search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பிளஸ்-1 மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கியது
    X

    புதுவை திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலந்தாய்வில் பங்கேற்க பெற்றோருடன் மாணவிகள் வந்திருந்த காட்சி.

    பிளஸ்-1 மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கியது

    • மே 9-ந் தேதி முதல் நேற்று வரை பிளஸ்-1 சேர்க்கைக்கு விண்ணப்பம் பெறப்பட்டது.
    • மாணவர்களின் தரவரிசை பட்டியல், நேர்காணல் தேதி அந்தந்த அரசு பள்ளிகளில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை, காரைக்காலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மே 9-ந் தேதி முதல் நேற்று வரை பிளஸ்-1 சேர்க்கைக்கு விண்ணப்பம் பெறப்பட்டது.

    10-ம் வகுப்பில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல், நேர்காணல் தேதி அந்தந்த அரசு பள்ளிகளில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இன்று பிளஸ்-1 சேர்க்கைக்கு கலந்தாய்வு தொடங்கியது.

    கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், குடியுரிமை சான்றிதழுடன் பெற்றோரை அழைத்து வந்திருந்தனர். மாணவர்கள் விருப்பப்படி அந்தந்த பள்ளிகளில் இடம் வழங்கப்பட்டது.

    கலந்தாய்வு முடிவில் மீதமுள்ள இடங்கள் இட ஒதுக்கீடு வாரியாக அறிவிப்பு பலகையில் இன்று மாலை ஒட்டப்படும். அரசு உதவி பெறும் பள்ளி மாண வர்களுக்கு தரவரிசை பட்டியல் ஒட்டப்பட்டு 15-ந் தேதி கலந்தாய்வு நடத்தப்படு கிறது.

    16-ந் தேதி தனியார் பள்ளி மாணவர்கள் தரவரிசை பட்டியல் ஒட்டப்பட்டு 17-ந் தேதி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. பிளஸ்-1 சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு வருகிற 19-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்குகிறது.

    Next Story
    ×