என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் நாளை பூக்குழி விழா
- திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தில்லைதெரு ெபாடிக்கார வெள்ளாளர் மண்டகப்படி இன்று நடைபெற்றது.
- திருவிழாவை காண ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகரில் கேட்டவருக்கு கேட்ட வரம் தரும் சக்தியாக விளங்கும் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த மாதம் 3-ந்தேதி முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைதொடர்ந்து கடந்த மாதம் 16-ந்தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் திருவிழா நடைபெற்றது. 17-ந்தேதிபூச்சொரிதல் எனப்படும் பூத்தேர் ஊர்வலமும், 21-ந்தேதி கொடியேற்றமும் நடைபெற்றது.
அதனைதொடர்ந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்தும், தீச்சட்டி எடுத்து வந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தில்லைதெரு ெபாடிக்கார வெள்ளாளர் மண்டகப்படி இன்று நடைபெற்றது.
இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து மெயின்ரோடு, கிழக்குரதவீதி வழியாக கோட்டைமாரியம்மன் கோவிலுக்கு வந்து பாலாபிேஷகம் செய்து வழிபட்டனர். இன்று இரவு அலங்கார மின்னொளி ரதத்தில் கோட்டை மாரியம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை காலை 6 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதற்காக கோவில் முன்பு அமைக்கப்படும் பூக்குழியில் பக்தர்கள் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர். மேலும் நாளை இரவு 8 மணிக்கு திருத்தேர் உலா நடைபெறுகிறது. 4-ந்தேதி தசாவதாரம், 5-ந்தேதி மஞ்சள்நீராட்டுதல் நடைபெற்று கொடியிறக்கம் நடைபெறும். 6-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும், 7-ந்தேதி தெப்பஉற்சவமும் நடைபெறுகிறது. திருவிழாவை காண ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்