என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » militants attack
நீங்கள் தேடியது "Militants Attack"
ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் குண்டுவீசி தாக்கியதில் 3 வீரர்கள் காயமடைந்தனர். #SrinagarMilitantsAttack
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ஜீரோ பிரிட்ஜ் உள்ளது. இதன் அருகில் பாதுகாப்பு படையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு பணியில் இருந்த 3 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடந்த 11-ம் தேதி லால் சவுக் பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் யாரும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #SrinagarMilitantsAttack
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 16 பேர் பரிதாபமாக பலியாகினர். #MilitantsAttack
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜாஸ்ஜான் மாகாணத்தில் உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் இன்று ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பாதுகாப்பு படைவீரர்கள் உள்பட 16 பேர் பரிதாபமாக பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #MilitantsAttack
வடக்கு பர்கினா பாசோவில் 12 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. #BurkinaFasoAttack
மாஸ்கோ:
மேற்கு ஆப்ரிக்க நாடான பர்கினா பாசோவின் வடக்கு பகுதியில் உள்ளது சோம் மாகாணம். இங்குள்ள அர்பிந்தா நகராட்சிக்குட்பட்ட காஸிலிக்கி கிராமத்திற்குள், நேற்று முன்தினம் 30 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து, பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்கியது.
இந்த தாக்குதலில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், ஒரு தானிய களஞ்சியம், வண்டி மற்றும் 6 கடைகளுக்கு தீ வைத்தனர். மேலும் 5 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஏராளமான எருதுகளையும் அபகரித்துச் சென்றனர். இத்தகவலை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் பேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளது. #BurkinaFasoAttack
ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மேஜர் உள்பட 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். #MilitantsAttack
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டியுள்ளது நவ்ஷேரா பகுதி. இங்குள்ள லாம் பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், ராணுவ வீரர்களை குறிவைத்து வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ மேஜர் உள்பட 2 வீரர்கள் பலியாகினர். பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. #MilitantsAttack
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிறப்பு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். #MilitantsAttack
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் ராஜ்போரா பகுதியில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பணியில் இருந்த போலீசார் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் சமீர் அகமது மிர் என்ற சிறப்பு போலீஸ் அதிகாரி படுகாயம் அடைந்தார். சக போலீசார் அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. #MilitantsAttack
ஆப்கானிஸ்தான் நாட்டின் இரு மாகாணங்களில் போலீசாருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் 11 பேர் உயிரிழந்தனர். #Afghanmilitants #Afghanclashes #AfghanTalibans
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, நாட்டின் வடபகுதிகளில் உள்ள மாகாணங்களில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் பலாக் மாகாணத்துக்குட்பட்ட சிம்டால் மாவட்டத்தில் காவல் நிலையம் அருகேயுள்ள சோதனைச்சாவடி மீது நேற்றிரவு தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 8 போலீசார் உயிரிழந்தனர்.
அருகாமையில் உள்ள தக்கார் மாகாணத்தில் உள்ள தஷ்த்-இ-காலா மாவட்டத்தில் ஒரு போலீஸ் அதிகாரி வீட்டில் தாக்குதல் நடத்தவந்த பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #Afghanmilitants #Afghanclashes #AfghanTalibans
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, நாட்டின் வடபகுதிகளில் உள்ள மாகாணங்களில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் பலாக் மாகாணத்துக்குட்பட்ட சிம்டால் மாவட்டத்தில் காவல் நிலையம் அருகேயுள்ள சோதனைச்சாவடி மீது நேற்றிரவு தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 8 போலீசார் உயிரிழந்தனர்.
அருகாமையில் உள்ள தக்கார் மாகாணத்தில் உள்ள தஷ்த்-இ-காலா மாவட்டத்தில் ஒரு போலீஸ் அதிகாரி வீட்டில் தாக்குதல் நடத்தவந்த பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #Afghanmilitants #Afghanclashes #AfghanTalibans
ஆப்கானிஸ்தானில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அரசு அலுவலகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 43 பேர் கொல்லப்பட்டனர். #KabulAttack
காபூல்:
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகாமையில் உள்ள அரசு அலுவலகங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று மாலை தாக்குதல் நடத்தினர். அரசு அலுவலக நுழைவு வாயில் அருகே காரை ஓட்டி வந்த பயங்கரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். கார் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்ததும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 2 பயங்கரவாதிகள் அரசு அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அந்த அலுவலகத்தை சுற்றி வளைத்தனர். இதையடுத்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஒரு போலீஸ் அதிகாரியும் உயிரிழந்தார். பொதுமக்கள் தரப்பில் 42 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு ஊழியர்கள் ஆவர்.
