என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mamata"
- உடலில் குறிப்பிடும்படியாக சுவாச பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய ஒரு வகையை சேர்ந்தது.
- ஒரு குழந்தைக்கு இருமல் மற்றும் ஜலதோஷம் பிடித்துவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் பரவி வரும் அடினோவைரசின் பாதிப்புக்கு குழந்தைகள் அதிக இலக்காகின்றனர். அவர்களில் பலர் உயிரிழந்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறும்போது,
குழந்தைகள் யாரும் பயப்பட வேண்டாம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார். அடினோவைரசின் பாதிப்புக்கு 19 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர் என கூறிய அவர், அவர்களில் 13 பேர் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர், ஒரு குழந்தைக்கு இருமல் மற்றும் ஜலதோஷம் பிடித்துவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அந்த குழந்தைக்கு காய்ச்சல் பாதிப்பு எதுவும் காணப்பட்டால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டியது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்த அடினோவைரசானது, லேசானது முதல் கடுமையான பாதிப்புகளை உடலில், குறிப்பிடும்படியாக சுவாச பகுதியில் ஏற்படுத்த கூடிய ஒரு வகையை சேர்ந்தது. அது எந்த வயது குழந்தையையும் பாதிக்க கூடியது. புதிதாக பிறக்கும் மற்றும் இளம் குழந்தைகளிடையே அது பரவலாக காணப்படும்.
கடுமையான பாதிப்பின்போது அறிகுறிகளாக, பொதுவான ஜலதோஷம் போன்ற பாதிப்பையும், காய்ச்சல், வறண்ட தொண்டை, நுரையீரல் பாதிப்பு, நிம்மோனியா, கண்கள் பிங்க் வண்ணத்தில் நிறம் மாறுதல், வாந்தி, குமட்டல், வயிற்று போக்கு உள்ளிட்ட வயிறு மற்றும் குடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட கூடும் என தெரிவித்து உள்ளது.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும், பாரதீய ஜனதா 18 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வென்றுள்ளன.
இந்த மாநிலத்தில் முன்னணி கட்சியாக இருந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.
மேற்கு வங்காளத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த பாரதீய ஜனதா திடீர் எழுச்சி பெற்று 18 இடங்களை கைப்பற்றி இருப்பது திரிணாமுல் காங்கிரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஆராய்வதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது.
அப்போது கட்சியின் பின்னடைவுக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். ஆனால், கட்சியினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
கூட்டத்துக்கு பின்னர் பேசிய மம்தா பானர்ஜி, பாரதீய ஜனதா இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதற்கு பின்னால் வெளிநாட்டு சக்திகளின் சதி இருக்கலாம் என்று கருதுவதாக கூறினார்.
ஆனால், இதற்கான ஆதாரம் எதுவும் என்னிடத்தில் இல்லை என்றார். மேலும் கூறிய அவர், ராஜஸ்தான், குஜராத், மற்றும் பல மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி பாரதீய ஜனதாவுக்கு கிடைத்து இருப்பதற்கு கண்டிப்பாக சதி பின்னணி இருக்க வேண்டும் என்று கூறினார்.
இதை சொல்வதற்கு மக்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன் என்று தெரிவித்தார்.
மேற்கு வங்காளத்தில் 45 மந்திரிகள் உள்ளனர். இதில், 3-ல் ஒரு பங்கு மந்திரியின் சொந்த பகுதியிலேயே பாரதீய ஜனதா அதிக வெற்றிகளை பெற்று இருந்தது.
இதனால் மம்தா பானர்ஜி அந்த மந்திரிகள் மீது கடுமையான அதிருப்தியில் இருந்தார்.
மாநிலத்தில் நிலவும் ஊழல், ஆள் கடத்தல் பிரச்சினைகள் போன்றவை ஆளும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி விட்டதாக எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்தார்.
உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் சரியாக தேர்தல் பணிகளை செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்களில் பெரும் பாலானோர் பாரதீய ஜனதாவுக்கே ஓட்டளித்து இருந்தனர். 60 சதவீத தபால் ஓட்டுகள் அந்த கட்சிக்கு கிடைத்து இருந்தது.
மோடி பிரசாரத்தின் போது, மாநில அரசு ஊழியர்களுக்கு மம்தா ஆட்சியில் எதுவும் செய்ய வில்லை. விலைவாசி படியை கூட சரியாக கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதுவும் அரசு ஊழியர்கள் பாரதீய ஜனதா பக்கம் சாய்வதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.
கொல்கத்தா:
தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு பா.ஜனதா மீண்டும் ஆட்சி வந்துவிடாமல் தடுக்கும் வகையில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை ஒரே அணியில் திரட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதற்காக சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.
தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை 23-ந்தேதி நடைபெற இருக்கும் நிலையில் அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் 2 முறை சந்தித்து பேசினார். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி பற்றி அவர் ஆலோசனை நடத்தினார். இதேபோல சரத்பவார், சரத்யாதவ், மாயாவதி, அகிலேஷ்யாதவ், சீதாராம்யெச்சூரி, கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்தார்.
மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை சந்தித்தும் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி இருந்த நிலையில் மேற்கு வங்காள முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தாபானர்ஜியை கொல்கத்தாவில் இன்று பிற்பகல் சந்திரபாபு நாயுடு சந்திக்கிறார். அங்குள்ள தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை நடக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி தொடர்பாக இருவரும் விவாதிப்பார்கள்.
