search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in Erode"

    • தியேட்டர்களிலும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர உத்தரவு விடப்பட்டுள்ளது.
    • இது தொடர்பாக அந்தந்த தியேட்டருக்கு முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து வேகம் எடுக்க தொடங்கியது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இதன் எதிரொலியாக தமிழ்நாட்டிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    தற்போது தினமும் 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் தடுப்பு நடவடி க்கையை தீவிரப்படுத்தி உள்ள சுகாதாரத் துறையினர் பல்வேறு கட்டுப்பா டுகளையும் விதிக்க தொடங்கியுள்ளனர்.

    பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போதும் முககவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுபோல் சோப்பு களை கொண்டு கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும், மக்கள் கூடும் இடங்களில் கவனமு டன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதி ப்பு பதிவாகி வருகிறது. கடந்த 2 நாட்க ளாக தி னசரி பாதிப்பு 7 ஆக பதிவாகி வருகிறது.

    தினசரி பாதிப்பு பெ ரிய அள வில் இல்லா விட்டா லும் சுகாதா ரத்துறையினர் தடுப்பு நடவடிக்கை களில் ஈடு பட்டு வருகின்றனர்.

    முதற்க ட்டமாக அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் அங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயா ளிகள், நோயாளிகளுடன் வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என உத்தரவு அமலுக்கு வந்தது.

    இதனையடுத்து டாக்டர்கள், செவிலியர்கள் முககவசம் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்குள் முக கவசம் அணிந்து வர வேண்டும் என உத்தரவு அமலுக்கு வந்தது.

    தற்போது அங்கு வரும் நீதிபதிகள், வக்கீல்கள், வழக்கு சம்பந்தமாக வரும் போலீ சார் அனைவரும் முககவசம் அணிந்து வருகின்றனர்.

    தொடர்ந்து தற்போது தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என உத்தரவு விடப்பட்டு ள்ளது.

    இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்து விட்டது. இது தொடர்பாக அந்தந்த தியேட்டருக்கு முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் திரைப்படம் பார்க்க வரும் மக்கள் கண்டிப்பாக முகக வசம் அணிந்து வர வேண்டும் என எழுதப்பட்டிருந்தது.

    இதனால் பெரும்பா லானவர்கள் முககவசம் அணிந்து படம் பார்க்க சென்றனர். முககவசம் அணியாமல் வருபவ ர்களுக்கு தியேட்டர் சார்பில் முககவசம் வழங்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்வதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    அவ்வாறு செல்ல நேரிட்டால் கண்டிப்பாக முகவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

    • மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    • முககவசம் அணிந்து செல்வது அவசியம் என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.

    கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இது கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 729 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 975 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 20 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருவதால் கொரோனா தினசரி பரிசோதனையை அதிகரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தற்போது நாளொன்றுக்கு 60 முதல் 70 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    இதேப்போல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முககவசம் அணிந்து செல்வது அவசியம் என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    • 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    • 10 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது.

    பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.

    கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 682 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

    இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 938 பேர் கொரோ னா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்து ள்ளனர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 10 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுவரை தினசரி பாதிப்பு 1,2 என பதிவாகி வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 3 பதிவாகி உள்ளது.

    • ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நேற்று இரவு 11 மணி முதலே ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பொது மக்களுடன் இணைந்து புத்தாண்டு வரவேற்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினார்.

    ஈரோடு:

    2023-ம் ஆண்டு புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதற்காக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நேற்று இரவு 11 மணி முதலே ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் அதிகரித்தது.

    இளைஞர்கள் தங்களது நண்பர்களுடன் வந்திருந்தனர். சரியாக நள்ளிரவு 12 மணி அளவில் புத்தாண்டு பிறந்ததும் குடியிருந்த பொதுமக்கள் உற்சாகம் மிகுதியில் ஹேப்பி நியூ இயர் என்று விண்ணை தொடும் அளவுக்கு கோஷம் எழுப்பினர். ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் டவுன் டி.எஸ்.பி.ஆனந்த குமார் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் குறித்து போலீசார் கண்காணி த்தனர்.

    அப்போது சில இளைஞர்கள் மது அருந்து கொண்டு உற்சாகமிகுதியில் கத்திக்கொண்டு சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களுக்கு போலீசார் இவ்வாறு மது அருந்தி செல்வது தவறு என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இன்னும் சில இளைஞர்கள் அதிக அளவில் மதுபோதையில் இருந்ததால் அவர்களது வாகனங்களை வாங்கிக் கொண்டு அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து பின்னர் அந்த வாகனங்களை திரும்ப ஒப்படைத்தனர்.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பொது மக்களுடன் இணைந்து புத்தாண்டு வரவேற்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினார்.

