search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumaraswamy"

    • சமீபத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் உலக கோப்பை போட்டி நடந்தது.
    • இந்தப் போட்டியை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நேரில் சென்று பார்த்தனர்.

    பெங்களூரு:

    சமீபத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இடையிலான உலக கோப்பை போட்டி நடந்தது. இதை நேரில் சென்று முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியே கர்நாடகாவின் நீரோ என மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக குமாரசாமி கூறுகையில், ரோம் நகரம் பற்றி எரிந்து கொண்டிருந்தபோது, நீரோ மன்னன் வயலின் வாசித்துக் கொண்டிருந்தான். அதுபோல், இங்கு மக்கள் சிரமத்தில் உள்ளனர், கர்நாடகாவின் நீரோ கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார் என குற்றம்சாட்டினார்.

    கர்நாடக மாநிலம் மின்சாரப் பிரச்னையில் சிக்கித் தவித்து வரும் நிலையில், முதல் மந்திரியும், துணை முதல் மந்திரியும் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதில் மும்முரமாக இருந்துள்ளனர் என தெரிவித்தார்.

    செயற்கையான மின் பற்றாக்குறையை உருவாக்கி வருகிறது. இதன்மூலம் வெளியில் இருந்து மின்சாரம் வாங்குவதாக கூறி கோடிக்கணக்கில் கமிஷன் அடிப்பது என காங்கிரஸ் அரசை கடுமையாக சாடியுள்ளார்.

    • எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து நான் இந்த அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
    • பக்கவாத பாதிப்புக்கான அறிகுறி தென்பட்டால் ஒரு நிமிடத்தை கூட விரையம் செய்யக்கூடாது.

    பெங்களூரு:

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி கடந்த 29-ந் தேதி பிடதி அருகே உள்ள தனது தோட்ட இல்லத்தில் தங்கி இருந்தார். அன்றைய தினம் இரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை குடும்பத்தினர் அழைத்து வந்து ஜெயநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

    பின்னர் உடனடியாக அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தேவையான சிகிச்சைகளை டாக்டர்கள் தொடங்கினர். 2 நாட்களில் அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார். இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றினர். அங்கு 3 நாட்கள் இருந்த நிலையில் குமாரசாமி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    அவர் வீட்டிற்கு புறப்படுவதற்கு முன்பு அந்த மருத்துவமனையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து நான் இந்த அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இங்கு டாக்டர்கள் எனக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்ததால் நான் குணம் அடைந்துள்ளேன். கடந்த 5 நாட்களாக எனது நண்பர்கள் பயத்தில் இருந்தனர். நான் இன்று (நேற்று) உங்களிடம் பேசுகிறேன் என்றால் நான் மறுபிறவி எடுத்து வந்துள்ளேன்.

    கடவுள் எனக்கு 3-வது முறையாக மறுபிறவி வழங்கியுள்ளார். ஒருவர் ஒரு முறை தான் பிறவி எடுக்க முடியும். ஆனால் எனது 64 ஆண்டு வாழ்க்கையில் 3-வது முறையாக பிறவி எடுத்துள்ளேன்.

    கடந்த மாதம் (ஆகஸ்டு) 30-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு நான் படுக்கையில் இருந்து எழுந்தேன். எனது உடல்நிலை நன்றாக இல்லை என்பதை உணர்ந்தேன். நான் உடனடியாக டாக்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி நிலையை கூறினேன். அதன் பிறகு நரம்பியல் டாக்டருடன் பேசினேன். அவர் கூறிய அறிவுரைப்படி நான் மருத்துவமனையில் சேர்ந்தேன்.

