search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mariamman temple"

    • மாரியம்மன் கோவில் பங்குனி விழா நடந்தது.
    • ஏற்பாடுகளை டிரஸ்டி லட்சுமணராக்கு சுவாமிகள், செர்டுபாண்டி, போதும் பொண்ணு மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் அம்ம னுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெறும்.

    விழாவையொட்டி அம்மன் கையில் காப்புகட்டும் பூஜை நடந்தது. நாளை (5-ந்தேதி) திருவிளக்கு பூஜையும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா 6-ந்தேதியும் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, வேல் குத்துதல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். இதற்கான ஏற்பாடுகளை டிரஸ்டி லட்சுமணராக்கு சுவாமிகள், செர்டுபாண்டி, போதும் பொண்ணு மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். 

    • ராஜபாளையம் அருகே மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது.
    • விழாவில் ராஜபாளையம் சேத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் பூப்பல்லக்கு, சிம்ம வாகனம் என பல்வேறு அலங்கார வாகனங்களில் திருவீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழாவையொட்டி தீ குண்டம் வளர்க்கப்பட்டது.

    பூக்குழி இறங்கும் பக்தர்கள் மற்றும் பெண்கள் பெண்கள் முளைப்பாரி எடுத்தும், ஆயிரங்கண் பானை எடுத்தும் ஊர்வலமாகச் சென்றனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். விழாவில் ராஜபாளையம் சேத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

    • 5 ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 4ந் தேதி புஸ்ப விமான மலர் பல்லக்கு, அம்மன் அழைப்பு மற்றும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    அவினாசி :

    அவினாசி அருகேயுள்ள கருவலூரில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வருகிற 5 ந்தேதி தேரோட்டம் நடக்கி றது. முன்னதாக தேர்த்திரு விழாவின் முக்கிய நிக ழ்வான திருக்கொடி யேற்றம் நிகழ்ச்சி நேற்று கோவிலில் நடந்தது. கோவில் முன்புறமுள்ள கொடிகம்பத்தை தூய்மை ப்படுத்தி சிறப்பு பூஜை நடந்தது.

    இதில் கோவில் அர்ச்சகர் ஹோமமந்திரம் மற்றும் பக்தி பாடல்கள் பாடி மேள வாத்தியம் முழங்க கொடி மரத்தில் கொடியே ற்றப்பட்டது. தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு பூத வாகன காட்சி, 3ந்தேதி இரவு ரிஷப வாகன உலா, 4ந்தேதி புஸ்ப விமான மலர் பல்லக்கு, அம்மன் அழைப்பு மற்றும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    5ந்தேதி அதிகாலை அம்மன் திருத்தேருக்கு எழு ந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று பிற்பகல் 2 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. தொடர்ந்து 6, 7-ந் தேதி களில் திருத்தேர் இழுக்க ப்பட்டு நிலை சென்றடை கிறது. 8 ந்தேதி தேர் திருவிழா நிறைவுபெறு கிறது. 9 ந்தேதி காலை 7 மணி அளவில் தரிசனம் நிகழ்ச்சியும் மாலை 3 மணிக்கு அம்பாள் சப்பர த்தில் புறப்பாடு நிகழ்ச்சியும் இரவு 8மணிக்கு மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது. 

    • மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மீனாட்சி அம்மன் கோவில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் உபகோயிலான தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அன்று மாலை 6 மணியளவில் மாரியம்மன் மின் அலங்காரம் செய்யப்பட்ட பூப்பல்லக்கில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் அம்மன் சன்னதி, கிழக்கு வாயிலில் இருந்து புறப்பாடாகி, அம்மன் சன்னதி தெரு, கீழ மாசி வீதி, தெற்கு மாசி வீதி, மேல மாசி வீதி, வடக்கு மாசி வீதி, யானைக்கல், வடக்கு வெளி வீதி, கீழ வெளி வீதி, காமராஜர் சாலை வழியாக, தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் வந்து சேரும்.

    அதன் பின்னர் மாரியம்மனுக்கு பூச்சொரிதலும், தீபாராதனையும் நடைபெறும். மேற்கண்ட தகவலை மீனாட்சி அம்மன் கோவில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • 28 -ந் தேதி நோம்பு சாட்டுதலுடன் திருவிழாவுக்காக ஆயத்தப்பணிகள் தொடங்குகிறது.
    • வருவாய்த்துறையின் சார்பில் ஏலம் விடப்படும்.

     உடுமலை :

    உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலின் திருவிழா சுற்றுவட்டார கிராமங்களின் திருவிழாவாக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.வரும் 28 -ந் தேதி நோம்பு சாட்டுதலுடன் திருவிழாவுக்காக ஆயத்தப்பணிகள் தொடங்குகிறது.இதனையடுத்து ஏப்ரல் 4 ந் தேதி மாலை 7 மணிக்கு கம்பம் போடுதல் நிகழ்வுடன் திருவிழா தொடங்குகிறது.விழாவின் உச்ச நிகழ்வான தேர்த்திருவிழா ஏப்ரல் 13 -ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.மேலும் 14 -ந் தேதி இரவு 10 மணிக்கு குட்டை திடலில் வாண வேடிக்கை நடைபெறவுள்ளது.

