search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Burkina Faso"

    ஆப்பிரிக்க நாட்டில் தேவாலயத்துக்குள் மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் பாதிரியார் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
    டாப்லோ:

    மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், அந்நாட்டின் வடக்குப்பகுதியில் அமைந்திருக்கும் சான்மட்டேங்கா மாகாணத்தின் டாப்லோ நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று முன்தினம் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர். அப்போது சுமார் 30 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று தேவாலயத்துக்குள் நுழைந்தது.

    அந்த கும்பல், பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை குறிவைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது.

    மக்கள் அனைவரும் உயிரைக்காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதிரியார் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதன் பின்னரும் அந்த மர்ம கும்பல் தனது வெறியாட்டத்தை தொடர்ந்தது. தேவாலயத்துக்கும், அதனை சுற்றி உள்ள கட்டிடங்களுக்கும் தீ வைத்துவிட்டு, அந்த கும்பல் தப்பி சென்றது.

    இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. கடந்த 5 வாரங்களில் தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட 3-வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
    வடக்கு பர்கினா பாசோவில் 12 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. #BurkinaFasoAttack
    மாஸ்கோ:

    மேற்கு ஆப்ரிக்க நாடான பர்கினா பாசோவின் வடக்கு பகுதியில் உள்ளது சோம் மாகாணம். இங்குள்ள அர்பிந்தா நகராட்சிக்குட்பட்ட காஸிலிக்கி கிராமத்திற்குள், நேற்று முன்தினம் 30 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து, பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்கியது.

    இந்த தாக்குதலில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், ஒரு தானிய களஞ்சியம், வண்டி மற்றும் 6 கடைகளுக்கு தீ வைத்தனர். மேலும் 5 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஏராளமான எருதுகளையும் அபகரித்துச் சென்றனர். இத்தகவலை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் பேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளது. #BurkinaFasoAttack

    ×