    பக்கவாத பாதிப்புக்கான அறிகுறி தென்பட்டால் ஒரு நிமிடத்தை கூட விரையம் செய்யக்கூடாது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வர வேண்டும். நான் எனக்கு ஏற்பட்ட பக்கவாத பாதிப்பை அலட்சியப்படுத்தி இருந்தால், மறுநாள் காலையில் தான் ஆஸ்பத்திரிக்கு போய் இருப்பேன். அவ்வாறான நிலை ஏற்பட்டு இருந்தால், மீதமுள்ள எனது வாழ்நாள் முழுவதும் படுத்த படுக்கையாக இருந்திருப்பேன்.

    டாக்டர்கள் பணத்திற்காக வேலை செய்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். நோயாளிகள் வந்தால் அவர்களை காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமாக பணியாற்றுகிறார்கள்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    • கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமிக்கு திடீர் உடல்நலக் குறைவு.
    • குமாரசாமி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை தகவல்.

    பெங்களூரு ஜெய்நகரில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அவரது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் குமாரசாமி எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • மின் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    • இது கிரகஜோதி திட்டம் இல்லை, கிரக நாடக திட்டமாகும்.

    பெங்களூரு :

    பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    5 இலவச திட்டங்களை நிறைவேற்றுவதாக கூறி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. தற்போது அந்த இலவச திட்டங்களை நிறைவேற்றுவதற்காக மின் கட்டணத்தை அரசு உயர்த்தி இருக்கிறது. அதுவும் மின் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. 200 யூனிட் இலவச மின்சாரம் தருவதாக கூறிவிட்டு, மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை காங்கிரஸ் அரசு ஏமாற்றுகிறது.

    இது கிரகஜோதி திட்டம் இல்லை, கிரக நாடக திட்டமாகும். மாநிலத்தில் மின் கட்டண உயர்வு விவகாரத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 தேசிய கட்சிகளும் விளையாடுகிறது. காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் இப்போது தான் ஆட்சிக்கு வந்துள்ளோம், நாங்கள் கட்டணத்தை உயர்த்தவில்லை என்கிறார்கள்.

    பா.ஜனதாவினர் நாங்கள் ஆட்சியில் இல்லை, காங்கிரஸ் தான் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக நாடகமாடுகிறார்கள். மின் கட்டண உயர்வால் சிறு தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தன்னை நிதி மந்திரி என்று கூறிக் கொள்ளும் சித்தராமையாவுக்கு சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவது குறித்து புரிந்து கொள்ள முடியவில்லையா?.

    சிறு தொழில் நிறுவன அதிபர்கள் பல கோடி ரூபாய் முதலீடு செய்து, ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகின்றனர். இலவச வாக்குறுதி அளித்துவிட்டு மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியலில் வதந்திகள் பரவுவது இயல்பு.
    • எனக்கு தேசிய அரசியலுக்கு செல்ல விருப்பம் இல்லை.

    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சன்னபட்டணாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் கூட்டணி வைப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அரசியலில் வதந்திகள் பரவுவது இயல்பு. இந்த கூட்டணி விஷயத்தை என்னிடம் யாரும் கூறவில்லை. அதுபற்றி நாங்கள் எங்கும் விவாதிக்கவில்லை. பாராளுமன்ற தேர்தல் குறித்து எங்கள் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். எந்த ரீதியில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.

    எனக்கு தேசிய அரசியலுக்கு செல்ல விருப்பம் இல்லை. கடந்த முறையே தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இருக்கவில்லை. கட்சி நிர்வாகிகளின் அழுத்தத்திற்கு பணிந்து நான் தேர்தலில் போட்டியிட்டேன். என் விஷயத்தை விடுங்கள், சில எம்.பி.க்கள், தேர்தலில் போட்டியிடுவது போதும் என்று பேசியுள்ளனர். அரசின் 5 உத்தரவாத திட்டங்கள் குறித்து பேச இன்னும் நேரம் உள்ளது.

    மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். ஆனால் திட்டத்தின் பயன்களை மக்களுக்கு எப்படி கொண்டு போய் சேர்க்கிறார்கள் என்பது முக்கியம். வாடகைதாரர்களுக்கு இலவச மின்சாரம் கிடையாது என்று கூறினர். அதன் பிறகு அவர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும் என்று கூறினர்.

