search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா தடுப்பூசி முகாம்"

    • 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது
    • ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை குமரி மாவட்டத்தில் 82 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியும் சுமார் 75 சதவீதம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இதே போல் முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் பூஸ்டர் தடுப்பூசி போடவில்லை.

    இதையடுத்து அவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வசதியாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்று மாவட்டம் முழுவதும் 1400 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் 50 இடங்களில் மெகா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வடிவீஸ்வரம், வடசேரி, தொல்லை விளை ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், வேப்பமூடு பூங்கா பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினார்கள்.

    இதேபோல் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரெயில் நிலையத்திலும் தடுப்பூசி போடப்பட்டது. கோவாக்சின், கோவிஷீல்டு 2 தடுப்பூசிகளும் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மெகா தடுப்பூசி முகாம்களில் கூட்டம் குறைவாக இருந்தது. இதையடுத்து தடுப்பூசி செலுத்த வந்தவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போடப்பட்டது. கன்னியாகுமரியிலும் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டது.

    வெளியூரில் இருந்த சுற்றுலா பயணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதே போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சித் பிரதிநிதிகள் உதவியுடன் தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்து விவரங்களை சேகரித்து தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது. மெகா தடுப்பூசி முகாமில் இன்று கூட்டம் குறைவாகவே இருந்தது. பூஸ்டர் தடுப்புச் செலுத்துவதற்கு இளைஞர்கள் இளம் பெண்கள் ஆர்வமாக வந்திருந்தனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த மெகா தடுப்பூசி முகாமில் மதியம் 1 மணி வரை சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தனர். தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.மாலை வரை தடுப்பூசி போடப்படும். ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்தி ரியில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் அனைவரும் உடனடியாக அந்தந்த பகுதிகளில் உள்ள மையங் களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளு மாறு கலெக்டர் அரவிந்த் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

    • சிறப்பு தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.
    • 2,681 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 98.99 சதவீதம் முதல் தவணையும், 78.13 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 88.59 சதவீதம் முதல் தவணையும், 74.98 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும், 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 90.02 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 65.81 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பூஸ்டர் தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 34-வது கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 1341 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.இந்த முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் போன்றவற்றில் நடைபெறுகிறது. இந்த பணிக்காக பல்வேறு துறைகளை சேர்ந்த 2,681 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். இதற்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாநகராட்சியில் 31 ஆயிரத்து 728 சிறார்கள், 42 ஆயிரத்து 300 இளம் சிறார்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 8 லட்சத்து 67 ஆயிரத்து 420 என மொத்தம் 9 லட்சத்து 41 ஆயிரத்து 508 பேர் உள்ளனர். இதுவரை 8 லட்சத்து 14 ஆயிரத்து 463 பேருக்கு முதல் தவணையும், 6 லட்சத்து 24 ஆயிரத்து 617 பேருக்கு 2-வது தவணையும், 53 ஆயிரத்து 257 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

    நாளை நடைபெறும் முகாமில் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியானது கொரோனா தடுப்பூசி 2-வது தவணை பெற்று 6 மாதம் அல்லது 28 வாரங்கள் நிறைவடைந்த சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த முகாமில் வழங்கப்படும். திருப்பூர் மாநகராட்சியில் 190 இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக பணியாளர்கள், தன்னார்வலர்கள் என 1,140 பேர் ஈடுபட உள்ளனர். இதற்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும்படி மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார். 

    • இன்று தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன
    • திண்டுக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் 2,950 இடங்களில் அமைக்கப்பட்டது. இதில் விடுபட்ட பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4ந் தேதி வரை 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசி 19,23,574 நபர்களுக்கும், 2-வது தவணை தடுப்பூசி 18,11,686 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இத்துடன் 1,23,027 நபர்களுக்கு 3-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனினும் மாவட்டத்தில் தற்போது வரை 2.5 லட்சம் நபர்கள் 2ம் தவணை செலுத்துவதற்குரிய தவணை தேதி கடந்த பின்னும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

    மேலும், மாவட்டம் முழுவதும் 11.8 லட்சம் நபர்கள் 3ம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான தவணை தேதி கடந்தும் செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர்.

    கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் 2-ம் தவணை செலுத்தாமல் விடுபட்டவர்கள் மற்றும் 3ம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்குரிய தவணை தேதி கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பொருட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

    திண்டுக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் 2,950 இடங்களில் அமைக்கப்பட்டது. இதில் விடுபட்ட பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொண்டு நோய்த்தொற்றின் கடுமையான பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

    • சென்னை மாநகராட்சியில் தலா ஒரு வார்டுக்கு 10 வீதம் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்த ஏற்பாடு.
    • பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் முகாம்களை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்.

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் விதமாக தமிழகத்தில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தலா ஒரு வார்டுக்கு 10 வீதம் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், ஈரோடு, மதுரை, கரூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கொரேனா தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றன.

    ஏற்கனவே 2 டோஸ் போட்டவர்களுக்கு 33-வது தடுப்பூசி முகாமில் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. அதனால், பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்திவுள்ளது.

    • மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
    • ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை என பல்வேறு இடங்களில் நடக்கிறது.

     கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:&

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 1,300 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

    காலை, 7 மணி முதல் மாலை, 7 மணி வரை நடக்கும் முகாமில், இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், இரண்டாவது தவணை செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் பயனடையும் வகையில் தடுப்பூசி முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகள், ஊராட்சி மற்றும் கிராம பகுதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை என பல்வேறு இடங்களில் நடக்கிறது.

    இந்த வாய்ப்பினை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதில், 12 வயத்திற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டியவர்களும் பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மெகா தடுப்பூசி முகாம்.
    • பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் விதமாக சென்னையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    இந்நிலையில், பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்திவுள்ளது.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 1059 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 2159 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.

    திருவள்ளுர் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 17 லட்சத்து 86 ஆயிரத்து 973 (94.6 சதவீதம்) பேருக்கும், இரண்டாம் தவணை 15 லட்சத்து 27 ஆயிரத்து 565 (80.9 சதவீதம்) பேருக்கும் என மொத்தம் 33 லட்சத்து14 ஆயிரத்து 538 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    இன்று மாவட்டத்தில் மொத்தம் 1100 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் கூறும்போது, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பெரிய தொழிற்சாலைகள், பெரிய வணிக வளாகங்கள், சிறு தொழில் கூடங்கள் உணவகங்கள் மற்றும் தொழிற்நுட்ப கூடங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுவரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை மற்றும் முன்எச்சரிக்கை தவணைக்கான தகுதி வாய்ந்த நபர்கள் கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்கு அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 1059 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    • 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    • 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது

    ராணிப்பேட்டை:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    முன்னதாக தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம் தோறும் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 850 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 105.6 சதவீதம், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 105.02 சதவீதம் ஆகும்
    • 18 முதல் 59 வயது வரையுள்ள அனைவரும் இலவசமாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 105.6 சதவீதம், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 105.02 சதவீதம் ஆகும். 15-18 வயதிற்கு உட்பட்டோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 100.91 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசிசெலுத்திக் கொண்டவர்கள் 88.51 சதவீதம் ஆகும்.

    12-14 வயதிற்கு உட்பட்டோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 111.14 சதவீதம். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 80.14 சதவீதம் ஆகும்.

    இதுவரை மொத்தமாக முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 103.09 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 100.7 சதவீதம் ஆகும். கர்ப்பிணி பெண்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 102 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 99 சதவீதம் ஆகும்.

    பாலூட்டும் தாய்மார்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 102 சதவீதம். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 98 சதவீதம் முன்களப்பணியாளர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 109 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 60 சதவீதம் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் 45சதவீதம் சுகாதாரப் பணியாளர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 111 சதவீதம்.

    இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 65 சதவீதம் நமது மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    15.01.2022 தேதிக்குள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள்.

    எனவே, 18 முதல் 59 வயது வரையுள்ள அனைவரும் இலவசமாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சங்கராபுரம் அருகே சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • முகாமில் 19 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சாா்பில் 2-வது தவணை செலுத்தி 6 மாதம் முடிந்த தகுதியுடைய அனை வருக்கும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. பேரூராட்சி மன்றதலைவர் ரோஜாரமணிதாகப்பிள்னள தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செங்குட்டுவன், பேரூராட்சி துணைத் தலைவர் ஆஷாபி ஜாகிர்உசேன் ஆகியோர் முன்னிலையில் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாசில், ராமச்சந்திரன், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதே போன்று தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சாா்பில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி வரவேற்றார். முகாமில் 19 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.

    • தேனி மாவட்டம் முழுவதும் 31-வது கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.
    • கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்து முககவசம் அணியவும் வலியுறுத்தினார்.

    தேனி:

    கொரோனா நோய்த் தொற்று பரவுதலை தடுத்திடும் பொருட்டு, தமிழக அரசின் வழிக்காட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்திடும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    பொது மக்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடை பிடிக்காமல் அரசு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாமல் உள்ளதால் தற்போது கடந்த சில தினங்களாக கொரோனா நோய்த் தொற்றின் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கொரோனா தொற்றினை கட்டுப்படுத்திட தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிப்பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத, விடுபட்ட நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் இன்று மாவட்டம் முழுவதும் 31-வது கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.

    தேனி நாடார் சரஸ்வதி பாலார் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார். அங்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த பொதுமக்களிடம் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்பத்டுதினார். மேலும் பொது இடங்களில் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    • விழுப்புரம் மாவட்டத்தில் 2,033 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது.
    • விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோரில் முதல் தவணையாக 1811530 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 1807593 நபர்களுக்கும் மற்றும் ஊக்குவிப்பு தவணையாக 15759 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கலெக்டர் மோகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:- இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 5 மாத இடை வெளிக்குப்பின் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதி கரித்து வருகிறது. ஜனவரி 2021 முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்ட–த்தில் கொரோனா தடுப்பூசி 16.1.2021 முதல் ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கும், 26.2.2021 முதல் முன்கள–ப்பணி யாளர்களுக்கும், 1.3.2021 முதல் 45 வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கும், 20.5.2021 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கும், 3.1.2022 முதல் 15 வயதிலிருந்து 17 வயதிற்குட்பட்ட வர்களுக்கும், 16.3.2022 முதல் 12 வயதிலிருந்து 14 வயதிற் குட்பட்டவர்கள் என படிப்படியாக அனை வருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

    இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோரில் முதல் தவணையாக 1811530 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 1807593 நபர்களுக்கும் மற்றும் ஊக்குவிப்பு தவணையாக 15759 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 2-ம் தவணை செலுத்திய பிறகு 9 மாதங்கள் கடந்த முன்களப்பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற இணைநோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஊக்குவிப்பு தவணை செலுத்தி கொரோனா நோய்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் அவர் களின் வழிகாட்டுதலின் படி, சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி வருகிற 12.6.2022 அன்று நமத மாவட்டத்தில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் 2033 இடங்களில் நடத்தப்பட வுள்ளது. முதல் தவணை, 2-ம் தவணை மற்றும் ஊக்குவிப்பு தவணை வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    கொரோனா உயிரிழப்ப–பைத் தடுக்க நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் கொரோனா தடுப்பூசி ஆகும். 12.6.2022 அன்று நடைபெறும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களில் கொரானா வழிகாட்டு நெறி முறைகளைப் பின்பற்றி கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீள கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு விழுப்புரம் மாவட்ட கலெக்ர் மோகன் தெரிவித்துக் கொண்டார்.

    ×