search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரியம்மன் கோவிலில்"

    • செல்லாண்டியம்மன், மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா நடைபெற்றது.
    • தொடர்ந்து பக்தர்கள் பலர் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.

    பவானி:

    பவானி நகரின் காவல் தெய்வமாக விளங்கி வரும் செல்லாண்டி அம்மன். மாரியம்மன் கோவில்களில் ஆண்டு தோறும் மாசி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா கடந்த 14-ந் தேதி பழனிபுரம் பட்டத்து அரசி அம்மன் கோவில், செல்லி யாண்டி அம்மன் கோவில் அருகில் உள்ள மாரியம்மன் கோவில், மேற்கு தெரு மாரியம்மன் கோவில், வர்ணபுரம் சமயபுரம் மாரி யம்மன் கோவில் மற்றும் எல்லை அம்மன் கோவில்க ளில் பக்தர்கள் முன்னிலை யில் பூச்சாட்டப்பட்டு விழா தொடங்கியது.

    இதையொட்டி நேற்று இரவு இந்த கோவில்களில் கம்பம் நடும் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடை பெற்றது.

    இதில் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் பலர் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.

    திருவிழாவையொட்டி வரும் 1-ந் தேதி (புதன் கிழமை) முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் திருவிழா நடக்கிறது. 

    • பொள்ளாச்சி நகரின் மத்தியில் கோவில் உள்ளது.
    • அன்னதானம் நடைபெறுகிறது.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி நகரின் மத்தியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 3 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப் பட்டது. இதையடுத்து விமான பாலாலயம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. மேலும் திருப்பணிகள் தொடங்கி நடந்தது. பழமை வாய்ந்த விமான கோபுரத்துக்கும், சிற்பங்களுக்கும் வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

    இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 12-ந்தேதி யாக சாலை அமைக்கும் பணிக்கு கால்கோள் போடப்பட்டது. நேற்று கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையொட்டி விநாயகர் வழிபாடு, புண்யாகம், அனுக்ஞை, தன பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

    இன்று காலை 8.45 மணிக்கு விநாயகர் பூஜை, 10.30 மணிக்கு திரவியாகுதி, 11 மணிக்கு மூலவருக்கு பிரசன்னாபிஷேகம், நாளை (புதன்கிழமை) 9.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, இரவு 7 மணிக்கு யாக 5 சாலை பிரவேசம், முதற்கால 5 யாக பூஜை நடக்கிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாகபூஜை நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான கும் பாபிஷேகம் வருகிற 27-ந்தேதி காலை 9.45 மணிக்கு ராஜகோபுரம், மாரியம்மன் விமான கோபுர மகா கும்பாபிஷேகமும், காலை 9.55 மணிக்கு விநாயகர், முருகன், அங்காளம்மன் மற்றும் அன்னை மாரியம்மன் மூலாலய மகா கும்பாபிஷேகமும் நடைபெ றுகிறது.

    இதைத்தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார வழிபாடு, அன்னதானம் நடைபெறுகிறது. மாலையில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

    • மாரியம்மன் சப்பரத்தில் வைக்கப்பட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து நாகேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் புடைசூழ பெண்கள் பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
    • காலையில் தொடங்கிய பால் அபிஷேகம் மதியத்திற்கும் மேல் தொடர்ந்தது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே ஊஞ்சலூரில் மாரியம்மன் கோவில், செல்லா ண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 17-வது ஆண்டாக 1008 பால் குட அபிஷேகம் நடைபெற்றது.

    இதனையொட்டி லட்சார்ச்சனை தொடங்கி நடைபெற்றது. அலங்க ரிக்கப்பட்ட மாரியம்மன் சப்பரத்தில் வைக்கப்பட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து நாகேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் புடைசூழ பெண்கள் பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

    பின்னர் காவிரி கரையில் உள்ள நாகே ஸ்வரர் கோவிலில் வைத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்ப ட்டது. ஊஞ்சலூர் மற்றும் சுற்றுப்புரத்தில் உள்ள கொளத்து ப்பாளையம், கருக்கம்பாளையம், அமராவதி புதூர், சொட்டையூர், வள்ளியம்பாளையம், காசிபாளையம் ஆகிய கிராமங்களில் இருந்து பால்குடம் எடுத்து வந்தவர்கள் அனைவரும் நாகேஸ்வரர் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.

    அதனை தொடர்ந்து 10½ மணியளவில் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு சப்பரத்தில் அம்மன் முன்னே வர ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் குடங்களில் பால் எடுத்து தொடர்ந்து வந்தனர்.

    ஊர்வலம் ஊஞ்சலூரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தது. முதலில் மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் துவங்கி யது. ஊர்வலமாக வந்தவர்கள் மாரியம்மன் கோவிலுக்கு ஒரு பிரிவி னரும் மற்றொரு பிரிவினர் செல்லாண்டியம்மன் கோவிலுக்கும் சென்று பால் அபிஷேகம் செய்தனர். காலையில் தொடங்கிய பால் அபிஷேகம் மதியத்திற்கும் மேல் தொடர்ந்தது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது.

    ×