மூன்று போலீஸ்காரர்கள் உள்ளிட்ட சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என தெரிகிறது. இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. #KabulAttack
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகாமையில் உள்ள அரசு அலுவலகங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று மாலை தாக்குதல் நடத்தினர். அரசு அலுவலக நுழைவு வாயில் அருகே காரை ஓட்டி வந்த பயங்கரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். கார் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்ததும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 2 பயங்கரவாதிகள் அரசு அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
உள்ளே செல்லும்போது பொதுமக்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டபடியே சென்றதால், பலர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டதும் அலுவலகத்திற்குள் இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
மூன்று போலீஸ்காரர்கள் உள்ளிட்ட சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என தெரிகிறது. இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. #KabulAttack
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த இரு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். #Twomilitantskilled #JKencounter
ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்துக்கு உட்பட்ட குட்போரா பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் இன்று காலைவரை நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காயங்களுடன் இரு பயங்கரவாதிகள் தப்பியோடி விட்டதாகவும் பாதுகாப்பு படை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். #Twomilitantskilled #JKencounter
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்துக்கு உட்பட்ட குட்போரா பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் இன்று காலைவரை நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காயங்களுடன் இரு பயங்கரவாதிகள் தப்பியோடி விட்டதாகவும் பாதுகாப்பு படை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். #Twomilitantskilled #JKencounter
ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாஜக மாநில செயலாளர் மற்றும் அவரது சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியது. #MilitansAttack #BJPLeader
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பாஜக மாநில செயலாளராக இருந்தவர் அனில் பரிஹார். அவரது சகோதரர் அஜித்.
இருவரும் நேறு இரவு தங்களது கடையை மூடிவிட்டு வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் அருகில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அனில், அஜீத்தை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர்.
இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பாஜக மாநில செயலாளர் அனில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மாநில பொது செயலாளர் அசோக் கவுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் பல ஆண்டுக்கு பிறகு அரசியல் கட்சி பிரமுகரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. #MilitansAttack #BJPLeader
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் எல்லை பாதுகாப்பு படை வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் காயமடைந்தனர். #MilitantsAttack
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் இன்று வாகனத்தில் ரோந்து சென்றனர். பந்தா சவுக் பகுதியில் வரும்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் அந்த வாகனத்தின் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தபபிச் சென்றனர்.
இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வாகனத்தில் இருந்த 5 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #MilitantsAttack
ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் உள்ள சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கியதில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். #MilitantsAttack
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் உள்ள மிடுரா என்ற இடத்தில் சிஆர்பிஎப் முகாம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று இரவு சுமார் 8.30 மணியளவில் அந்த பகுதியில் நுழைந்த பயங்கரவாதிகள் அந்த முகாம் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு பணியில் இருந்த விஜயகுமார் என்ற காவலர் படுகாயம் அடைந்தார்.
சக வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து டிரால் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #MilitantsAttack
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று அதிகாலை மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 மத்திய படை வீரர்கள் காயம் அடைந்தனர். #PulwamaAttack
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இன்று அதிகாலை காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் குண்டு காயம் அடைந்தனர். இதையடுத்து அந்தப் பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். காயம் அடைந்த 2 வீரர்களையும் மீட்டு புல்வாமா மாவட்ட ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
காஷ்மீரின் கங்கன் பகுதியில் பாகிஸ்தானின் வங்கர்-இ-தொய்பா இயக்க பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட மறுநாளில் பயங்கரவாதிகள் புல்வாமா மாவட்டத்தில் தாக்குதல் நடத்தி உள்ளனர். #PulwamaAttack
காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இன்று அதிகாலை காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் குண்டு காயம் அடைந்தனர். இதையடுத்து அந்தப் பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். காயம் அடைந்த 2 வீரர்களையும் மீட்டு புல்வாமா மாவட்ட ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
காஷ்மீரின் கங்கன் பகுதியில் பாகிஸ்தானின் வங்கர்-இ-தொய்பா இயக்க பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட மறுநாளில் பயங்கரவாதிகள் புல்வாமா மாவட்டத்தில் தாக்குதல் நடத்தி உள்ளனர். #PulwamaAttack
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X