search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரால்"

    ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். #TralEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்த பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியாக் சுட தொடங்கினர். 



    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை நோக்கி சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில்
    ஜெய்ஷ் இ மொகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும், வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். #TralEncounter
    ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் உள்ள சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கியதில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் உள்ள மிடுரா என்ற இடத்தில் சிஆர்பிஎப் முகாம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று இரவு சுமார் 8.30 மணியளவில் அந்த பகுதியில் நுழைந்த பயங்கரவாதிகள் அந்த முகாம் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு பணியில் இருந்த விஜயகுமார் என்ற  காவலர் படுகாயம் அடைந்தார்.

    சக வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து டிரால் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #MilitantsAttack
    ஜம்மு காஷ்மீரின் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. வீட்டில் பயங்கரவாதிகள் சீலர் கையெறி குண்டுகளை வீசியதால பரபரப்பு ஏற்பட்டது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் வசித்து வருபவர் முஷ்டாக் ஷா. இவர் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

    இன்று அவரது வீட்டின் முன்பகுதியில் உள்ள லானில் பயங்கரவாதிகள் சிலர் கையெறி குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயமேற்படவில்லை. தாக்குதலுக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Tamilnews
    ×