ஏற்கனவே சந்தித்த தலைவர்கள் பற்றிய விவரங்களை மம்தாவிடம் சந்திரபாபு நாயுடு எடுத்துரைப்பார் என்று தெரிகிறது.
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி ஆறுகட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடுமையான மோதல்கள் நடந்தன.
பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர்.
இந்த பேரணி ரத்தான நிலையில் ஜாய்நகர் பகுதியில் நடைபெற்ற மற்றொரு பிரசார கூட்டத்தில் இன்று மம்தா பானர்ஜியை அமித் ஷா கடுமையாக தாக்கி பேசினார்.
‘இன்று இங்கு நான் 3 பிரசார கூட்டங்களில் பேச இருந்தேன். மம்தாவின் மருமகன் போட்டியிடும் தொகுதிக்கு நான் போனால் அவர் தோற்பது உறுதி என்பதால் அங்கு என்னுடைய நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனது பிரசாரத்திற்கு மட்டும்தான் மம்தா தடை விதிக்க முடியும். ஆனால், பாஜகவின் வெற்றியை அவரால் தடுத்து நிறுத்திவிட முடியாது.
மத்திய அரசு கொண்டுவந்த பல திட்டங்களின் பலன்கள் இங்குள்ள மக்களை வந்து சேராத வகையில் மம்தாவின் அரசு தடைக்கல்லாக நின்று தடுத்து விட்டது. அந்த திட்டங்களின் மூலம் இங்குள்ள மக்களிடையே பிரதமர் மோடி பிரபலமாகி விடக்கூடாது என்ற நோக்கத்தில் மம்தா இந்த திட்டங்களை எல்லாம் எதிர்த்து வருகிறார்.
இந்த மாநிலத்தில் உள்ள மக்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொன்னால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இந்த மேடையில் இருந்து நான் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்குகிறேன். நாளை வரை நான் கொல்கத்தாவில் இருப்பேன். முடிந்தால், துணிச்சல் இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று மம்தாவுக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன்’ என அமித் ஷா பேசினார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரதமர் மோடி பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இதனால் அவருக்கும், மேற்கு வங்க முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது.
மோடி மீதும், பா.ஜனதா மீதும் மம்தாபானர்ஜி தினமும் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். அந்த வரிசையில் நேற்று அவர் புதிய குற்றச்சாட்டு ஒற்றை வெளியிட்டார். பர்கானாஸ் மாவட்டம் அசோக் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
மேற்கு வங்காளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பண பட்டுவாடா நடக்கிறது. வாக்காளர்களுக்கு பா.ஜனதாவினர் ஏராளமான பணத்தை அள்ளி கொடுக்கிறார்கள்.
சமீபத்தில் பா.ஜனதா வேட்பாளர் பாரதிகோசின் காரில் இருந்து ஏராளமான பணத்தை கைப்பற்றி உள்ளனர். ஆனால் பா.ஜனதா மூத்த தலைவர்கள் பலர் தங்களுக்கு வழங்கப்படும் இசட்பிளஸ், ஒய் பிளஸ் பாதுகாப்பு படையை பயன்படுத்தி பணப்பெட்டிகளை கடத்தி செல்கிறார்கள்.
தங்களது வாகனத்திலேயே கட்டு கட்டாக பணத்தை அடுக்கி பாதுகாப்புடன் கொண்டு செல்கிறார்கள். தேர்தல் சமயத்தில் ஓட்டுச் சாவடிகளை கைப்பற்றுவதற்காக இந்த பணம் பயன்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. பாரதீய ஜனதா கட்சியினர் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வருகிறார்கள்.
பிரதமர் மோடியும், பாரதீய ஜனதா தலைவர்களும் பிரசாரத்துக்கு வரும் போது அவர்களது ஹெலிகாப்டர்களையோ, கார்களையோ பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம் எடுக்க அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த கார்களில் இருந்து பெட்டி பெட்டியாக பணத்தை கடத்துவதே இதற்கு காரணம் ஆகும்.
பிரதமர் மோடி வந்த விமானத்தில் இருந்து ஒரு பெட்டி எடுத்து செல்லப்படுவதை சில தினங்களுக்கு முன்பார்த்தோம். அதன் பிறகு படம் எடுக்க தடை செய்து விட்டார்கள். எனவே பா.ஜனதா தலைவர்களால் இதுபோல எத்தனை பெட்டிகளில் பணம் கொண்டு செல்லப்பட்டதோ? யாருக்கு தெரியும்.
பணத்தால் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்று பா.ஜனதா தலைவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் அதை தடுத்து நிறுத்துவோம். எப்போது பணம் கொண்டு சென்றாலும் கண்டுபிடித்து விடுவோம்.
இரவில் பணத்தை பட்டு வாடா செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்த பணத்தை எல்லாம் விழித்திருந்து பிடிக்கும்படி உத்தரவிட்டு இருக்கிறேன். பிரசாரம் ஓய்ந்து விட்டதால் எளிதாக பணம் கொடுத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது.
இவ்வாறு மம்தாபானர்ஜி கூறினார்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள புனியாட்பூரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
மாநிலத்தின் பல பகுதிகளில் பாஜக தொண்டர்களுக்கு எதிரான அராஜகத்தை மம்தா கட்டவிழ்த்து விடுவதாக குறிப்பிட்ட அவர், குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்