    வாடகை வீடுகளில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர், ஒப்பந்தம் செய்து கொள்வது இல்லை. இப்படி பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்த திட்டத்தை அறிவிக்கும்போது, எனக்கும் இலவசம், உங்களுக்கும் இலவசம் என்று கூறினர். இப்போது இந்த திட்டங்களை செயல்படுத்தி எவ்வாறு நிர்வகிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    • தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் அரசு தான் உள்ளது.
    • உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    ராமநகர் :

    முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகரில் நேற்று நிருபா்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் நடைபெற்ற பா.ஜனதா ஆட்சி மீது காங்கிரசார் 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை கூறினர். இந்த குற்றச்சாட்டை காங்கிரசார் நிரூபித்தார்களா?. லோக்அயுக்தாவில் அவர்கள் புகார் செய்தனரா?. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்கனவே 40 சதவீதம் கொடுத்தது போக தற்போது தங்களுக்கு 5 சதவீத கமிஷன் வழங்குமாறு மந்திரிகள் கேட்பதாக நான் கூறினேன்.

    இதுகுறித்து லோக்அயுக்தாவில் புகார் அளிக்கும்படி காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சொல்கிறார். தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் அரசு தான் உள்ளது.

    40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும். இதில் உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். குற்றச்சாட்டு கூறியவர்களிடம் ஆதாரங்கள் இருக்க வேண்டும் அல்லவா?.

    ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினரும் 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை கூறினர். அவர்கள் ஆதாரம் கொடுத்தார்களா?. லோக்அயுக்தாவில் புகார் அளிக்க காங்கிரசாரை யார் தடுத்தனர்?. கடந்த மே மாதம் 8-ந் தேதி பெங்களூரு மாநகராட்சியில் ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.675 கோடி பட்டுவாடா செய்யாதது ஏன்?. அதை விடுவிக்காமல் வைத்து கொண்டிருப்பது ஏன்?. இதுகுறித்து டி.கே.சிவக்குமார் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    இதற்கு முன்னதாக சன்னபட்டணாவில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தை குமாரசாமி நடத்தினார். இதில் அந்த தாலுகா அளவிலான அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்த பகுதியில் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி குமாரசாமி உத்தரவிட்டார்.

    • கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக சித்தராமையா இருந்தார்.
    • காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பாக 5 இலவச திட்டங்களை அறிவித்திருந்தனர்.

    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

    காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பாக 5 இலவச திட்டங்களை அறிவித்திருந்தனர். அனைவருக்கும் இலவசம் என வாக்குறுதி அளித்தார்கள். தற்போது அந்த இலவச திட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து மக்களை ஏமாற்றுகிறார்கள். காங்கிரசின் இந்த இலவச திட்டங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் ஏமாற்று வேலை பற்றி அறிந்து கொள்ள மக்களுக்கு நீண்ட நாட்கள் தேவைப்படாது.

    காங்கிரசின் 5 இலவச திட்டங்கள் பற்றி பேசவோ, விமர்சனம் செய்யவோ எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளுக்கும், தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு இலவசங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதும் வேதனை அளிக்கிறது.

    கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக சித்தராமையா இருந்தார். அவரது தலைமையில் தான் ஆட்சி நடைபெற்றது. அந்த சந்தர்ப்பத்தில் மாநிலத்தில் அரசு பணி இடங்கள் 2¾ லட்சத்திற்கும் மேல் காலியாக இருந்தது. அப்போது காலியாக இருந்த அரசு பணி இடங்களை நிரப்பவோ, வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வழங்கவோ சித்தராமையா முன்வரவில்லை.

