search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "corona Vaccination Camp"

    • பூஸ்டர் தடுப்பூசியை மிகவும் குறைவான நபா்களே செலுத்திக் கொண்டுள்ளனா்.
    • மெகா ெகாரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    கோவை:

    ெகாரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் முதன்மை ஆயுதமாக இருந்து வரும் ெகாரோனா தடுப்பூசி அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் 2021 செப்டம்பா் முதல் மெகா ெகாரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    ஆரம்பத்தில் வாரம்தோறும் நடத்தப்பட்டு வந்த மெகா தடுப்பூசி முகாம் கடந்த சில மாதங்களாக மாதத்துக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.இந்நிலையில், தமிழகம் முழுவதும் 36-வது ெகாரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது.

    கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 1,081 மையங்கள், மாநகராட்சியில் 340 மையங்கள், நகராட்சிகளில் 109 மையங்கள் என மொத்தமாக 1,530 மையங்களில் மெகா ெகாரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    இதில் முதல், 2-வது மற்றும் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

    கோவை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 99 சதவீதத்துக்கு மேற்பட்டவா்களும், 2-வது தவணை தடுப்பூசிகளையும் 98 சதவீதத்துக்கு மேற்பட்டவா்களும் செலுத்திக் கொண்டுள்ளனா். ஆனால், பூஸ்டர் தடுப்பூசியை மிகவும் குறைவான நபா்களே செலுத்திக் கொண்டுள்ளனா். எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மெகா ெகாரோனா தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். செப்டம்பா் 30-ந் தேதி வரை மட்டுமே 18 முதல் 59 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு பூஸ்டர் ெகாரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்பதால் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை துணை இயக்குனர் அருணா தெரிவித்துள்ளாா்.

    • 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது.
    • இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் போட்டுக் கொண்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் ஆலையை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

    இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. இன்று மட்டும் மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தன.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செய்து கொண்டனர்.

    குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இதனால் இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் போட்டுக் கொண்டனர். 

    • சிறப்பு தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.
    • 2,681 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 98.99 சதவீதம் முதல் தவணையும், 78.13 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 88.59 சதவீதம் முதல் தவணையும், 74.98 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும், 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 90.02 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 65.81 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பூஸ்டர் தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 34-வது கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 1341 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.இந்த முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் போன்றவற்றில் நடைபெறுகிறது. இந்த பணிக்காக பல்வேறு துறைகளை சேர்ந்த 2,681 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். இதற்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாநகராட்சியில் 31 ஆயிரத்து 728 சிறார்கள், 42 ஆயிரத்து 300 இளம் சிறார்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 8 லட்சத்து 67 ஆயிரத்து 420 என மொத்தம் 9 லட்சத்து 41 ஆயிரத்து 508 பேர் உள்ளனர். இதுவரை 8 லட்சத்து 14 ஆயிரத்து 463 பேருக்கு முதல் தவணையும், 6 லட்சத்து 24 ஆயிரத்து 617 பேருக்கு 2-வது தவணையும், 53 ஆயிரத்து 257 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

    நாளை நடைபெறும் முகாமில் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியானது கொரோனா தடுப்பூசி 2-வது தவணை பெற்று 6 மாதம் அல்லது 28 வாரங்கள் நிறைவடைந்த சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த முகாமில் வழங்கப்படும். திருப்பூர் மாநகராட்சியில் 190 இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக பணியாளர்கள், தன்னார்வலர்கள் என 1,140 பேர் ஈடுபட உள்ளனர். இதற்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும்படி மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார். 

    • இன்று தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன
    • திண்டுக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் 2,950 இடங்களில் அமைக்கப்பட்டது. இதில் விடுபட்ட பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4ந் தேதி வரை 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசி 19,23,574 நபர்களுக்கும், 2-வது தவணை தடுப்பூசி 18,11,686 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இத்துடன் 1,23,027 நபர்களுக்கு 3-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனினும் மாவட்டத்தில் தற்போது வரை 2.5 லட்சம் நபர்கள் 2ம் தவணை செலுத்துவதற்குரிய தவணை தேதி கடந்த பின்னும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

    மேலும், மாவட்டம் முழுவதும் 11.8 லட்சம் நபர்கள் 3ம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான தவணை தேதி கடந்தும் செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர்.

    கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் 2-ம் தவணை செலுத்தாமல் விடுபட்டவர்கள் மற்றும் 3ம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்குரிய தவணை தேதி கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பொருட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

    திண்டுக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் 2,950 இடங்களில் அமைக்கப்பட்டது. இதில் விடுபட்ட பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொண்டு நோய்த்தொற்றின் கடுமையான பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

    • சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மெகா தடுப்பூசி முகாம்.
    • பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் விதமாக சென்னையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    இந்நிலையில், பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்திவுள்ளது.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 1059 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 2159 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.

