search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "state cabinet"

    பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட சறுக்கலுக்குப் பின்னர், மேற்கு வங்க மாநில அமைச்சரவையில் மம்தா பானர்ஜி அதிரடி மாற்றங்களை செய்துள்ளார்.
    கொல்கத்தா:

    பாராளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது. திரிணாமுல் காங்கிரசின் கோட்டையான மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 பாராளுமன்றத் தொகுதிகளில் 22 இடங்களை மட்டுமே திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜக 18 தொகுதிகளை கைப்பற்றி 2ம் இடத்தைப் பிடித்தது. அத்துடன், அக்கட்சியின் 2 எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு கவுன்சிலர்கள் இன்று பாஜகவில் சேர்ந்துள்ளனர்.

    இந்நிலையில் மேற்கு வங்க மாநில அமைச்சரவையில் மம்தா அதிரடி மாற்றங்களை செய்துள்ளார். போக்குவரத்து துறை அமைச்சர் சுவெந்து அதிகாரிக்கு நீர்ப்பாசனத் துறை மற்றும் நீர்வள விசாரணை மற்றும் மேம்பாட்டுத் துறை ஆகிய இரண்டு துறைகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பயோடெக்னாலஜி துறை அமைச்சர் பிரத்யா பாசுவுக்கு கூடுதல் பொறுப்பாக வனத்துறை வழங்கப்பட்டுள்ளது.

    தீயணைப்புத்துறை அமைச்சர் சுஜித் போஸ், வனத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நீர்வள விசாரணை மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சோமன் மகாபத்ரா, சுற்றுச்சூழல், மாசுபாடு மற்றும் பொது சுகாதார பொறியியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மாலே காட்டக், தொழிலாளர் மற்றும் சட்டத்துறையையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ரஜீப் பானர்ஜி எஸ்சி,எஸ்டி மற்றும் பழங்குடியினர் நலத்துறையையும் கவனிப்பார்கள். திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவர் சுபத்ரா முகர்ஜி, பஞ்சாயத்து துறை அமைச்சராக நீடிக்கிறார்.

    சந்திரமா பட்டாச்சாரியாவுக்கு பஞ்சாயத்து துறை இணை அமைச்சர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சர் பினய் கிருஷ்ண பர்மான், மேற்கு பிராந்திய வளர்ச்சித் துறை அமைச்சர் சாந்திராம் மகாட்டோ ஆகியோருக்கு துறைகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. 
    ×