என் மலர்
சமையல்

எளிய முறையில் கேழ்வரகு ஆப்பம் செய்யலாம் வாங்க...
- கேழ்வரகில் பல்வேறு சத்தான ரெசிபிகளை செய்யலாம்.
- கேழ்வரகில் ஆப்பம் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு - 1 கப்
சாதம் - 1/4 கப்
சோடா மாவு - 1/4 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 3/4 கப்
நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கேழ்வரகு மாவை சலித்து அதை ஒரு கடாயில் கொட்டி மிதமான தீயில் சூடேற பிரட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஆற வையுங்கள்.
பின் மிக்ஸியில் சாதம், தேங்காய், நாட்டுச்சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
தற்போது அதில் பிரட்டி வைத்துள்ள மாவையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
தற்போது அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி சோடா மாவு மற்றும் உப்பு சேர்த்து கரைத்து மூடி ஓரமாக வையுங்கள்.
இது 8 மணி நேரம் ஊற வேண்டும்.
மறுநாள் நன்கு புளித்து மாவு தயார் நிலையில் இருக்கும். நன்கு கிளறி ஆப்ப சட்டியில் ஊற்றி சுட்டு எடுங்கள்.
அவ்வளவுதான் கேழ்வரகு ஆப்பம் தயார்.
இதற்கும் தேங்காய்பால் சூப்பராக இருக்கும்.