    அத்துடன் திருவிழா நாட்களில் வருவாய்துறைக்கு சொந்தமான 91 சென்ட் பரப்பளவுள்ள குட்டை திடலில் ராட்டினம்,மரணக்கிணறு உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் ஏராளமான கடைகள் அமைக்கப்படும்.இவ்வாறு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்கான உரிமம் வழங்கும் வகையில் ஆண்டுதோறும் வருவாய்த்துறையின் சார்பில் ஏலம் விடப்படும்.அந்தவகையில் நடப்பு ஆண்டில் வரும் ஏப்ரல் 7 ந் தேதி முதல் 14ந் தேதி வரை பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்காக குட்டை திடல் ஏலம் வரும் 27 ந் தேதி மதியம் 12 மணிக்கு உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

    இந்த ஏலத்துக்காக அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்த பட்ச ஏலத்தொகையாக ரூ. 46 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பங்குத்தொகையான ரூ .11 லட்சத்து 50 ஆயிரத்தை அச்சார தொகையாக இன்று காலை 11 மணி முதல் 12 மணிக்குள் கேட்பு வரைவோலையாக (டி டி)செலுத்த வேண்டும்.கடந்த ஆண்டில் அரசு நிர்ணயித்த தொகை அதிகமாக இருப்பதாகக் கூறி பல முறை ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.நடப்பு ஆண்டில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 30 நாட்கள் 30 உபயதாரர்கள் மூலம் நாள்தோறும் தேர் திருவிழா வானது நடைபெற உள்ளது.
    • பாரம்பரிய நடனங்களை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்

    ஊட்டி,

    ஊட்டியின் காக்கும் கடவுளாய் திகழும் மாரியம்மன், காளியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆண்டு தோறும் ஊட்டி மாரியம்மன், காளியம்மன் சித்திரை தேர் திருவிழா மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம்.

    இந்த விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. 30 நாட்கள் 30 உபயதாரர்கள் மூலம் நாள்தோறும் தேர் திருவிழா வானது நடைபெற உள்ளது.

    முதல் நாள் தொடக்கமாக நீலகிரி மாவட்ட ஒக்கலிகர் சங்கம் சார்பில் முதல் தேர்த் திருவிழா நடந்தது. இதில் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றது. இதை திரளான பொது மக்கள் கண்டு ரசித்தனர்.

    தேர்த்திருவிழாவில் மாரியம்மன் புலி வாகனத்தில் பூ பல்லக்கில் ஆதிபராசக்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மாலையில் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    ஒக்கலிகர் சங்க நிர்வாகிகள் சதிஷ்குமார்,சதிஷ்,ரவி,மோகன்,கிருஷ்ணன்,வினோத்,அசோக்,பிரகாஷ்,சுமந்த்,சந்தோஷ்,சைலிஷ்,சுரேஷ்,மோகன்,தீப்பு,குமார்,சத்தியநாராய ணன்,மோகன்ராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்சியை சுந்தர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்

    கலைநிகழ்சிக்கான ஏற்பாடுகளை லோகநாதன்,சம்பத்,சிவராஜ்,மோகன்,நாராயணன்,சங்கர்,சீனீ,மோகன்,செந்தில்குமார்,மஞ்சுநாத்,ரவி,சுமந்த்,சந்திப் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

    இதில் நீலகிரி மாவட் டத்தில் உள்ள அனைத்து ஒக்கலிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    • 31-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், ஏப்ரல் 1-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியும் நடக்கிறது.
    • 6, 7-ந் தேதிகளில் தேர் இழுக்கப்பட்டு நிலை வந்தடைகிறது.

    அவினாசி :

    கருவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை 21-ந் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்குகிறது.

    31-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், ஏப்ரல் 1-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. 4-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 5-ந் தேதி காலை அதிர்வேட்டு முழங்க அம்மன் திருத்தேருக்கு எழுந்தருள்கிறார். இதையடுத்து பக்தர்கள் ரதத்தின் மீது வீற்றிருக்கும் சாமியை தரிசனம் செய்கின்றனர்.

    பின்னர் பிற்பகல் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 6, 7-ந் தேதிகளில் தேர் இழுக்கப்பட்டு நிலை வந்தடைகிறது. 8-ந் தேதி பரிவேட்டை மற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது. 9-ந் தேதி மஞ்சள் நீர் விழா நடைபெறுகிறது.

    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தில்லைதெரு ெபாடிக்கார வெள்ளாளர் மண்டகப்படி இன்று நடைபெற்றது.
    • திருவிழாவை காண ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரில் கேட்டவருக்கு கேட்ட வரம் தரும் சக்தியாக விளங்கும் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த மாதம் 3-ந்தேதி முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைதொடர்ந்து கடந்த மாதம் 16-ந்தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் திருவிழா நடைபெற்றது. 17-ந்தேதிபூச்சொரிதல் எனப்படும் பூத்தேர் ஊர்வலமும், 21-ந்தேதி கொடியேற்றமும் நடைபெற்றது.