    சித்தராமையா ஆட்சியில் பட்டதாரிகளுக்கு வேலை வழங்காமல், சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர். பட்டதாரிகளிடம் இருந்து வாக்குகளை பெற்றுவிட்டு, அரசு துறைகளில் உள்ள 2¾ லட்சம் காலி பணி இடங்களை நிரப்பாமல் தற்போது ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறார்கள். அதற்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். 24 மாதம் மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இலவச திட்டங்களுக்காக விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க கோரிய வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
    • இந்த விழாவில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    பெங்களூரு:

    தலைநகர் டெல்லியில் வரும் 28-ம் தேதி திறக்கப்படும் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று பல கட்சிகள் இதில் பங்கேற்க முடிவு செய்துள்ளன.

    இதற்கிடையே, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவும் இந்த விழாவில் பங்கேற்பதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் நான் பங்கேற்கிறேன். இது நாட்டின் சொத்து. யாருடைய தனிப்பட்ட விஷயமும் அல்ல என தெரிவித்தார்.

    இதேபோல தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாத பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதாதளம், சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட 7 கட்சிகளின் பிரதிநிதிகள், பா.ஜ.க. கூட்டணியை சேர்ந்த 18 கட்சிகள் என மொத்தம் 25 கட்சிகள் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

    மேலும், புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க கோரிய வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில், நாங்கள் ஒன்றும் காங்கிரசின் அடிமை இல்லை எனவும், பாராளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்பது எங்கள் கட்சியின் முடிவு என மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் ஒன்றும் காங்கிரசுக்கு அடிமை இல்லை. புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்பது கட்சியின் சொந்த முடிவு. நாங்கள் காங்கிரசை ஏன் பின்தொடர வேண்டும் என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

    • பா.ஜனதா கொள்ளையடித்த வழியில் தான் காங்கிரஸ் கட்சியும் கொள்ளையடிக்க போகிறது.
    • காங்கிரஸ் கட்சி அளித்துள்ள உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதல்ல.

    ராமநகர் :

    ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டார். இதில் அவர் பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததாக நினைக்க வேண்டாம். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து எந்த கவலையும் வேண்டாம். பா.ஜனதா கொள்ளையடித்த வழியில் தான் காங்கிரஸ் கட்சியும் கொள்ளையடிக்க போகிறது. அதில் புதியதாக எதுவும் நடக்கப்போவதில்லை. யாரை எங்கே எப்படி தடுப்பது என்பது எனக்கு தெரியும். நான் போராட தயாராக இருக்கிறேன். நான் யாரிடமும் உதவி கேட்க மாட்டேன்.

    காங்கிரஸ் கட்சி அளித்துள்ள உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதல்ல. இந்த திட்டங்களை நிறைவேற்ற ரூ.60 ஆயிரம் கோடி முதல் ரூ.70 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. அவர்களுக்கு எப்படி அந்த நிதி கிடைக்கும்?.

    இந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கினால் எப்படி சாலைகள், நீர்ப்பாசனம், உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும். காங்கிரஸ் வளர்ச்சிப் பணிகளை எப்படி மேற்கொள்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த ஆட்சியில் பெரிய அளவில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் என்பதை எதிர்பார்க்க வேண்டாம்.

    ஜனதாதளம் (எஸ்) கட்சி இந்த முறை 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் சிலரின் சதி மற்றும் பொய் குற்றச்சாட்டுகளால் சமுதாயத்தின் 3 சதவீத வாக்குகள் நமது கட்சிக்கு கிடைக்கவில்லை. பா.ஜனதாவுடன், ஜனதாதளம் (எஸ்) கட்சி கைகோர்க்கும் என்று தவறான தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பரப்பினார்கள். பா.ஜனதா தலைவர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சியை அழிக்க திட்டமிட்டனர்.

    எங்கள் குடும்பம் இதை விட பல அதிர்ச்சிகளை தாங்கியுள்ளது. கடவுள், மக்களின் அருள் எங்களுக்கு உள்ளது. வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம். வரும் காலத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கர்நாடகத்தில் நவம்பர் மாதத்திற்குள் அரசியல் மாற்றம் நிகழும். பொறுத்திருந்து பாருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காங்கிரஸ் கட்சி எங்களை விட பெரிய கட்சி.
    • ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள் உண்மையாகியுள்ளது.

