என் மலர்
நீங்கள் தேடியது "Kichadi"
- குதிரைவாலியில் கோதுமையில் இருப்பதை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது.
- இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது.
தேவையான பொருட்கள் :
குதிரைவாலி அரிசி - ஒரு கப்
காய்கறிக் கலவை (கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ்) - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
நெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவும்
தாளிக்க:
பட்டை, லவங்கம் - 2
பிரியாணி இலை - 2
மராத்தி மொக்கு - ஒன்று
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குதிரைவாலி அரிசியை நன்றாகக் கழுவி, பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்.
குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களை போட்டு தாளித்த பின்னர், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் அரிசி, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
குக்கரில் ஆவி அடங்கிய பிறகு மூடியைத் திறந்து, கொத்தமல்லி, நெய்விட்டுக் கிளறிச் சூடாகப் பரிமாறவும்.
இப்போது சூப்பரான குதிரைவாலி கிச்சடி ரெடி.
- காலையில் சத்தான உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- இன்று அவல் வைத்து சத்தான கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கெட்டி சிவப்பு அவல் - அரை கப்,
தேங்காய்ப்பால் - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 1,
நிலக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு.
வறுத்து பொடிக்க
காய்ந்த மிளகாய் - 4.
செய்முறை
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலை நன்றாக கழுவி தேங்காய்ப் பாலில் ஊறவிடவும்.
நிலக்கடலையை வறுத்துப் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் அவலையும் (தேங்காய்ப் பால் முழுவதையும் அவல் இழுத்திருக்கும்) போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி, இறக்கும்போது வறுத்து பொடித்த நிலக்கடலை தூள், மிளகாய்தூள் தூவிக் கிளறவும்.
கடைசியாக கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.
தேங்காய்ப்பால் சேர்ந்திருப்பதால் சாப்பிட ருசியாக இருக்கும்.
கேழ்வரகு சேமியா - 1 பாக்கெட்
வெங்காயம் - 1
கேரட் - 1
உருளைக்கிழங்கு - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பீன்ஸ் - 6
பச்சை பட்டாணி - 1/4 கப்
தக்காளி - 1
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
வெங்காயம், தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேழ்வரகு சேமியாவை வெதுவெதுப்பான நீரில் ஒருமுறை அலசி, பின் இட்டி தட்டில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் அதில் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து, உப்பை தூவி 3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். பின்னர் காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.
காய்கறிகள் வெந்ததும் அதில் வேக வைத்துள்ள கேழ்வரகு சேமியா, கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கேழ்வரகு கிச்சடி ரெடி!!!
ரவை - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - ஒன்று,
பச்சை மிளகாய் - 2,
பச்சைப் பட்டாணி - அரை கப்,
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு,
தேங்காய்ப் பால் - ஒன்றரை கப்,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
பட்டை - சிறு துண்டு,
கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று,

செய்முறை :
ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை நீளநீளமாக மெல்லிதாக நறுக்கவும்.
தக்காளி, புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் விட்டு, சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்த பின்னர் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து தக்காளி, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் தேங்காய்ப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதி வந்ததும் வறுத்த ரவை, எலுமிச்சைச் சாறு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி, 10 நிமிடம் கழித்து இறக்கிப் பறிமாறவும்.
ஜவ்வரிசி - ஒரு கப்,
உருளைக்கிழங்கு - ஒன்று
பச்சை பட்டாணி - கைப்பிடியளவு,
ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - கைப்பிடியளவு,
கேரட் துண்டுகள் - கைப்பிடியளவு,
உப்பு - தேவையான அளவு,
பச்சை மிளகாய் - 3 (இரண்டாக கீறவும்),
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை - 5 டீஸ்பூன்,
மாதுளை முத்துக்கள் - சிறிதளவு,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
நெய்யில் வறுத்த முந்திரி - 10.
தாளிக்க :
நெய் - 3 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்,
மிளகு - கால் டீஸ்பூன்.

செய்முறை :
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பச்சை பட்டாணி, ஸ்வீட் கார்னை வேகவைத்து கொள்ளவும்.
ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஜவ்வரிசியை 5 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு களைந்து தண்ணீரை வடிகட்டவும்.
வாணலியில் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் பச்சை மிளகாய், ஜவ்வரிசி சேர்த்து வதக்கவும்.
பிறகு அதனுடன் உப்பு, காய்கறிகள் சேர்த்து கிளறி மூடி சிறு தீயில் வைத்து ஐந்து நிமிடம் வேக விடவும்.
பிறகு மூடியை திறந்து எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.
கடைசியாக வறுத்த வேர்க்கடலை, மாதுளை முத்துக்கள், கொத்தமல்லித்தழை, நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சாபுதானா கிச்சடி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.