    ஈரோடு காளைமாட்டு சிலை, ரெயில் நிலையம், பஸ் நிலையம், ஸ்வஸ்திக் கார்னர், மணிக்கூண்டு ஜி.எச். ரவுண்டானா , மக்கள் அதிக கூடும் இடங்கள், வழிபாட்டு தளங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    புத்தாண்டையொட்டி இன்று அதிகாலையிலேயே கோவில் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மக்கள் புத்தாடைகள் அணிந்து சாமியை வழிபட்டனர்.

    புத்தாண்டையொட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் கடந்த 2 நாட்களாக பயணிகள் கூட்டம் அலை மோதி காணப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமை களை தீவிர பரிசோதனை செய்து அதன் பிறகு உள்ளே அனுமதித்தனர்.

    மேலும் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனையும் செய்தனர். மேலும் ரெயிலில் வந்த பயணிகள் உடைமை களையும் பரிசோதனை செய்தனர்.

    கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, மொடக்குறிச்சி,கொடுமுடி, சத்தியமங்கலம், பெருந்துறை என மாவட்ட முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. 

    • சத்துணவு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • காலிபணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

    ஈரோடு:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி தமிழகத்தில் இன்று சத்துணவு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் நடந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் சுப்புலட்சுமி, செல்வி, கவுரி, சாந்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    இந்த போராட்டத்தில் காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    சத்துணவு ஊழியர்களுக்கு அகவிலை படியுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும்.

    காலிபணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

    மணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம்மும், உதவியாள ர்களுக்கு ரூ.3 லட்சமும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    • துாத்துக்குடியில் இருந்து ஸ்பிக் நிறுவனம் மூலம் 720 டன் பாரத் யூரியா உரம் ரெயில் மூலம் ஈரோட்டுக்கு வந்தடைந்தது.
    • மேலும் திரவ உயிர் உரங்களும், வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் விற்பனைக்கு உள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தட ப்பள்ளி அரக்கன்கோட்டை, காளிங்கராயன் பாசன பகுதியில் சம்பா பாசனத்து க்காகவும், கீழ்பவானி, மேட்டூர் வலது கரை கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டு நெல் சாகுபடி பணிகள் நடக்கிறது.

    மேலும் கரும்பு, வாழை, மஞ்சள், மரவள்ளி, நிலக் கடலை, மக்காசோளம், எள் ஆகிய பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது.

    இந்நிலையில் துாத்து க்குடியில் இருந்து ஸ்பிக் நிறுவனம் மூலம் 720 டன் பாரத் யூரியா உரம், 195 டன் டி.ஏ.பி. உரம், 64 டன் சூப்பர் பாஸ்பேட் உரம் ஆகியவை ெரயில் மூலம் ஈரோட்டுக்கு வந்தடைந்தது.

    இதுபற்றி ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி கூறியதாவது:- ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் 4,438 டன், டி.ஏ.பி. 1,820 டன், பொட்டாஷ், 1,228 டன், காம்ப்ளக்ஸ், 10,364 டன், சூப்பர் பாஸ்பேட், 906 டன், தொடக்க வேளாண் கூட்டு றவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் திரவ உயிர் உரங்களும், வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் விற்பனைக்கு உள்ளன.

    ஈரோடு திண்டலில் உள்ள வேளாண்மை துறை யின் மண் பரிசோதனை நிலையத்தில் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து அவர்களது பரிந்துரைப்படி உரங்களை பயன்படுத்து வதன் மூலம் தேவையற்ற உரச்செலவை குறைக்கலாம்.

    இவ்வாறு கூறினார்.

    • மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் 4-வது முறையாக மீண்டும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • ஈரோடு மாவட்டத்தில் 8 முகாம்களில் 600 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்

    ஈரோடு, செப். 9-

    கர்நாடக மாநிலத்தில் மழை தீவிரமடைந்ததால் மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் 4-வது முறையாக மீண்டும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து ஈரோடு மாவட்ட காவிரி ஆற்றுக் கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் பவானி புதிய பஸ் நிலையம் கந்தன் நகர், காவிரி நகர், பசவேஸ்வரர் தெரு, மீனவர் தெரு, பழைய பாலம், கீரைக்கார வீதி, பாலக்கரை, பழைய பஸ் நிலையம் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த 400 -க்கும் மேற்பட்ட மக்கள் மீண்டும் அருகே உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கொடுமுடி காவிரி கரையோர பகுதிகளிலும் வெள்ளம் நீர் புகுந்தது.

    இதனால் கொடுமுடி அடுத்த இலுப்பு தோப்பு, சத்திரப்பட்டி போன்ற பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் இந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அருகில் இருக்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஈரோடு மாவட்டத்தில் 8 முகாம்களில் 600 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு குறைய தொடங்கியதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக இன்று மேட்டூர் அணையிலிருந்து 80 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

    எனினும் ஈரோடு காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 8 முகாம்களில் 600 பேர் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • அமைச்சர் முத்துசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • இதேபோல் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பவானி:

    கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ள நிலையில் தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் நேரடியாக காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

    வினாடிக்கு 1.85 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படு–வதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    இதே போல் அம்மாபேட்டையில் 10 -க்கும் மேற்பட்ட வீடுகள், ஈரோடு கருங்கல்பாளையம், காவிரி ஆற்றங்கரை பகுதியில் உள்ள வீடுகள், கொடுமுடியில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் என மாவட்டம் முழுவதும் 282-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த 343 குடும்பங்களை சேர்ந்த 1,056 பேர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டு–ள்ள 11 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீசார் இந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்டம் நிர்வாகம் சார்பில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஈரோடு மாநகராட்சி மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வார்டு 11- இல் மழை நீரினால் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. அதையும் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களையும் ஆய்வு செய்தார்.