    ராமநகர்

    ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவுக்கு வந்த ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எங்கள் கட்சிக்கு தோல்வி என்பது புதியதல்ல. எச்.டி.தேவகவுடா தலைமையில் இருமுறை தேர்தலில் தோல்வியை தழுவிய போதும் ஜனதாதளம் (எஸ்) கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. அதுபோல் மீண்டும் ஆட்சியை பிடிப்போம். கடந்த 6 மாதங்களாக நான் கடுமையாக உழைத்தேன். ஆனால் எனது எதிர்பார்ப்பு பொய்யானது. ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள் உண்மையாகியுள்ளது. தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்து வரும் நாட்களில் கட்சியினருடன் சேர்ந்து கட்சியை பலப்படுத்துவோம்.

    ராமநகர் தொகுதியில் நிகில் குமாரசாமி தோல்வி அடைந்தது பற்றி எந்த விவாதமும் செய்யவில்லை. அது முடிந்துபோன அத்தியாயம். இன்று தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள், வருங்காலத்தில் வெற்றி பெறுவார்கள். ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வியை சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பழைய மைசூரு பகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சியை பா.ஜனதா தனது அதிகார பலம், பண பலத்தால் அழிக்க முயன்றது. இதனால் இந்த தேர்தலில் எங்கள் கட்சி தோற்றுவிட்டது.

    காங்கிரஸ் கட்சி எங்களை விட பெரிய கட்சி. அவர்கள் உத்தரவாத திட்டங்கள் இலவசம் என கூறினர். இப்போது அவர்கள் உத்தரவாத திட்டங்களுக்கு நிபந்தனை என கூறுகிறார்கள். அடுத்து என்ன சொல்ல போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

    எங்கள் சமுதாயத்திற்கு முதல்-மந்திரி பதவி கிடைக்க வேண்டும். முதல்-மந்திரி பதவியை யார் வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம். ஆனால் அவர்கள் ஒட்டுமொத்த மக்களின் முதல்-மந்திரியாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாட்டிற்கு குடும்ப அரசியலால் அல்ல, மதவாத அரசியலால் தான் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பதிலளித்துள்ளார்.
    பெங்களூரு:

    முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சுலபமானது அல்ல பிரதமர் மோடி, குடும்ப அரசியல் நாட்டிற்கு ஆபத்தானது என்று கூறியுள்ளார். இது அவரது புதிய உபதேசம். நாட்டின் தற்போதைய நிலை குறித்து அவர் பேசி இருக்க வேண்டும். அதை விடுத்து தேர்தல் பிரசாரத்தில் பேசுவது போல் பேசியிருக்கிறார். காங்கிரஸ் பலவீனம் அடைந்துவிட்ட பிறகு மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு மாநில கட்சிகளே சவாலாக திகழ்கின்றன.

    இந்த கட்சிகளை ஒழித்துக்கட்ட பா.ஜனதா என்ன செய்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயப்பிரகாஷ் நாராயண் பல்வேறு கட்சிகளை ஒன்று திரட்டி ஜனதா பரிவார் பெயரில் போராடினார். அந்த பரிவாரில் பா.ஜனதாவும் ஒரு கட்சியாக இருந்தது. ஜனதா பரிவாரில் ஜனதா தளம் (எஸ்), ஜே.டி.யு., ஆர்.ஜே.டி., பி.ஜே.டி., சமாஜ்வாதி கட்சிகளும் ஒரு அங்கமாக இருந்தன. இந்த கட்சிகளின் வேர் ஆழமாக வேரூன்றியுள்ளது. அதனால் இந்த கட்சிகளை அழிப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல.

