செல்லாண்டியம்மன், மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா

செல்லாண்டியம்மன், மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா நடைபெற்றது.தொடர்ந்து பக்தர்கள் பலர் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.
செல்லாண்டியம்மன், மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா
Published on

பவானி:

பவானி நகரின் காவல் தெய்வமாக விளங்கி வரும் செல்லாண்டி அம்மன். மாரியம்மன் கோவில்களில் ஆண்டு தோறும் மாசி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா கடந்த 14-ந் தேதி பழனிபுரம் பட்டத்து அரசி அம்மன் கோவில், செல்லி யாண்டி அம்மன் கோவில் அருகில் உள்ள மாரியம்மன் கோவில், மேற்கு தெரு மாரியம்மன் கோவில், வர்ணபுரம் சமயபுரம் மாரி யம்மன் கோவில் மற்றும் எல்லை அம்மன் கோவில்க ளில் பக்தர்கள் முன்னிலை யில் பூச்சாட்டப்பட்டு விழா தொடங்கியது.

இதையொட்டி நேற்று இரவு இந்த கோவில்களில் கம்பம் நடும் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடை பெற்றது.

இதில் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் பலர் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.

திருவிழாவையொட்டி வரும் 1-ந் தேதி (புதன் கிழமை) முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் திருவிழா நடக்கிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com