    அதனைதொடர்ந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்தும், தீச்சட்டி எடுத்து வந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தில்லைதெரு ெபாடிக்கார வெள்ளாளர் மண்டகப்படி இன்று நடைபெற்றது.

    இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து மெயின்ரோடு, கிழக்குரதவீதி வழியாக கோட்டைமாரியம்மன் கோவிலுக்கு வந்து பாலாபிேஷகம் செய்து வழிபட்டனர். இன்று இரவு அலங்கார மின்னொளி ரதத்தில் கோட்டை மாரியம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை காலை 6 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதற்காக கோவில் முன்பு அமைக்கப்படும் பூக்குழியில் பக்தர்கள் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர். மேலும் நாளை இரவு 8 மணிக்கு திருத்தேர் உலா நடைபெறுகிறது. 4-ந்தேதி தசாவதாரம், 5-ந்தேதி மஞ்சள்நீராட்டுதல் நடைபெற்று கொடியிறக்கம் நடைபெறும். 6-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும், 7-ந்தேதி தெப்பஉற்சவமும் நடைபெறுகிறது. திருவிழாவை காண ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

    • செங்கோட்டை வினாயகர் தீப்பாச்சி மாரியம்மன் கோவில் கொடை விழா 8-ம் நாள் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • நறுமண பொருட்களால் அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை வினாயகர் தீப்பாச்சி மாரியம்மன் கோவில் கொடை விழா தை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை முடிவடைந்த நிலையில் 8-ம் நாள் சிறப்பு வழிபாடு நடந்தது. காலையில் ஹோமங்கள், நண்பகல் நேரத்தில் நறுமண பொருட்களால் அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு அம்பாளுக்கு பல்வேறு நறுமண பூக்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் செங்கோட்டை சுற்று வட்டார பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பொள்ளாச்சி நகரின் மத்தியில் கோவில் உள்ளது.
    • அன்னதானம் நடைபெறுகிறது.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி நகரின் மத்தியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 3 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப் பட்டது. இதையடுத்து விமான பாலாலயம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. மேலும் திருப்பணிகள் தொடங்கி நடந்தது. பழமை வாய்ந்த விமான கோபுரத்துக்கும், சிற்பங்களுக்கும் வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

    இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 12-ந்தேதி யாக சாலை அமைக்கும் பணிக்கு கால்கோள் போடப்பட்டது. நேற்று கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையொட்டி விநாயகர் வழிபாடு, புண்யாகம், அனுக்ஞை, தன பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

    இன்று காலை 8.45 மணிக்கு விநாயகர் பூஜை, 10.30 மணிக்கு திரவியாகுதி, 11 மணிக்கு மூலவருக்கு பிரசன்னாபிஷேகம், நாளை (புதன்கிழமை) 9.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, இரவு 7 மணிக்கு யாக 5 சாலை பிரவேசம், முதற்கால 5 யாக பூஜை நடக்கிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாகபூஜை நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான கும் பாபிஷேகம் வருகிற 27-ந்தேதி காலை 9.45 மணிக்கு ராஜகோபுரம், மாரியம்மன் விமான கோபுர மகா கும்பாபிஷேகமும், காலை 9.55 மணிக்கு விநாயகர், முருகன், அங்காளம்மன் மற்றும் அன்னை மாரியம்மன் மூலாலய மகா கும்பாபிஷேகமும் நடைபெ றுகிறது.

    இதைத்தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார வழிபாடு, அன்னதானம் நடைபெறுகிறது. மாலையில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

    • பொங்கல் திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது.
    • சன்னதி முன் கம்பம் நடப்பட்டு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள காளிங்கராயன் பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் பொங்கல் திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது. பின்னர் அம்மன் சன்னதி முன் கம்பம் நடப்பட்டு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தல், உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நேற்று பவானி கூடுதுறையில் இருந்து தீர்த்த குட ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு அம்மனுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.

    முக்கிய நிகழ்வான பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை முதல் பவானி, லட்சுமி நகர், காளிங்கராயன்பாளையம், மேட்டுநாசுவம்பாளையம், எலவமலை உட்பட சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபாடு செய்தனர்.

    • சென்னிமலை அருகே பசுவபட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது.
    • பெண்கள் கலந்து கொண்ட சென்னி ஆண்டவர் குழுவினரின் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே பசுவபட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 30-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது.

    பின்னர் 7-ந் தேதி இரவு கோவிலில் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் தினமும் காலையில் பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வந்தனர்.

    13-ந் தேதி இரவு பெண்கள் கலந்து கொண்ட சென்னி ஆண்டவர் குழுவினரின் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கோவிலுக்கு உட்பட்ட திரளான பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிட்டு பொங்கல் வைத்து மாரியம்மனை வழிபட்டனர்.

    இரவு கம்பம் பிடுங்கி கிணற்றில் விடப்பட்டது.

    ×