    குடும்ப அரசியலுக்கு எதிராக பேசும் மோடி, அவரது கட்சியில் இருக்கும் குடும்ப வாரிசுகள், ஊழல் குறித்து ஏன் பேசுவது இல்லை. நாட்டிற்கு ஆபத்து இருப்பது குடும்ப அரசியலால் அல்ல, பா.ஜனதாவின் மதவாத அரசியலால் தான் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உணர்வு பூர்வமாக மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பது என்பது தான் ஜனநாயகத்திறகு உண்மையான எதிரி.

    கர்நாடகத்தில் 2 முறை பா.ஜனதா அரசு எப்படி வந்தது?. நேர்மையான வழியில் பா.ஜனதா ஆட்சியை பிடித்ததா?. எம்.எல்.ஏ.க்களை சந்தையில் மாடுகளை பேரம் பேசி வாங்குவது போல் வாங்கி பா.ஜனதா ஆட்சி அமைத்தது. இந்த ஊழல் அரசுக்கு பிரதமர் மோடி அனுமதி அளித்தது பொய்யா?. ஆபரேஷன் தாமரையை தேசியமயம் ஆக்கிய இந்த மோசமான அரசியலை கண்டு மவுனம் காத்தது மோடி இல்லையா?.

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி பதவியை விற்பனைக்கு வைத்தது யார்?. அந்த பதவிக்கு ரூ.2,500 கோடி கேட்டனர் என்று கூறியது பா.ஜனதா எம்.எல்.ஏ.. அந்த எம்.எல்.ஏ. மீது பா.ஜனதா நடவடிக்கை எடுத்ததா?. குடும்ப அரசியலை முன்வைத்து மாநில கட்சிகளை அழிக்க நினைக்கும் பா.ஜனதாவின் முயற்சி வெற்றி பெறாது. இந்தியா என்றால் பா.ஜனதா மட்டுமல்ல. 140 கோடி பேரை உள்ளடக்கியது தான் இந்தியா. இதை மோடி புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.
    கர்நாடகத்தில் நல்லிணக்கத்தை பாழ்படுத்த இந்து அமைப்புகளை பா.ஜனதா அரசு ஊக்குவிக்கிறது. மாநிலங்களவை தேர்தலில் 4-வது இடத்திற்கு தேவையான வாக்குகள் எந்த கட்சியிடமும் இல்லை
    பெங்களூரு:

    மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரசார் இழந்துவிட்டனர் என்று குமாரசாமி கூறியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    சித்தராமையா சாதிகளுக்கு எதிராக பேசுகிறார். ஆனால் சாதி வாரியாக நடைபெறும் மாநாடுகளில் கலந்து கொள்கிறார். இது தான் அவரது மதசார்பற்ற கொள்கை. நான் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி நடத்தியபோது கூட மத பிரச்சினைகளுக்கு இடம் அளிக்கவில்லை. ஆனால் தற்போது என்ன ஆகியுள்ளது. கடந்த சில மாதங்களாக சமூகங்களை உடைக்க முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு காரணம் யார், பா.ஜனதா அரசு அமைய காரணம் யார் என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி நடத்தினேன். அதே போல் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தேன். ஆனால் எங்கள் கட்சியை பா.ஜனதாவின் "பீ டீம்" என்று காங்கிரசார் விமர்சிக்கிறார்கள்.

    மராட்டியத்தில் சிவசேனா கட்சியுடன் சேர்ந்து காங்கிரஸ் ஆட்சி நடத்துகிறது. இதை என்னவென்று சொல்வது?. மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரசார் இழந்துவிட்டனர். நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டு சேரவில்லை. மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க சபதம் செய்து பணியாற்றி வருகிறோம். கர்நாடகத்தில் நல்லிணக்கத்தை பாழ்படுத்த இந்து அமைப்புகளை பா.ஜனதா அரசு ஊக்குவிக்கிறது. மாநிலங்களவை தேர்தலில் 4-வது இடத்திற்கு தேவையான வாக்குகள் எந்த கட்சியிடமும் இல்லை. அதனால் நாங்கள் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.
    ×