

    வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு

    செய்முறை :

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    கால் கப் தண்ணீரில் உப்பு கலந்து அதை கேழ்வரகு சேமியாவில் தெளித்து 5 நிமிடம் ஊற விடவும்.

    பின்னர் ஊறிய கேழ்வரகு சேமியாவை இட்லி தட்டில் வேக வைத்து கொள்ளவும்.

    வெந்ததும் அதில் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சத்தான கேழ்வரகு சேமியா புட்டு ரெடி.

    • டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த ரெசிபி சாப்பிடலாம்.
    • சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த சிற்றுண்டி இது.

    தேவையான பொருட்கள்

    கோதுமை சேமியா - 200 கிராம்,

    நறுக்கிய உருளை, பீன்ஸ், வேகவைத்த பட்டாணி - 1 கப்,

    வெங்காயம், தக்காளி - தலா 1,

    நறுக்கிய பச்சைமிளகாய் - 4,

    உப்பு - தேவைக்கு,

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,

    எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்.

    தாளிக்க...

    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,

    கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து - சிறிது,

    கறிவேப்பிலை - 10.

    செய்முறை

    சேமியாவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துகொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் காய்கறிகள், பட்டாணியை சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    காய்கறிகள் வெந்ததும் கோதுமை சேமியா சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி வெந்தவுடன் இறக்கவும்.

    பின் எலுமிச்சைச்சாறு பிழிந்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான கோதுமை சேமியா கிச்சடி ரெடி.

    • குழந்தைகளுக்கு இந்த புலாவ் மிகவும் பிடிக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய 20 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள் :

    சேமியா - 1 கப்

    வெங்காயம் - 2

    பச்சைமிளகாய் - 5

    தக்காளி - 2

    பீன்ஸ் - 50 கிராம்

    கேரட் - 50 கிராம்

    பச்சை பட்டாணி - 1/2 கப்

    கொத்தமல்லி - சிறிதளவு,

    இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்

    மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்

    தனியா தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    தாளிக்க :

    பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை - தேவையான அளவு

    நெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    வெறும் வாணலியில் சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் பச்சை மிளகாய், வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து துருவிய கேரட், பீன்ஸ், பச்சைபட்டாணி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

    காய்கறிகள் முக்கால் பாகம் வதங்கியவுடன் தேவையான அளவு உப்புடன், மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து மசாலா பச்சை வாசனை போனடவுன் 4 கப் தண்ணீர் விடவும்.

    தண்ணீர் கொதித்தவுடன் வறுத்த சேமியாவை சேர்த்துக் கிளறவும்.

    சேமியா வெந்தது பொல பொல வென்று வந்ததும் நெய், கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சேமியா வெஜிடபிள் புலாவ் ரெடி.

    • சேமியாவில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று சேமியா முட்டை பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 1 கப்

    நெய் - 3 டீஸ்பூன்

    பட்டை - 2

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    முட்டை - 1

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சேமியாவை நெய் விட்டு வறுத்து கொள்ள வேண்டும்.

    அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி போட்டு குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி பின்பு முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும்.

    இதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவேண்டும்.

    கொதித்த பிறகு, வறுத்த சேமியாவை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.

    சேமியா நன்கு வெந்தபிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சுவையான சேமியா முட்டை பிரியாணி தயார்.

    • உப்புமாவில் காய்கறிகளை சேர்த்து செய்வதால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்
    • உப்புமாவில் சேமியா உப்புமா மிகவும் சுவையாக இருக்கும்.
    • காலையில் சமைத்து சாப்பிட சேமியா உப்புமா தான் சிறந்தது.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 1 பாக்கெட்

    வெங்காயம் - 1

    பச்சை பட்டாணி - 1/2 கப்

    கேரட் - 1

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 3

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    கடுகு - அரை டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

    வரமிளகாய் - 1

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர் - 1 1/2 கப்

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கேரட், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்த பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அத்துடன் மஞ்சள் தூள், கேரட், பச்சை பட்டாணி, பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

    பிறகு அதில் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 10 நிமிடம் மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை வேக வைத்து கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால், சேமியா வெஜிடபிள் உப்புமா ரெடி!!!

    ×