search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருவலூர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றவர்கள். 

    கருவலூர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • 5 ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 4ந் தேதி புஸ்ப விமான மலர் பல்லக்கு, அம்மன் அழைப்பு மற்றும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    அவினாசி :

    அவினாசி அருகேயுள்ள கருவலூரில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வருகிற 5 ந்தேதி தேரோட்டம் நடக்கி றது. முன்னதாக தேர்த்திரு விழாவின் முக்கிய நிக ழ்வான திருக்கொடி யேற்றம் நிகழ்ச்சி நேற்று கோவிலில் நடந்தது. கோவில் முன்புறமுள்ள கொடிகம்பத்தை தூய்மை ப்படுத்தி சிறப்பு பூஜை நடந்தது.

    இதில் கோவில் அர்ச்சகர் ஹோமமந்திரம் மற்றும் பக்தி பாடல்கள் பாடி மேள வாத்தியம் முழங்க கொடி மரத்தில் கொடியே ற்றப்பட்டது. தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு பூத வாகன காட்சி, 3ந்தேதி இரவு ரிஷப வாகன உலா, 4ந்தேதி புஸ்ப விமான மலர் பல்லக்கு, அம்மன் அழைப்பு மற்றும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    5ந்தேதி அதிகாலை அம்மன் திருத்தேருக்கு எழு ந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று பிற்பகல் 2 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. தொடர்ந்து 6, 7-ந் தேதி களில் திருத்தேர் இழுக்க ப்பட்டு நிலை சென்றடை கிறது. 8 ந்தேதி தேர் திருவிழா நிறைவுபெறு கிறது. 9 ந்தேதி காலை 7 மணி அளவில் தரிசனம் நிகழ்ச்சியும் மாலை 3 மணிக்கு அம்பாள் சப்பர த்தில் புறப்பாடு நிகழ்ச்சியும் இரவு 8மணிக்கு மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது.

    Next Story
    ×