    திருவள்ளுர் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 17 லட்சத்து 86 ஆயிரத்து 973 (94.6 சதவீதம்) பேருக்கும், இரண்டாம் தவணை 15 லட்சத்து 27 ஆயிரத்து 565 (80.9 சதவீதம்) பேருக்கும் என மொத்தம் 33 லட்சத்து14 ஆயிரத்து 538 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    இன்று மாவட்டத்தில் மொத்தம் 1100 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் கூறும்போது, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பெரிய தொழிற்சாலைகள், பெரிய வணிக வளாகங்கள், சிறு தொழில் கூடங்கள் உணவகங்கள் மற்றும் தொழிற்நுட்ப கூடங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுவரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை மற்றும் முன்எச்சரிக்கை தவணைக்கான தகுதி வாய்ந்த நபர்கள் கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்கு அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 1059 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    • 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    • 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது

    ராணிப்பேட்டை:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    முன்னதாக தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம் தோறும் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 850 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 105.6 சதவீதம், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 105.02 சதவீதம் ஆகும்
    • 18 முதல் 59 வயது வரையுள்ள அனைவரும் இலவசமாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 105.6 சதவீதம், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 105.02 சதவீதம் ஆகும். 15-18 வயதிற்கு உட்பட்டோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 100.91 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசிசெலுத்திக் கொண்டவர்கள் 88.51 சதவீதம் ஆகும்.

    12-14 வயதிற்கு உட்பட்டோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 111.14 சதவீதம். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 80.14 சதவீதம் ஆகும்.

    இதுவரை மொத்தமாக முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 103.09 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 100.7 சதவீதம் ஆகும். கர்ப்பிணி பெண்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 102 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 99 சதவீதம் ஆகும்.

    பாலூட்டும் தாய்மார்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 102 சதவீதம். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 98 சதவீதம் முன்களப்பணியாளர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 109 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 60 சதவீதம் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் 45சதவீதம் சுகாதாரப் பணியாளர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 111 சதவீதம்.

    இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 65 சதவீதம் நமது மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    15.01.2022 தேதிக்குள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள்.

    எனவே, 18 முதல் 59 வயது வரையுள்ள அனைவரும் இலவசமாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சங்கராபுரம் அருகே சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • முகாமில் 19 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சாா்பில் 2-வது தவணை செலுத்தி 6 மாதம் முடிந்த தகுதியுடைய அனை வருக்கும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. பேரூராட்சி மன்றதலைவர் ரோஜாரமணிதாகப்பிள்னள தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செங்குட்டுவன், பேரூராட்சி துணைத் தலைவர் ஆஷாபி ஜாகிர்உசேன் ஆகியோர் முன்னிலையில் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாசில், ராமச்சந்திரன், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதே போன்று தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சாா்பில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி வரவேற்றார். முகாமில் 19 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.

    • ஈரோடு மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வில்லை.
    • இன்று மட்டும் மாவட்டத்தில்1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4-ம் அலையை தடுக்கும் வகையில் இன்று 31-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை நடந்து முடிந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் பல லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு ள்ளனர். இன்னமும் ஈரோடு மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வில்லை.

    இந்நிலையில் இன்று காலை தடுப்பூசி முகாம் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் உள்பட 3194 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    இதில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் 60 வயது கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

    இன்று மட்டும் மாவட்டத்தில்1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பணிக்காக மாவட்டம் முழுவதும் 4260 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    71 வாகனங்கள் முகாமிற்கு பயன்பட்டு வருகிறது. எனினும் பெரும்பாலான மையங்களில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    • கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தாமல் விடுபட்ட நபர்களுக்கு இன்று தமிழகம் முழுவதும் 1 லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.
    • திண்டுக்கல்லில் நடத்தப்பட்ட முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று 3ம் அலைக்குப் பிறகு குறைந்து வந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக மீண்டும் அதிகரித்து, தற்போது நாளொன்றுக்கு 2500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்ப டுகின்றனர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்திலும் கடந்த ஒருவாரமாக தொற்று அதிகரித்து வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 3 லட்சம் நபர்கள் 2-ம் தவணை செலு த்துவதற்குரிய தவணை தேதி கடந்த பின்னும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இதில் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 16,000 சிறார்கள் மற்றும் 12 முதல் 14 வயதிற்குட்பட்ட 15,000 சிறார்கள் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தி க்கொள்ளாமல் உள்ளனர்.

    மேலும் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 16,000 சிறார்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி க்கொள்ளாமல் உள்ளனர். மேலும் மாவட்டம் முழு வதும் 2.5 லட்சம் நபர்கள் முன்னெச்சரிக்கை செலுத்து வதற்கான தவணை தேதி கடந்தும் செலுத்தி க்கொள்ளாமல் உள்ளனர்.

    கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தாமல் விடுபட்ட நபர்களுக்கு இன்று தமிழகம் முழுவதும் 1 லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

    2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திகொள்ள வேண்டும். மேலும் பொதுஇடங்களுக்கு வரும் போது முககவசம் அணிந்தும், சமூகஇைடவெளியை பின்பற்றவும் டாக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ×