என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பிளஸ்-1 மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கியது
- மே 9-ந் தேதி முதல் நேற்று வரை பிளஸ்-1 சேர்க்கைக்கு விண்ணப்பம் பெறப்பட்டது.
- மாணவர்களின் தரவரிசை பட்டியல், நேர்காணல் தேதி அந்தந்த அரசு பள்ளிகளில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை, காரைக்காலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மே 9-ந் தேதி முதல் நேற்று வரை பிளஸ்-1 சேர்க்கைக்கு விண்ணப்பம் பெறப்பட்டது.
10-ம் வகுப்பில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல், நேர்காணல் தேதி அந்தந்த அரசு பள்ளிகளில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இன்று பிளஸ்-1 சேர்க்கைக்கு கலந்தாய்வு தொடங்கியது.
கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், குடியுரிமை சான்றிதழுடன் பெற்றோரை அழைத்து வந்திருந்தனர். மாணவர்கள் விருப்பப்படி அந்தந்த பள்ளிகளில் இடம் வழங்கப்பட்டது.
கலந்தாய்வு முடிவில் மீதமுள்ள இடங்கள் இட ஒதுக்கீடு வாரியாக அறிவிப்பு பலகையில் இன்று மாலை ஒட்டப்படும். அரசு உதவி பெறும் பள்ளி மாண வர்களுக்கு தரவரிசை பட்டியல் ஒட்டப்பட்டு 15-ந் தேதி கலந்தாய்வு நடத்தப்படு கிறது.
16-ந் தேதி தனியார் பள்ளி மாணவர்கள் தரவரிசை பட்டியல் ஒட்டப்பட்டு 17-ந் தேதி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. பிளஸ்-1 சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு வருகிற 19-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்குகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்