செங்கோட்டை மாரியம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி

செங்கோட்டை வினாயகர் தீப்பாச்சி மாரியம்மன் கோவில் கொடை விழா 8-ம் நாள் சிறப்பு வழிபாடு நடந்தது.நறுமண பொருட்களால் அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் அம்மன்
சிறப்பு அலங்காரத்தில் அம்மன்
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை வினாயகர் தீப்பாச்சி மாரியம்மன் கோவில் கொடை விழா தை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை முடிவடைந்த நிலையில் 8-ம் நாள் சிறப்பு வழிபாடு நடந்தது. காலையில் ஹோமங்கள், நண்பகல் நேரத்தில் நறுமண பொருட்களால் அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு அம்பாளுக்கு பல்வேறு நறுமண பூக்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் செங்கோட்டை சுற்று வட்டார பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com