search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    சேமியா தேங்காய் பால் புலாவ்
    X

    சேமியா தேங்காய் பால் புலாவ்

    • சேமியாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று சேமியா தேங்காய் பால் புலாவ் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சேமியா - 200 கிராம்,

    நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு - தலா 1/4 கப்,

    பச்சைப்பட்டாணி - 1/4 கப்,

    வெங்காயம் - 1,

    தக்காளி - 1,

    பச்சைமிளகாய் - 2,

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,

    தேங்காய்ப்பால் - 1 கப்,

    கொத்தமல்லி, உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கு.

    தாளிக்க...

    பட்டை - 1 துண்டு, லவங்கம், ஏலக்காய் - தலா 2,

    கடல்பாசி - சிறிது,

    நெய், எண்ணெய் - தேவைக்கு.

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

    இதில் 1 சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் எண்ணெய், சேமியாவை சேர்த்து முக்கால் பதம் வெந்ததும் வடிகட்டி, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசி தண்ணீரை வடிய விடவும்.

    அடிகனமான கடாயில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், கடல்பாசி, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் பச்சைமிளகாய், நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

    பின் தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து நன்கு கலந்து, குழம்பு பதமாக வரும்போது சேமியா சேர்த்து கிளறி, மூடி சேமியாக உதிரியாக வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    இப்போது சூப்பரான சேமியா தேங்காய் பால் புலாவ் ரெடி.

    Next Story
    ×