search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "started today"

    • மே 9-ந் தேதி முதல் நேற்று வரை பிளஸ்-1 சேர்க்கைக்கு விண்ணப்பம் பெறப்பட்டது.
    • மாணவர்களின் தரவரிசை பட்டியல், நேர்காணல் தேதி அந்தந்த அரசு பள்ளிகளில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை, காரைக்காலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மே 9-ந் தேதி முதல் நேற்று வரை பிளஸ்-1 சேர்க்கைக்கு விண்ணப்பம் பெறப்பட்டது.

     10-ம் வகுப்பில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல், நேர்காணல் தேதி அந்தந்த அரசு பள்ளிகளில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இன்று பிளஸ்-1 சேர்க்கைக்கு கலந்தாய்வு தொடங்கியது.

    கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், குடியுரிமை சான்றிதழுடன் பெற்றோரை அழைத்து வந்திருந்தனர். மாணவர்கள் விருப்பப்படி அந்தந்த பள்ளிகளில் இடம் வழங்கப்பட்டது.

    கலந்தாய்வு முடிவில் மீதமுள்ள இடங்கள் இட ஒதுக்கீடு வாரியாக அறிவிப்பு பலகையில் இன்று மாலை ஒட்டப்படும்.  அரசு உதவி பெறும் பள்ளி மாண வர்களுக்கு தரவரிசை பட்டியல் ஒட்டப்பட்டு 15-ந் தேதி கலந்தாய்வு நடத்தப்படு கிறது.

    16-ந் தேதி தனியார் பள்ளி மாணவர்கள் தரவரிசை பட்டியல் ஒட்டப்பட்டு 17-ந் தேதி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. பிளஸ்-1 சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு வருகிற 19-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்குகிறது.

    • 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது.
    • இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் போட்டுக் கொண்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் ஆலையை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

    இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. இன்று மட்டும் மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தன.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செய்து கொண்டனர்.

    குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இதனால் இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் போட்டுக் கொண்டனர். 

    ×