search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தாவில் மம்தாபானர்ஜியை இன்று சந்திரபாபுநாயுடு சந்திக்கிறார்
    X

    கொல்கத்தாவில் மம்தாபானர்ஜியை இன்று சந்திரபாபுநாயுடு சந்திக்கிறார்

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி இருந்த நிலையில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை இன்று சந்திரபாபுநாயுடு சந்திக்கிறார்.

    கொல்கத்தா:

    தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு பா.ஜனதா மீண்டும் ஆட்சி வந்துவிடாமல் தடுக்கும் வகையில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை ஒரே அணியில் திரட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இதற்காக சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

    தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை 23-ந்தேதி நடைபெற இருக்கும் நிலையில் அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் 2 முறை சந்தித்து பேசினார். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி பற்றி அவர் ஆலோசனை நடத்தினார். இதேபோல சரத்பவார், சரத்யாதவ், மாயாவதி, அகிலேஷ்யாதவ், சீதாராம்யெச்சூரி, கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்தார்.

    மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை சந்தித்தும் ஆலோசனை நடத்தினார்.


    இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி இருந்த நிலையில் மேற்கு வங்காள முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தாபானர்ஜியை கொல்கத்தாவில் இன்று பிற்பகல் சந்திரபாபு நாயுடு சந்திக்கிறார். அங்குள்ள தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை நடக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி தொடர்பாக இருவரும் விவாதிப்பார்கள்.

    ஏற்கனவே சந்தித்த தலைவர்கள் பற்றிய விவரங்களை மம்தாவிடம் சந்திரபாபு நாயுடு எடுத்துரைப்பார் என்று தெரிகிறது.

    Next Story
    ×