    மேலும் காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரத் துறையின் மூலம் மருத்துவ உதவிகளை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    அமைச்சர் ஆய்வின்போது வருவாய்துறை, மின்சார துறை, தீயணைப்பு துறை உள்பட அனைத்து துறையினரும் உடன் இருந்தனர். துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெயக்குமாரும் உடன் இருந்தனர்.

    இதேபோல் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பவானி நகரில் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி உள்ள முகாமிற்கு சென்ற மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் பொதுமக்களுக்கு செய்யப் பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    இதேப்போல் கொடுமுடி பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    பவானி கந்தன் பட்டறை பகுதிக்கு கலெக்டர் கிருஷ்ணனு ண்ணி வருகை தந்து முகாமில் தங்கி இருந்த பொதுமக்களிடம் உணவு, இருப்பிட வசதி, மருத்துவ வசதி எவ்வாறு செய்யப்ப ட்டுள்ளது. தங்களுக்கு ஏதாவது குறைகள் உள்ளதா? என கேட்டறிந்தார்.

    பொதுமக்கள் வருவாய் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் சிறப்பான முறையில் பணிகள் செய்து வருவதாக பாராட்டினர். இதனைத் தொடர்ந்து பவானி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது உதவி கலெக்டர் மீனாட்சி, பவானி தாசில்தார் முத்து–கிருஷ்ணன், நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் உள்பட பல்வேறு துறை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது.
    • இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் போட்டுக் கொண்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் ஆலையை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

    இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. இன்று மட்டும் மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தன.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செய்து கொண்டனர்.

    குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இதனால் இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் போட்டுக் கொண்டனர். 

    • கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 156 ஆக உயர்ந்துள்ளது.
    • மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் நேற்று திடீரென மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது.

    நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 49 ஆக இருந்த நிலையில் நேற்று திடீரென 59 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மாவ ட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 156 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 53 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து O92 பேர் பாதிப்பில் இருந்து குண மடைந்து வீடு திரும்பியு ள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழ ந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    • சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீசார் உஷார்படுத்த ப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    • இதேபோல் ஈரோடு அருகே உள்ள காவிரி ரெயில் இரும்பு பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீசார் உஷார்படுத்த ப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தின விழா அமைதியாக நடைபெறும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாநகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    டவுன் டி.எஸ்.பி.ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் ஒவ்வொரு தங்கும் விடுதியாக சென்று சோதனை செய்தனர். விடுதியில் தங்கியுள்ள–வர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர். சமீபத்தில் யாரெல்லாம் புதிதாக விடுதியில் தங்கி உள்ளனர் என்ற விபரமும் கேட்டறிந்தனர். விடுதியில் யாரேனும் சந்தேகம் படும்படி இருந்தால் அது குறித்து உடனடியாக காவல்துறைக்கு காவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் விடுதிகளில் போலீசார் சோதனை செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் எல்லை பகுதியில் அமைந்துள்ள சத்தியமங்கலம் பண்ணாரி சோதனை சாவடி, தமிழக- கர்நாடக எல்லை பகுதியில் அமைந்துள்ள காரப்பள்ளம் சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்ட 24 மணி நேரமும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. இதுபோல் மாவட்டத்தில் 12 இடங்களில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்ப ட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் போலீசார் 24 மணி நேரமும் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். ரெயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்த ப்பட்டு பயணிகள் உடைமை தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதி க்கப்படுகிறது.

    இதேபோல் ஈரோடு அருகே உள்ள காவிரி ரெயில் இரும்பு பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுதந்திர தினத்தை வரவேற்கும் வகையில் ஈரோட்டில் பெரும்பாலும் வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் முன்பு தேசியக் கொடி ஏற்றப்பட்டு ள்ளது. ஈரோடு மாநகர் பகுதியில் முறை இல்லாமல் கீழ் நோக்கி தேசிய கொடி பலர் கட்டி வைத்திருந்தனர்.

    அதனை போலீசார் பார்த்து சரிசெய்து முறையாக கட்ட சொல்லி வலியுறுத்தினர்.

    • இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 745 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
    • இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். கடந்த சில நாட்களாக பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் தினசரி பாதிப்பு திடீரென சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 46 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் நேற்று 55 ஆக உயர்ந்துள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை

    1 லட்சத்து 34 ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 62 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 745 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 354 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ×